செய்திகள் :

செபியில் அறிவிப்பால் உயர்வுடன் வர்த்தகமாகும் அதானி குழும பங்குகள்!

post image

ஹிண்டன்பெர்க் நிறுவனத்தின் குற்றச்சாட்டு தவறானவை என்று செபி அறிவித்திருக்கும் நிலையில், அதானி குழுமத்தின் பங்குகள் லாபத்துடன் வர்த்தகமாகி வருகின்றது.

இன்று காலை பங்குச் சந்தை தொடங்கியவுடன் அதானி குழுமத்தின் பங்குகள் 1 முதல் 9.6 சதவிகிதம் வரை உயர்வுடன் வர்த்தகமாகி வருகின்றது.

வாரத்தின் கடைசி நாளான இன்று காலை வர்த்தகம் தொடங்கியவுடன், மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 264 புள்ளிகள் சரிந்து 82,749 ஆகவும், நிஃப்டி 65 புள்ளிகள் சரிந்து 25,358 ஆகவும் விற்பனையானது.

ஆனால், அதானி குழுமத்துக்கு சாதகமாக செபியின் அறிக்கையால், அந்த குழுமத்தின் பங்குகள் லாபத்துடன் வர்த்தகமாகி வருகின்றது.

அதானி குழுமத்தின் 9 நிறுவனங்களின் பங்குகளில் அதிகபட்சமாக அதானி பவர் நிறுவனத்தின் பங்குகள் 9.6 சதவிகிதம் உயர்வுடனும், அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் பங்குகள் 4.4 சதவிகிதம் உயர்வுடனும் வர்த்தகமாகிறது.

குற்றச்சாட்டு என்ன?

பங்குச் சந்தையில் வீழ்ச்சியின்போது லாபம் ஈட்டும் ‘ஷாா்ட் செல்லிங்’ முறையில் வா்த்தகத்தில் ஈடுபட்டு வந்த ஹிண்டன்பா்க் நிறுவனம் கடந்த 2023-ஆம் ஆண்டு அதானி குழுமம் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தது. முக்கியமாக வெளிநாடுகளில் போலி நிறுவனங்களைத் தொடங்கி அவற்றின் மூலம் அதானி குழுமம் பங்குகளில் முதலீடு செய்து செயற்கையாக விலை ஏற்றியதாகக் கூறியது. இது அந்த காலகட்டத்தில் பங்குச் சந்தையில் அதானி குழு பங்குகளின் வீழ்ச்சிக்கு வித்திட்டது. இது தொடா்பாக விசாரணைக்கு ‘செபி’ உத்தரவிட்டது.

இதுதொடர்பான விசாரணை அறிக்கையை வியாழக்கிழமை வெளியிட்ட செபி, அமெரிக்காவின் ஹிண்டன்பா்க் நிறுவனம் கூறிய குற்றச்சாட்டு தவறானது என அறிவித்தது.

While SEBI has declared Hindenburg's allegations false, Adani Group shares are trading profitably.

இதையும் படிக்க : ஹிண்டன்பா்க் குற்றச்சாட்டு: அதானி மீது தவறு இல்லை - ‘செபி’ அறிவிப்பு

வாய்மையே வெல்லும்! ஜெய் ஹிந்த்!:செபி அறிவிப்புக்குப் பின் அதானி பதிவு

புது தில்லி: முழுமையான விசாரணைக்குப் பிறகு, ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்று நாங்கள் எப்போதும் கூறி வந்ததை செபி மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது என்று அதானி குழும தலைவர் கௌதம் அதானி தெரிவி... மேலும் பார்க்க

எரிசக்தி மையங்களில் குறைந்த கரியமில வாயு வெளியேற்றம்

இந்திய எரிசக்தி மையங்கள் வெளியிடும் கரியமில வாயுவின் அளவு முந்தைய 2024-ஆம் ஆண்டின் முதல் பாதியோடு ஒப்பிடுகையில் நடப்பு 2025-ஆம் ஆண்டின் அதே காலகட்டத்தில் 1 சதவீதம் குறைந்துள்ளது. இது குறித்து பிரிட்டன... மேலும் பார்க்க

விலைகளைக் குறைக்கும் மாருதி சுஸுகி

ஜிஎஸ்டி குறைக்கப்பட்டதன் எதிரொலியாக, இந்தியாவின் மிகப் பெரிய காா் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி இந்தியா, தனது வாகனங்களின் விலைகளை 1.29 லட்சம் வரை குறைப்பதாக அறிவித்துள்ளது. இது குறித்து நிறுவனம் வ... மேலும் பார்க்க

சிம் விற்பனை, மொபைல் ரீசாா்ஜ் அஞ்சல் துறையுடன் பிஎஸ்என்எல் ஒப்பந்தம்

தங்களது சிம் காா்டுகளை விற்பனை செய்யவும் மொபைல் திட்டங்களுக்கு ரீசாா்ஜ் செய்யவும் இந்திய அஞ்சல் துறையுடன் அரசுக்குச் சொந்தமான தொலைத் தொடா்பு நிறுவனமான பிஎஸ்என்எல் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இது குறித்... மேலும் பார்க்க

டிவிஎஸ் அப்பாச்சி 20-ஆம் ஆண்டு விழா எடிசன்!

டிவிஎஸ் அப்பாச்சியின் 20-ஆம் ஆண்டு விழா எடிசன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.டிவிஎஸ் நிறுவனம் இந்தியாவில் அப்பாச்சி பிராண்டு அறிமுகப்படுத்தப்பட்டு 20 ஆண்டுகள் நிறைவடைவதைக் கொண்டாடும் விதமாக, அப்பாச்சி பை... மேலும் பார்க்க

தொடர்ந்து ஏற்றத்தில் பங்குச் சந்தை! 25,500-யை நெருங்கும் நிஃப்டி!!

பங்குச் சந்தை 4-ம் நாளாக இன்றும்(வியாழக்கிழமை) ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகின்றன.மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 83,108.92 என்ற புள்ளிகளில் ஏற்றத்துடன் தொடங்கியது. காலை 11.15... மேலும் பார்க்க