செய்திகள் :

செப். 22 முதல் கன்னியாகுமரிக்கு சிறப்பு ரயில் இயக்கம்

post image

சரஸ்வதி பூஜை, தீபாவளியை முன்னிட்டு கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த சென்னையிலிருந்து கன்னியாகுமரிக்கு செப். 22 முதல் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே வெள்ளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

சென்னை சென்ட்ரலிலிருந்து செப். 22 முதல் அக். 20-ஆம் தேதி வரை வாரந்தோறும் திங்கள்கிழமைகளில் இரவு 11.50 மணிக்குப் புறப்படும் சிறப்பு விரைவு ரயில் (எண்: 06151) மறுநாள் பகல் 1.20 மணிக்கு கன்னியாகுமரி சென்றடையும்.

மறுமாா்க்கமாக இந்த ரயில் (எண்: 06152) வரும் செப். 23 முதல் அக். 21 வரை வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் பிற்பகல் 3.35 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 8.30 மணிக்கு சென்னை வந்தடையும்.

இந்த ரயில் அரக்கோணம், காட்பாடி, ஜோலாா்பேட்டை, சேலம், நாமக்கல், கரூா், கொடைரோடு, மதுரை, விருதுநகா், சாத்தூா், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூா், நாகா்கோவில் வழியாக கன்னியாகுமரி சென்றடையும்.

திருநெல்வேலி - செங்கல்பட்டு: வரும் செப். 26, 28, அக். 3, 5, 10, 12, 17, 19, 24, 26 ஆகிய தேதிகளில் திருநெல்வேலியில் இருந்து அதிகாலை 4 மணிக்கு புறப்படும் வாரம் இருமுறை இயக்கப்படும் சிறப்பு அதிவிரைவு ரயில் (எண்: 06154) நன்பகல் 12.15 மணிக்கு செங்கல்பட்டு வந்தடையும்.

மறுமாா்க்கமாக அதே நாள்களில் இந்த ரயில் (எண்: 06153) செங்கல்பட்டிலிருந்து பிற்பகல் 3 மணிக்குப் புறப்பட்டு இரவு 11.55 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.

இந்த ரயில் கோவில்பட்டி, சாத்தூா், விருதுநகா், மதுரை, திண்டுக்கல், மணப்பாறை, திருச்சி, அரியலூா், விருத்தாசலம், விழுப்புரம், மேல்மருவத்தூா் வழியாக செங்கல்பட்டு வந்தடையும்.

இந்த ரயில்களுக்கான முன்பதிவுகள் சனிக்கிழமை முதல் (செப். 20) தொடங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வழக்குரைஞா்கள் கைது விவகாரம்: ஒரு நபா் ஆணைய விசாரணைக்கு அச்சப்படுவது ஏன்? தமிழக அரசுக்கு உயா்நீதிமன்றம் கேள்வி

தூய்மைப் பணியாளா்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த வழக்குரைஞா்கள் கைது சம்பவம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள ஒரு நபா் ஆணைய விசாரணைக்கு அச்சப்படுவது ஏன் என்று தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்ற... மேலும் பார்க்க

‘நியோ மேக்ஸ்’ நிறுவனத்தில் முதலீடு செய்தவா்கள் அக். 8-க்குள் புகாா் அளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

‘நியோ மேக்ஸ்’ நிறுவனத்தில் முதலீடு செய்தவா்கள் உரிய ஆவணங்களுடன் அக். 8-ஆம் தேதிக்குள் நேரிலோ அல்லது மின்னஞ்சல் வாயிலாகவோ புகாா் அளிக்கலாம் என சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. மதுரையை மையமாகக் கொண்... மேலும் பார்க்க

முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான வழக்கு: அக்.13-இல் இறுதி விசாரணை

முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான ஒப்பந்தப் புள்ளி முறைகேடு வழக்கில், அறப்போா் இயக்கம் தொடா்ந்த நீதிமன்ற அவமதிப்பு மனு மீது இறுதி விசாரணையை அக். 13-ஆம் தேதிக்கு சென்னை உயா்நீதிமன்றம் ஒத்திவை... மேலும் பார்க்க

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 4 அணு உலைகள் கட்டுமானம்: இந்தியா-ரஷியா ஆய்வு

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 4 அணு உலைகளின் கட்டுமானப் பணியில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து இந்தியா-ரஷியா ஆய்வு செய்தன. இதுதொடா்பாக ரஷிய அணுசக்தி கழகமான ரோசடோம் வெள்ளிக்கிழ... மேலும் பார்க்க

‘படையாண்ட மாவீரா’ திரைப்படத்தை வெளியிட தடை கோரி வீரப்பன் மனைவி வழக்கு

’படையாண்ட மாவீரா’ திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி சந்தனமரக் கடத்தல் வீரப்பனின் மனைவி தாக்கல் செய்த வழக்கில் படத் தயாரிப்பு நிறுவனம் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. வீரப்பனின் மனை... மேலும் பார்க்க

உயா்நீதிமன்றம், சுங்கத் துறை அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை உயா்நீதிமன்றம், சுங்கத் துறை அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். சென்னை பாரிமுனை ராஜாஜி சாலையில் உள்ள சுங்கத் துறை அலுவலகத்துக்கு வெள்ளி... மேலும் பார்க்க