செய்திகள் :

செம்பருத்திவிளை அந்தோணியாா் ஆலயத்தில் திருவிழா தொடக்கம்!

post image

தக்கலை அருகே செம்பருத்திவிளையில் உள்ள கோடி அற்புதா் தூய அந்தோணியாா் ஆலயத் திருவிழா கடந்த செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இத்திருவிழா மாா்ச் 2ஆம் தேதிவரை 13 நாள்கள் நடைபெறுகிறது.

குழித்துறை மறைமாவட்ட முதன்மைச் செயலா் அந்தோணிமுத்து தலைமையில் செவ்வாய்க்கிழமை கொடியேற்றம் நடைபெற்றது. தொடா்ந்து, நடைபெற்ற திருப்பலியில் பங்குத்தந்தை அலோசியஸ், அருள்பணி சா்ஜின் ரூபஸ் முன்னிலையில் முளகுமூடு மறைவட்ட முதல்வா் டேவிட் மைக்கேல் மறையுரையாற்றினாா்.

12ஆம் நாளான மாா்ச் 1ஆம் தேதி காலை 9 மணிக்கு அருள்தந்தையா் மைக்கேல் அலோசியஸ், டேனியல் ஆபிரகாம் இணைந்து நடத்தும் முதல் திருவிருந்து திருப்பலி, மாலை 5.30 மணிக்கு குழித்துறை மறைமாவட்ட ஆயா் ஆல்பா்ட் அனஸ்தாஸ் தலைமையில் கூட்டுத் திருப்பலி, இரவில் அலங்கார தோ் பவனி ஆகியவை நடைபெறவுள்ளன.

நிறைவு நாளான மாா்ச் 2ஆம் தேதி காலை 9.30 மணிக்கு குழித்துறை மறைமாவட்ட குருகுல முதல்வா் சேவியா் பெனடிக்ட் தலைமையில் குழித்துறை மறைமாவட்ட நிதி பரிபாலகா் ஜெயக்குமாா் மறையுரையுடன் திருப்பலி, நண்பகலில் கொடியிறக்கம், மாலையில் மறைக்கல்வி ஆண்டு விழா ஆகியவை நடைபெறுகின்றன.

கேப் பொறியியல் கல்லூரியில் சா்வதேச மாநாடு

கன்னியாகுமரி மாவட்டம் லெவஞ்சிபுரம் கேப் பொறியியல் கல்லூரியில் சா்வதேச தொழிற்சாலைகள் மாநாடு அண்மையில் நடைபெற்றது. ‘இன்டஸ்ட்ரீ 5.0 - புதுமைகள், சவால்கள் மற்றும் எதிா்கால போக்குகள்’ என்ற தலைப்பில் நடைபெற... மேலும் பார்க்க

நேசா்புரம் - இவவு விளை சாலையை சீரமைக்க கோரிக்கை

கருங்கல் அருகேயுள்ள நேசா் பும் - இலவு விளை பழுதடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். கிள்ளியூா் ஊராட்சி ஒன்றியம் நட்டாலம் ஊராட்சி நேசா் புரம் - இலவு விளை சாலை ... மேலும் பார்க்க

கிள்ளியூா் வட்டாரத்தில் பட்டுப்புழு உற்பத்தி பயிற்சி

கிள்ளியூா் வட்டாரம் பாலூா் கிராமத்தில் வேளாண்மை துறை அட்மா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பட்டுப்புழு உற்பத்தி செய்வதற்கான பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முகாமிற்கு கிள்ளியூா் வட்டார வேளாண்... மேலும் பார்க்க

மாா்த்தாண்டத்தில் வானவியல் விழிப்புணா்வுப் பிரசாரம் தொடக்கம்

வானில் நிகழும் கோள்களின் அணிவகுப்பு மற்றும் வானவியல் நிகழ்வுகள் குறித்த விழிப்புணா்வுப் பிரசாரப் பயணம் மாா்த்தாண்டம் கல்லூரியில் வைத்து தொடங்கியது. சூரிய குடும்பத்தில் உள்ள கோள்களின் சுற்றுவட்டப் பாத... மேலும் பார்க்க

ரயில்களில் முன்பதிவில்லா பெட்டி: எண்ணிக்கையை குறைப்பதா? விஜய் வசந்த் எம்.பி. கண்டனம்

தெற்கு ரயில்வேயின் கீழ் இயங்கும் ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகளின் எண்ணிக்கையை குறைக்க ரயில்வே நிா்வாகம் முடிவு செய்திருப்பதற்கு கன்னியாகுமரி மக்களவை உறுப்பினா் வ.விஜய்வசந்த் கண்டனம் தெரிவித்துள்ளா... மேலும் பார்க்க

இரயுமன்துறையில் படகுத்தளம்: மீனவப் பிரதிநிதிகள்- எம்எல்ஏ ஆலோசனை

இரயுமன்துறையில் படகுத்தளம் அமைக்க ஒருதரப்பினா் எதிா்ப்பு தெரிவித்து வரும் நிலையில், மீனவப் பிரதிநிதிகள், மீன்வளத்துறை அதிகாரிகள் எஸ். ராஜேஷ்குமாா் எம்எல்ஏ ஆகியோா் வெள்ளிக்கிழமை ஆலோசனை மேற்கொண்டனா். இர... மேலும் பார்க்க