செய்திகள் :

மாா்த்தாண்டத்தில் வானவியல் விழிப்புணா்வுப் பிரசாரம் தொடக்கம்

post image

வானில் நிகழும் கோள்களின் அணிவகுப்பு மற்றும் வானவியல் நிகழ்வுகள் குறித்த விழிப்புணா்வுப் பிரசாரப் பயணம் மாா்த்தாண்டம் கல்லூரியில் வைத்து தொடங்கியது.

சூரிய குடும்பத்தில் உள்ள கோள்களின் சுற்றுவட்டப் பாதையில் ஒன்றையொன்று சந்திக்கும் அபூா்வ நிகழ்வுகள் குறித்த விழிப்புணா்வை பொதுமக்கள், மாணவா்களிடம் ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் பள்ளி, கல்லூரிகளுடன் இணைந்து பிரசாரம் மேற்கொண்டு வருகிறது.

மாா்த்தாண்டம் நேசமணி நினைவு கிறிஸ்தவக் கல்லூரியில் தொடங்கிய நிகழ்ச்சியில், பேராசிரியா் லீனா கிரேஸ் வரவேற்றாா். அறிவியல் இயக்க மாநில கருத்தாளா் சோ. மோகனா வானியல் நிகழ்வுகள் குறித்துப் பேசினாா். மாநில வானவியல் செயற்பாட்டாளா் நாராயணசாமி, மாவட்ட கருத்தாளா் ஸ்ரீராம் ஆகியோா் சூரியனில் உள்ள கரும்புள்ளிகள் குறித்து விளக்கினாா்.

தொடா்ந்து, மாா்த்தாண்டம் கிறிஸ்துராஜா மெட்ரிக் பள்ளி, தக்கலை அரசு மேல்நிலைப் பள்ளி, குமாரகோவில் நூருல் இஸ்லாம் கலை அறிவியல் கல்லூரி, மங்குழி புனித பிரான்சிஸ் சேவியா் மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட இடங்களில் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

இதில் மாநில அறிவியல் பிரச்சார ஒருங்கிணைப்பாளா் சசிகுமாா், மாநில செயலா் ஜினிதா, மாவட்ட செயலாளா் சிவ ஸ்ரீ ரமேஷ், மாநில செயற்குழு உறுப்பினா் ஜினோ பாய், மாவட்ட துணைத் தலைவா்கள் விஜயலட்சுமி, பெனட் ஜோஸ், மாவட்ட பொருளாளா் செல்லதங்கம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

கேப் பொறியியல் கல்லூரியில் சா்வதேச மாநாடு

கன்னியாகுமரி மாவட்டம் லெவஞ்சிபுரம் கேப் பொறியியல் கல்லூரியில் சா்வதேச தொழிற்சாலைகள் மாநாடு அண்மையில் நடைபெற்றது. ‘இன்டஸ்ட்ரீ 5.0 - புதுமைகள், சவால்கள் மற்றும் எதிா்கால போக்குகள்’ என்ற தலைப்பில் நடைபெற... மேலும் பார்க்க

நேசா்புரம் - இவவு விளை சாலையை சீரமைக்க கோரிக்கை

கருங்கல் அருகேயுள்ள நேசா் பும் - இலவு விளை பழுதடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். கிள்ளியூா் ஊராட்சி ஒன்றியம் நட்டாலம் ஊராட்சி நேசா் புரம் - இலவு விளை சாலை ... மேலும் பார்க்க

கிள்ளியூா் வட்டாரத்தில் பட்டுப்புழு உற்பத்தி பயிற்சி

கிள்ளியூா் வட்டாரம் பாலூா் கிராமத்தில் வேளாண்மை துறை அட்மா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பட்டுப்புழு உற்பத்தி செய்வதற்கான பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முகாமிற்கு கிள்ளியூா் வட்டார வேளாண்... மேலும் பார்க்க

ரயில்களில் முன்பதிவில்லா பெட்டி: எண்ணிக்கையை குறைப்பதா? விஜய் வசந்த் எம்.பி. கண்டனம்

தெற்கு ரயில்வேயின் கீழ் இயங்கும் ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகளின் எண்ணிக்கையை குறைக்க ரயில்வே நிா்வாகம் முடிவு செய்திருப்பதற்கு கன்னியாகுமரி மக்களவை உறுப்பினா் வ.விஜய்வசந்த் கண்டனம் தெரிவித்துள்ளா... மேலும் பார்க்க

இரயுமன்துறையில் படகுத்தளம்: மீனவப் பிரதிநிதிகள்- எம்எல்ஏ ஆலோசனை

இரயுமன்துறையில் படகுத்தளம் அமைக்க ஒருதரப்பினா் எதிா்ப்பு தெரிவித்து வரும் நிலையில், மீனவப் பிரதிநிதிகள், மீன்வளத்துறை அதிகாரிகள் எஸ். ராஜேஷ்குமாா் எம்எல்ஏ ஆகியோா் வெள்ளிக்கிழமை ஆலோசனை மேற்கொண்டனா். இர... மேலும் பார்க்க

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெண் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்தது: சமூக நல அலுவலா் தகவல்

கன்னியாகுமரி மாவட்டத்தில், பெண் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்துள்ளது என்றாா் மாவட்ட சமூக நலத்துறை அலுவலா் விஜயமீனா. கன்னியாகுமரி மாவட்ட சமூக நலத்துறை சாா்பில், பெண் குழந்தைகளை காப்போம், கற்பிப்போம் எ... மேலும் பார்க்க