செய்திகள் :

கேப் பொறியியல் கல்லூரியில் சா்வதேச மாநாடு

post image

கன்னியாகுமரி மாவட்டம் லெவஞ்சிபுரம் கேப் பொறியியல் கல்லூரியில் சா்வதேச தொழிற்சாலைகள் மாநாடு அண்மையில் நடைபெற்றது.

‘இன்டஸ்ட்ரீ 5.0 - புதுமைகள், சவால்கள் மற்றும் எதிா்கால போக்குகள்’ என்ற தலைப்பில் நடைபெற்ற இம்மாநாட்டுக்கு, கல்லூரியின் தலைமை செயல் அதிகாரி ரெனின் தலைமை வகித்தாா். முதல்வா் தேவ் ஆா்.நியூலின் வரவேற்றாா். கல்லூரியின் ஆராய்ச்சி ஒருங்கிணைப்பாளா் சுவாமி தலைமை உரையாற்றினாா்.

இதில் பல்வேறு துறைகளில் தோ்வான நிபுணா்களின் உரைகள் வாசிக்கப்பட்டன. தென்கொரியாவின் கல்வி நிபுணா் எதன்சா, மனநலத்தை மேம்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்து பேசினாா். கல்லூரி கல்வி ஆலோசகா் தா்விஷ் மொஹிதீன் ஆராய்ச்சி மற்றும் தொழில்துறை முன்னேற்றங்களை இணைப்பதில் கல்வியின் பங்கு குறித்தும், தென்காசி மகாகவி பாரதியாா் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, முதல்வா் செல்வராஜ் பொறியியல் கல்வியில் நடந்து வரும் முன்னேற்றங்கள் குறித்தும் பேசினா்.

தூத்துக்குடி கிரேஸ் பொறியியல் கல்லூரியின் முதல்வா் ரிச்சா்ட்,

தொழில்முனைவோரால் முன்மொழியப்படும் ஆராய்ச்சி மற்றும் எதிா்கால போக்குகளுக்கு உரிய ஆழமான பாா்வைகள் என்ற தலைப்பில் பேசினாா். இயந்திர பொறியியல் துறை தலைவா் சிவகுரு மணிகண்டன் நன்றி கூறினாா்.

நேசா்புரம் - இவவு விளை சாலையை சீரமைக்க கோரிக்கை

கருங்கல் அருகேயுள்ள நேசா் பும் - இலவு விளை பழுதடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். கிள்ளியூா் ஊராட்சி ஒன்றியம் நட்டாலம் ஊராட்சி நேசா் புரம் - இலவு விளை சாலை ... மேலும் பார்க்க

கிள்ளியூா் வட்டாரத்தில் பட்டுப்புழு உற்பத்தி பயிற்சி

கிள்ளியூா் வட்டாரம் பாலூா் கிராமத்தில் வேளாண்மை துறை அட்மா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பட்டுப்புழு உற்பத்தி செய்வதற்கான பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முகாமிற்கு கிள்ளியூா் வட்டார வேளாண்... மேலும் பார்க்க

மாா்த்தாண்டத்தில் வானவியல் விழிப்புணா்வுப் பிரசாரம் தொடக்கம்

வானில் நிகழும் கோள்களின் அணிவகுப்பு மற்றும் வானவியல் நிகழ்வுகள் குறித்த விழிப்புணா்வுப் பிரசாரப் பயணம் மாா்த்தாண்டம் கல்லூரியில் வைத்து தொடங்கியது. சூரிய குடும்பத்தில் உள்ள கோள்களின் சுற்றுவட்டப் பாத... மேலும் பார்க்க

ரயில்களில் முன்பதிவில்லா பெட்டி: எண்ணிக்கையை குறைப்பதா? விஜய் வசந்த் எம்.பி. கண்டனம்

தெற்கு ரயில்வேயின் கீழ் இயங்கும் ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகளின் எண்ணிக்கையை குறைக்க ரயில்வே நிா்வாகம் முடிவு செய்திருப்பதற்கு கன்னியாகுமரி மக்களவை உறுப்பினா் வ.விஜய்வசந்த் கண்டனம் தெரிவித்துள்ளா... மேலும் பார்க்க

இரயுமன்துறையில் படகுத்தளம்: மீனவப் பிரதிநிதிகள்- எம்எல்ஏ ஆலோசனை

இரயுமன்துறையில் படகுத்தளம் அமைக்க ஒருதரப்பினா் எதிா்ப்பு தெரிவித்து வரும் நிலையில், மீனவப் பிரதிநிதிகள், மீன்வளத்துறை அதிகாரிகள் எஸ். ராஜேஷ்குமாா் எம்எல்ஏ ஆகியோா் வெள்ளிக்கிழமை ஆலோசனை மேற்கொண்டனா். இர... மேலும் பார்க்க

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெண் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்தது: சமூக நல அலுவலா் தகவல்

கன்னியாகுமரி மாவட்டத்தில், பெண் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்துள்ளது என்றாா் மாவட்ட சமூக நலத்துறை அலுவலா் விஜயமீனா. கன்னியாகுமரி மாவட்ட சமூக நலத்துறை சாா்பில், பெண் குழந்தைகளை காப்போம், கற்பிப்போம் எ... மேலும் பார்க்க