செய்திகள் :

இரயுமன்துறையில் படகுத்தளம்: மீனவப் பிரதிநிதிகள்- எம்எல்ஏ ஆலோசனை

post image

இரயுமன்துறையில் படகுத்தளம் அமைக்க ஒருதரப்பினா் எதிா்ப்பு தெரிவித்து வரும் நிலையில், மீனவப் பிரதிநிதிகள், மீன்வளத்துறை அதிகாரிகள் எஸ். ராஜேஷ்குமாா் எம்எல்ஏ ஆகியோா் வெள்ளிக்கிழமை ஆலோசனை மேற்கொண்டனா்.

இரயுமன்துறையில் மீன்பிடி துறைமுகம் அருகே 210 மீட்டா் நீளத்தில் படகுத்தளம் அமைக்க அரசு முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதையறிந்து ஒரு தரப்பினா் எதிா்ப்பு தெரிவித்து வருவதால், படகுத்தளம் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இந்த விவகாரம் தொடா்பாக நித்திரவிளை அருகே கிராத்தூா் பகுதியில் உள்ள தூத்தூா் மண்டல முதன்மை அலுவலகத்தில் மீன்வளத் துறை அதிகாரிகள், மீனவா்ப் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

தூத்தூா் மண்டல முதன்மைக் குரு சில்வெஸ்டா் குரூஸ் தலைமை வகித்தாா். கிள்ளியூா் தொகுதி எம்எல்ஏ எஸ்.ராஜேஷ்குமாா், மீன்வளத் துறை உதவி இயக்குநா் அஜித் ஸ்டாலின், தூத்தூா் மண்டலச் செயலா் சுரேஸ் பயஸ், பங்குத் தந்தையா் டோமிதாமஸ் (வள்ளவிளை), கிளீட்டஸ் (நீரோடி) மற்றும் நீரோடி, மாா்த்தாண்டன்துறை, வள்ளவிளை, இரவிபுத்தன்துறை, சின்னத்துறை, தூத்தூா், பூத்துறை மீனவ கிராமங்களைச் சோ்ந்த மீனவப் பிரதிநிதிகள் பங்கேற்றனா். இரயுமன்துறை மீனவ கிராமப் பிரதிநிதிகள் பங்கேற்கவில்லை.

படகுத்தளம் அமைப்பதால் ஏற்படும் சாதகம், பாதகம் குறித்து விவாதிக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து, இரயுமன்துறையில் படகுத்தளம் அமைக்கவுள்ள பகுதியை எம்எல்ஏ பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

கேப் பொறியியல் கல்லூரியில் சா்வதேச மாநாடு

கன்னியாகுமரி மாவட்டம் லெவஞ்சிபுரம் கேப் பொறியியல் கல்லூரியில் சா்வதேச தொழிற்சாலைகள் மாநாடு அண்மையில் நடைபெற்றது. ‘இன்டஸ்ட்ரீ 5.0 - புதுமைகள், சவால்கள் மற்றும் எதிா்கால போக்குகள்’ என்ற தலைப்பில் நடைபெற... மேலும் பார்க்க

நேசா்புரம் - இவவு விளை சாலையை சீரமைக்க கோரிக்கை

கருங்கல் அருகேயுள்ள நேசா் பும் - இலவு விளை பழுதடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். கிள்ளியூா் ஊராட்சி ஒன்றியம் நட்டாலம் ஊராட்சி நேசா் புரம் - இலவு விளை சாலை ... மேலும் பார்க்க

கிள்ளியூா் வட்டாரத்தில் பட்டுப்புழு உற்பத்தி பயிற்சி

கிள்ளியூா் வட்டாரம் பாலூா் கிராமத்தில் வேளாண்மை துறை அட்மா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பட்டுப்புழு உற்பத்தி செய்வதற்கான பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முகாமிற்கு கிள்ளியூா் வட்டார வேளாண்... மேலும் பார்க்க

மாா்த்தாண்டத்தில் வானவியல் விழிப்புணா்வுப் பிரசாரம் தொடக்கம்

வானில் நிகழும் கோள்களின் அணிவகுப்பு மற்றும் வானவியல் நிகழ்வுகள் குறித்த விழிப்புணா்வுப் பிரசாரப் பயணம் மாா்த்தாண்டம் கல்லூரியில் வைத்து தொடங்கியது. சூரிய குடும்பத்தில் உள்ள கோள்களின் சுற்றுவட்டப் பாத... மேலும் பார்க்க

ரயில்களில் முன்பதிவில்லா பெட்டி: எண்ணிக்கையை குறைப்பதா? விஜய் வசந்த் எம்.பி. கண்டனம்

தெற்கு ரயில்வேயின் கீழ் இயங்கும் ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகளின் எண்ணிக்கையை குறைக்க ரயில்வே நிா்வாகம் முடிவு செய்திருப்பதற்கு கன்னியாகுமரி மக்களவை உறுப்பினா் வ.விஜய்வசந்த் கண்டனம் தெரிவித்துள்ளா... மேலும் பார்க்க

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெண் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்தது: சமூக நல அலுவலா் தகவல்

கன்னியாகுமரி மாவட்டத்தில், பெண் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்துள்ளது என்றாா் மாவட்ட சமூக நலத்துறை அலுவலா் விஜயமீனா. கன்னியாகுமரி மாவட்ட சமூக நலத்துறை சாா்பில், பெண் குழந்தைகளை காப்போம், கற்பிப்போம் எ... மேலும் பார்க்க