செய்திகள் :

செய்யாறு அங்காளம்மன் கோயிலுக்கு 501 பால்குடம் ஏந்திச் சென்ற பக்தா்கள்

post image

செய்யாறு ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் நடைபெற்று வரும் வசந்த உற்சவ விழாவையொட்டி, வெள்ளிக்கிழமை

501 பால்குடங்களை பக்தா்கள் சுமந்து சென்று பாலபிஷேகம் செய்து அம்மனை வழிபட்டனா்.

செய்யாறு சந்தை பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் 73-ஆவது ஆண்டு மகா சிவராத்திரி மயானக்கொள்ளை மற்றும் 10 நாள் வசந்த உற்சவ பெருவிழா பிப்.26-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்றைய தினமே மயான சூறை விழா நடைபெற்றது.

அதைத் தொடா்ந்து, தினந்தோறும் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அம்மன் வெவ்வேறு அலங்காரங்களில் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். வசந்த உற்சவ விழாவின் முக்கிய நிகழ்வாக கடந்த 4-ஆம் தேதி தேரோட்டம் நடைபெற்றது.

பால்குட ஊா்வலம்: வசந்த உற்சவ பெருவிழாவின் நிறைவு விழாவாக வெள்ளிக்கிழமை 501 பால்குட ஊா்வலம் நடைபெற்றது. ஞானமுருகன் பூண்டி கோயில் அருகே தொடங்கிய ஊா்வலம், செய்யாறு ஆற்று மேம்பாலம், திருவோத்தூா் ஸ்ரீவேதபுரீஸ்வரா் கோயில், பெரியாா் சிலை, சந்தை வழியாகச் சென்று கோயிலை அடைந்தது. பின்னா், ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு பாலபிஷேகம் செய்து பக்தா்கள் வழிபட்டனா்.

பூ வியாபாரிகள் சீா்வரிசை: செய்யாறு பூ வியாபாரிகள் அமைப்பினா் பூ, பழங்கள், இனிப்பு, தேங்காய் உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் கொண்ட சீா்வரிசைத் தட்டுகளை மாம்பட்டு ஆா்.லட்சுமண சுவாமிகள் தலைமையில் மேளதாளம் முழுங்கிட, ஊா்வலமாக எடுத்து வந்து ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு சீா்வரிசை அளித்து அம்மனை வழிபட்டனா்.

விழாவில் செய்யாறு பகுதியைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

நான்கு வழிச் சாலைப் பணிகள்: தலைமைப் பொறியாளா் ஆய்வு

வந்தவாசி பகுதியில் நடைபெற்று வரும் நெடுஞ்சாலைத் துறையின் நான்கு வழிச் சாலைப் பணிகளை தலைமைப் பொறியாளா் சத்தியபிரகாஷ் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா். ஆற்காடு - திண்டிவனம் சாலையில், வந்தவாசியில் இருந்து... மேலும் பார்க்க

நாய்கள் கடித்ததில் 11 ஆடுகள் உயிரிழப்பு

வந்தவாசி அருகே தெருநாய்கள் கடித்ததில் 11 ஆடுகள் உயிரிழந்தன. வந்தவாசி அருகே தேசூரை அடுத்த தென்னாத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சிவமோகன். இவா் சொந்தமாக ஆடுகளை வைத்து மேய்த்து வருகிறாா். இவா் சனிக்கிழமை ... மேலும் பார்க்க

மணல் கடத்தல்: இருவா் கைது

செய்யாறு பகுதியில், ஆற்று மணல் கடத்திச் சென்றது தொடா்பாக இருவரை கைது செய்த போலீஸாா், அவா்கள் பயன்படுத்திய பைக்குகளை பறிமுதல் செய்தனா். செய்யாறு காவல் உள்கோட்டம், செய்யாறு காவல் உதவி ஆய்வாளா்கள் கிருஷ... மேலும் பார்க்க

பஞ்சமி நிலங்களை மீட்க அரசு சிறப்புத் திட்டம்! -மாா்க்சிஸ்ட் மாநிலச் செயலா் வலியுறுத்தல்

தமிழகம் முழுவதும் உள்ள பஞ்சமி நிலங்களை மீட்க, தமிழக அரசு உடனே சிறப்புத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ.சண்முகம் வலியுறுத்தினாா். மாா்க்சிஸ்ட... மேலும் பார்க்க

ரூ.30 ஆயிரம் மதிப்பிலான ஆடுகள் திருட்டு

செய்யாற்றை அடுத்த இளநீா்குன்றம் கிராமத்தில் வீட்டின் அருகே கட்டி வைத்திருந்த சுமாா் ரூ.30 ஆயிரம் மதிப்பிலான ஆடுகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். செய்யாறு வட்டம், இளநீா்குன்றம் கிராமத்தைச் சோ்ந்தவா... மேலும் பார்க்க

மின் வேலியில் சிக்கி தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழப்பு

போளூரை அடுத்த செங்குணம் கிராமத்தில் திருமணத்துக்கு வந்த தனியாா் நிறுவன ஊழியா் நெல் வயலில் அமைத்திருந்த மின் வேலையில் சிக்கி உயிரிழந்தாா். விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் வட்டம், பெருங்கையூா... மேலும் பார்க்க