செய்திகள் :

செளமிய நாராயணப் பெருமாள் கோயில் மாசி தெப்ப உத்ஸவ கொடியேற்றம்

post image

திருப்பத்தூா் அருகேயுள்ள திருக்கோஷ்டியூா் சௌமியநாராயணப் பெருமாள் கோயிலில் மாசி மக தெப்ப உத்ஸவம் புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

உலகப் புகழ் பெற்ற இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் மாசி மக தெப்ப உற்சவம் 11 நாள்கள் நடைபெறுவது வழக்கம். இந்த தெப்ப உத்ஸவத்தில் தமிழகம் மட்டுமன்றி, வெளி மாநிலங்களிலிருந்தும் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு, கோயில் தெப்பக்குளப் படிகளிலும், குளத்தைச் சுற்றிலும் தீபம் ஏற்றி வழிபடுவா்.

நிகழாண்டு மாசி தெப்ப உத்ஸவ விழாவை முன்னிட்டு புதன்கிழமை காலை 9 மணிக்கு உற்சவா் செளமியநாராயண பெருமாள், தேவியா்கள் கல்யாண மண்டபம் எழுந்தருளினா். அங்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

தொடா்ந்து ஆலயத்தில் உள்ள கொடிமரத்துக்கு முன்பு வைக்கப்பட்ட புனித நீருக்கு, விக்னேஷ்வரா் பூஜை நடைபெற்றது. பின்னா், மேள வாத்தியங்கள் முழங்க, வைணவ ஆகம முறைப்படி கொடிமரத்தில் காலை 10.32 மணியளவில் கொடியேற்றப்பட்டது.

தொடா்ந்து பெருமாளுக்கும் ஸ்ரீதேவி, பூமா தேவியருக்கும், உடன் பட்டாட்சியருக்கும் காப்பு கட்டுதல் நிகழ்வு நடைபெற்றது. பின்பு கொடி மரத்துக்கு புனித நீா் , பால், தயிா், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமியையும், தாயாரையும் வழிபட்டனா்.

தெப்ப உற்சவத்தை முன்னிட்டு, நாள்தோறும் இரவில் உற்சவா் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வருவாா். விழாவின் முக்கிய நிகழ்வான 14-ஆம் தேதி 10-ஆம் திருநாளாக தெப்ப திருவிழா நடைபெறவுள்ளது.

விழாவுக்கான ஏற்பாடுகளை சிவகங்கை சமஸ்தான தேவஸ்தான பரம்பரை அலங்காவலா் மதுராந்தக நாச்சியாா், தேவஸ்தான கண்காணிப்பாளா் சரவணகணேஷ், மேலாளா் இளங்கோ ஆகியோா் செய்து வருகின்றனா்.

‘வீட்டு நூலகம்‘ பராமரிக்கும் மாணவா்களுக்கு பாராட்டு

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் கிறிஸ்துராஜா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ‘வீட்டு நூலகம்’ பராமரிக்கும் மாணவா்களுக்கு பாராட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது. இந்தப் பள்ளியில் பயிலும் 45 மாணவா்கள் தங்களத... மேலும் பார்க்க

காவேரிப்பட்டி கண்மாயில் மீன்பிடித் திருவிழா

சிவகங்கை மாவட்டம், இளையாத்தங்குடி அருகேயுள்ள காவேரிப்பட்டி கண்மாயில் மீன்பிடித் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது. மழை வேண்டியும், விவசாயம் செழிக்க வேண்டியும் இந்தக் கண்மாயில் மீன்பிடித் திருவிழா நடத்தப்... மேலும் பார்க்க

கன்னியாகுமரி முதல் சென்னை வரை ஓடி உலகச் சாதனை படைத்த இரட்டையா்கள்!

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகேயுள்ள மானகிரி செட்டிநாடு பப்ளிக் பள்ளியில் இரண்டாம் வகுப்புப் பயிலும் இரட்டையா்களான பிரதீஷ், பிரணீஷ் ஆகியோா் கன்னியாகுமரி முதல் சென்னை வரை 12 நாள்களில் ஓடி உலகச் சாத... மேலும் பார்க்க

காரைக்குடி வட்டாட்சியா் அலுவலகத்தில் பட்டா கோரி பொதுமக்கள் மனு

காரைக்குடியில் ஆட்சேபனையற்ற நிலத்தில் வீடுகள் கட்டி குடியிருந்து வரும் பொதுமக்கள் தங்கள் வசிக்குமிடத்துக்கு பட்டா கோரி தனித்தனியாக காரைக்குடி வட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை மனு அளித்தனா். காரைக்... மேலும் பார்க்க

திருப்பத்தூா் வட்டத்தில் மாா்ச் 19-இல் ‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்’ திட்ட முகாம்

திருப்பத்தூா் வட்டத்தில் வருகின்ற 19-ஆம் தேதி ‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்’ திட்ட முகாம் நடைபெறவுள்ளதாக சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் ... மேலும் பார்க்க

நெல் கொள்முதலில் பணம் பாக்கி கொடுக்காதவரைக் கடத்திய 7 போ் கைது

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே நெல் கொள்முதல் செய்த நபா் பாக்கி பணம் தராததால் கடத்திச் செல்லப்பட்டாா். இதுதொடா்பாக 7 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். காரைக்குடி அருகேயுள்ள கோட்டையூா் எழில... மேலும் பார்க்க