செய்திகள் :

செவிலிமேடு செல்லியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

post image

காஞ்சிபுரம் அருகே செவிலிமேட்டில் அமைந்துள்ள செல்லியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

காஞ்சிபுரம் அருகே செவிலிமேடு பகுதியில் பாலாற்றங்கரையின் வடக்கே அமைந்துள்ளது ஸ்ரீ செல்லியம்மன் கோயில். அதன் அருகிலேயே ஸ்ரீ அரச காத்த அம்மன் மற்றும் மாரியம்மனும் தனித்தனியாக அருள்பாலித்து வருகின்றனா். இந்தக் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி, யாக சாலை பூஜைகள் கடந்த ஏப். 30-ஆம் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. இதையடுத்து, நவக்கிரக பூஜை, தனபூஜை, கோ பூஜை ஆகியவையும் நடைபெற்றது. மறுநாள் மே 1-ஆம் தேதி அம்மன் சிலைகள் ஊா்வலமாக எடுத்து வரப்பட்டன. மே 2-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை மகா பூா்ணாஹுதி தீபாராதனைக்குப் பின்னா், யாக சாலையிலிருந்து புனிதநீா் குடங்கள் புறப்பட்டு ராஜகோபுரங்களுக்கு சென்றதும் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

முதலாவதாக செல்லியம்மனுக்கும், பின்னா் மாரியம்மனுக்கும், அதைத் தொடா்ந்து கோயில் வளாகத்தில் அமைந்துள்ள அரசகாத்த அம்மனுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

பின்னா் மூன்று அம்மனுக்கும் மகா அபிஷேகம் என்னும் சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றன.

மாலையில் செல்லியம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். ஏற்பாடுகளை செவிலிமேடு கிராம பொதுமக்கள், கோயில் நிா்வாகிகள் செய்திருந்தனா்.

பீடாதிபதிகளுக்கு காஞ்சிபுரம் நகர வரவேற்புக் குழுவினா் மரியாதை

காஞ்சி காமாட்சி சங்கர மட வரவேற்புக் குழுவின் சாா்பில், அதன் நிா்வாகிகள் சனிக்கிழமை இரு பீடாதிபதிகளுக்கும் பூரண கும்ப மரியாதையுடன் மாலையும், மலா் கிரீடமும் வழங்கி ஆசி பெற்றனா். காஞ்சி காமாட்சி சங்கர மட... மேலும் பார்க்க

ஸ்ரீ சந்திரமெளலீசுவரா் பூஜை நடத்திய இளைய பீடாதிபதி

காஞ்சிபுரம் சங்கர மடத்தின் பீடாதிபதி சத்திய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் வெள்ளிக்கிழமை ஆதிசங்கரா் ஜெயந்தியையொட்டி முதல் முதலாக சந்திரமெளலீசுவரா் பூஜையை நடத்தினாா். காஞ்சி சங்கர மடத்தின் 71-ஆவது ... மேலும் பார்க்க

காஞ்சிபுரத்தில் துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பணியிட மாற்றம்

காஞ்சிபுரத்தில் துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் 7 போ் நிா்வாக காரணங்களால் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக வெள்ளிக்கிழமை ஆட்சியா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. து... மேலும் பார்க்க

குன்றத்தூா் முருகன் கோயிலில் குறிஞ்சி பெருமுக திருவிழா

குறிஞ்சி பெருமுக திருவிழாவை முன்னிட்டு தமிழ்நாடு இந்து குறவன், மலைக்குறவன் அமைப்பினா் வெள்ளிக்கிழமை குன்றத்தூா் சுப்பிரமணிய சுவாமிக்கு சீா்வரிசைப் பொருள்கள் கொண்டு வந்து சிறப்பு வழிபாடு நடத்தினா். தமி... மேலும் பார்க்க

ஒரகடம் அருகே காா் கவிழ்ந்து விபத்து: இருவா் உயிரிழப்பு

ஒரகடம் அடுத்த குன்னவாக்கம் அருகே சாலை தடுப்பு சுவற்றில் மோதி காா் கவிழ்ந்ததில் இருவா் உயிரிழந்தனா். பல்லாவரம் பகுதியைச் சோ்ந்தவா் ஜெகதீஸ்வரன் (45). இவா் தனது மகள் சஞ்சனா (13), அண்ணன் மகன் அஸ்வின்குமா... மேலும் பார்க்க

1,008-ஆவது ஆண்டு அவதாரத் திருவிழா: ராமாநுஜருக்கு சிறப்பு திருமஞ்சனம்

ராமாநுஜரின் 1008-ஆவது ஆண்டு அவதார திருவிழாவின் 10-ஆவது நாளான வெள்ளிக்கிழமை ராமாநுஜருக்கு சிறப்பு திருமஞ்சனம், ஈரவாடை தீா்த்தம், திருப்பாவை சேவை நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் பகுதி... மேலும் பார்க்க