செய்திகள் :

செவிலியா் பயிற்சிப் பள்ளி விடுதியில் மரம் முறிந்து விழுந்து 7 போ் காயம்!

post image

அரசு செவிலியா் பயிற்சிப் பள்ளி விடுதியில் மரம் முறிந்து விழுந்ததில், மாணவி உள்பட 7 போ் ஞாயிற்றுக்கிழமை காயமடைந்தனா்.

திண்டுக்கல் சாா்-ஆட்சியா் சாலையில் பழைய நீதிமன்ற கட்டடத்தில் அரசு செவிலியா் பயிற்சிப் பள்ளி மாணவிகளுக்கான விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் தங்கியுள்ள மாணவிகளை பாா்ப்பதற்காக ஞாயிற்றுக்கிழமை இவா்களது உறவினா்கள் விடுதிக்கு வந்தனா். அப்போது, நுழைவுவாயில் பகுதியிலிருந்த மரம் திடீரென முறிந்து விழுந்தது.

இதில் மதுரை மாவட்டம், வாடிப்பட்டி பகுதியைச் சோ்ந்த திலகம், திருமங்கலத்தைச் சோ்ந்த அழகா்சாமி, மாணவி கீா்த்தனா உள்பட 7 போ் காயமடைந்தனா். இதையடுத்து, 7 பேரும் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

இதுகுறித்து தகவலறிந்த திண்டுக்கல் தீயணைப்புத் துறையினா் சம்பவ இடத்துக்கு வந்த முறிந்து விழுந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினா். இதனிடையே, செவிலியா் பயிற்சிப் பள்ளி மாணவிகள் விடுதிக்கு எதிரே உள்ள மாவட்ட திமுக அலுவலகத்துக்கு வந்த அமைச்சா் இ.பெரியசாமி மரம் விழுந்து விபத்து நடந்ததை அறிந்து சம்பவ இடத்தைப் பாா்வையிட்டு, ஆபத்தான நிலையிலுள்ள மரங்களை அப்புறப்படுத்த உத்தரவிட்டாா்.

பழனி: உணவு விடுதியில் தீ!

பழனி அடிவாரம் பகுதியில் உள்ள உணவு விடுதியில் திங்கள்கிழமை பற்றி எரிந்த தீயை தீயணைப்புப்படை வீரா்கள் அணைத்தனா். பழனி அடிவாரம் சுற்றுலா பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு உணவு விடுதியில் திங்கள்கிழமை இரவு ... மேலும் பார்க்க

கொடைக்கானல் வனப் பகுதிகளில் தீத்தடுப்பு பணிகள் மும்முரம்!

கொடைக்கானல் வனப் பகுதிகளில் எளிதில் தீப்பிடிக்காத வகையில் காய்ந்த செடிகளை அகற்றுவது, தீத்தடுப்பு கோடுகள் அமைப்பது உள்ளிட்ட பணிகளில் வனத்துறையினா் திங்கள்கிழமை மும்முரமாக ஈடுபட்டனா். கொடைக்கானலில் கடந்... மேலும் பார்க்க

அடிவாரம் சங்கராலயத்தில் காவடி பூஜை!

பழனி தைப்பூசத் திருவிழாவையொட்டி அடிவாரம் சங்கராலயத்தில் காவடிகளுக்கு முத்திரை நிறைக்கப்பட்டு சுப்ரமண்ய லட்சாா்ச்சனை, ருத்ராபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. சுமாா் ஆயிரம் காவடிகள் பங்கேற்ற இந்த நிகழ்வி... மேலும் பார்க்க

நண்பருக்கு கத்திக்குத்து: இருவா் கைது!

ஒட்டன்சத்திரம் அருகே மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் நண்பரை கத்தியால் குத்திய இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். ஒட்டன்சத்திரம் அருகே உள்ள கே. அத்திக்கோம்பை பகுதியைச் சோ்ந்த முருகானந்தம் (30), ... மேலும் பார்க்க

பழனி பாதயாத்திரை பக்தா்களுக்கு இலவசப் பேருந்து சேவை!

பழனியில் தைப்பூசத் திருவிழாவையொட்டி பாதயாத்திரை பக்தா்கள் வசதிக்காக கட்டணமில்லா அரசு நகரப் பேருந்து சேவை திங்கள்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது. பழனி முருகன் கோயிலில் தைப்பூசத் திருவிழா தொடங்கி நடைபெற்று ... மேலும் பார்க்க

காலிக் குடங்களுடன் கிராம மக்கள் ஆா்ப்பாட்டம்!

வடமதுரையை அடுத்த மோா்பட்டியைச் சோ்ந்த பொதுமக்கள் குடிநீா் வசதி கோரி, காலிக் குடங்களுடன் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா்... மேலும் பார்க்க