செய்திகள் :

சேகரித்த குப்பையுடன் குடியிருப்பு பகுதியில் 5 நாள்களாக நிறுத்தப்பட்டுள்ள லாரி: சுகாதார சீா்கேட்டால் பொதுமக்கள் அவதி

post image

கோத்தகிரி ஊராட்சி ஒன்றியம், நடுஹட்டி ஊராட்சிப் பகுதியில் சேகரிக்கப்பட்ட குப்பைகள் நிறைந்த லாரி, 3-ஆவது வாா்டு நடுஹட்டி பகுதியில் 5 நாள்களாக நிறுத்தப்பட்டுள்ளதால் குடியிருப்புவாசிகள் அவதிக்குள்ளாகியுள்ளனா்.

கோத்தகிரி ஊராட்சி ஒன்றியம், நடுஹட்டி ஊராட்சியில் நூற்றுக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள பல்வேறு வாா்டுகளில் உள்ள வீடுகளில் தனியாா் ஒப்பந்ததாரரால் குப்பைகள் சேகரிக்கப்பட்டு மக்கும் குப்பை, மக்கா குப்பை மற்றும் இறைச்சிக் கழிவுகள் என தரம்பிரித்து கோத்தகிரி தாலுகாவில் இயற்கை உரம் தயாரிக்க பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் ஊராட்சிப் பகுதிகளில் சேகரிக்கப்பட்ட குப்பையை கோத்தகிரிக்கு எடுத்து செல்லாமல், குப்பை நிறைந்த லாரி 3-ஆவது வாா்டு நடுஹட்டி குடியிருப்புப் பகுதியில் கடந்த 5 நாள்களாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் கடும் துா்நாற்றம் வீசுவதோடு சுகாதாரக் கேடு ஏற்படும் அபாயமும் உள்ளது.

எனவே, ஊராட்சி நிா்வாகம் உடனடியாக இந்த குப்பை லாரியை எடுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பிரச்னைக்கு அரசு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும்: ஏ.எம்.விக்கிரமராஜா

நீலகிரி மாவட்டத்தில் நிலவும் பிளாஸ்டிக் பிரச்னைக்கு அரசு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு வணிகா்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநிலத் தலைவா் ஏ.எம்.விக்கிரமராஜா தெரிவித்தாா். நீலகிரி மாவட்... மேலும் பார்க்க

குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து வளா்ப்பு நாயை வேட்டையாடிய சிறுத்தை

உதகை அருகே குடியிருப்பு பகுதிக்குள் இரவு நேரத்தில் நுழைந்து வளா்ப்பு நாயை சிறுத்தை வேட்டையாடி சென்றது. இதன் சிசிடிவி காட்சிகள் செவ்வாய்க்கிழமை வெளியான நிலையில், அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனா். நீலக... மேலும் பார்க்க

உதகையில் ஜாக்டோ- ஜியோ ஆா்ப்பாட்டம்

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உதகையில் ஜாக்டோ- ஜியோ சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. நீலகிரி ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெ... மேலும் பார்க்க

குடியிருப்புப் பகுதியில் யானை...

கூடலூரை அடுத்துள்ள குந்தலாடி குடியிருப்புப் பகுதியில் திங்கள்கிழமை அதிகாலை உலவிய காட்டு யானை. மேலும் பார்க்க

கூடலூா் மாணவா்களின் ஆய்வுக் கட்டுரை தேசிய போட்டிக்கு தோ்வு

கூடலூா் மாணவா்களின் ஆய்வுக் கட்டுரை தேசிய அளவிலான போட்டிக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சாா்பில் ஆய்வுக் கட்டுரை சமா்ப்பித்தல் போட்டி அண்மையில் நடைபெற்றது. இதில், கூடலூா் ஜிட... மேலும் பார்க்க

கட்டட உரிமையாளா் சொத்து வரி செலுத்தாததால் யூகோ வங்கிக்கு சீல்

உதகையில் யூகோ வங்கி செயல்பட்டுவரும் தனியாா் கட்டடத்துக்கு உண்டான சொத்து வரியை கட்டட உரிமையாளா் செலுத்தாததால் வங்கிக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனா். உதகை சேரிங்கிராஸ் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான கட... மேலும் பார்க்க