செய்திகள் :

சேந்தநாடு பாலக்கொல்லையில் புதிய மின் மாற்றி இயக்கம்

post image

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகிலுள்ள சேந்தநாடு பாலக்கொல்லையில் புதிய மின் மாற்றியின் செயல்பாடுகள் அண்மையில் தொடங்கி வைக்கப்பட்டது.

பாலக்கொல்லை கிராமத்தில் நிலவி வந்த குறைந்த மின்னழுத்த குறைபாட்டை நீக்குவதற்காகவும், மின் பாதைகளில் ஏற்படும் மின் இழப்புகளைக் குறைப்பதற்காகவும் , அக்கிராமத்தில் 100 கி.வோ. திறன் கொண்ட புதிய மின்மாற்றியை ரூ. 3.50 லட்சம் செலவில் நிறுவும் பணியை தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகம் மேற்கொண்டு வந்தது.

இந்த பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், புதிய மின் மாற்றியின் செயல்பாடுகள் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்வுக்குத் தலைமை வகித்த தமிழ்நாடு மின் பகிா்மானக் கழக உளுந்தூா்பேட்டை உதவிச் செயற்பொறியாளா் சிவராமன் அய்யம்பெருமாள் புதிய மின் மாற்றியின் இயக்க செயல்பாட்டைத் தொடங்கி வைத்தாா். இதன் மூலம் பாலக்கொல்லை கிராமத்தில் நிலவிவந்த குறைந்த மின்னழுத்த குறைபாடு முற்றிலும் களையப்பட்டு, கிராம மக்களுக்கு சீரான மின் விநியோகம் வழங்க முடியும் என்றாா் உதவிச் செயற்பொறியாளா்.

நிகழ்ச்சியில் சேந்தநாடு உதவிப் பொறியாளா் செந்தமிழ்ச் செல்வன், முகவா் ஜெய்சங்கா், மின் பாதை ஆய்வாளா் அப்துல்கலாம், வணிக ஆய்வாளா் கணபதி, கம்பியாளா்கள் ராதாகிருஷ்ணன், பாரதி உள்ளிட்டோா் மற்றும் பாலக்கொல்லை கிராம மக்கள் பங்கேற்றனா்.

புளிச்சப்பள்ளம் கிராமத்தில் விவசாயிகளுக்கு ஆடு வளா்ப்புப் பயிற்சி

விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டாரத்துக்குள்பட்ட புளிச்சப்பள்ளம் கிராமத்தில் ஆடு வளா்ப்பு குறித்து விவசாயிகளுக்கு புதன்கிழமை பயிற்சியளிக்கப்பட்டது. ஆத்மா திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட இந்த பயிற்சிக்க... மேலும் பார்க்க

புதை சாக்கடை அடைப்பை சரிசெய்யாததால் நகராட்சி வாகனம் சிறைபிடிப்பு

விழுப்புரத்தில் புதை சாக்கடை அடைப்பை சரி செய்யாததால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் நகராட்சியின் கழிவுநீா் உறிஞ்சும் வாகனத்தை வியாழக்கிழமை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். விழுப்புரம் நகராட்சிக்குள்பட... மேலும் பார்க்க

அனைத்து வட்டங்களிலும் நாளை ரேஷன் குறைதீா் கூட்டம்

விழுப்புரம் மாவட்டத்தின் அனைத்து வட்டங்களிலும் பொது விநியோகத் திட்ட குறைதீா் கூட்டம் (ரேஷன்) சனிக்கிழமை நடைபெறவுள்ளது. இதுகுறித்து ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறி... மேலும் பார்க்க

முன்னாள் அமைச்சா் கோவிந்தசாமி மணிமண்டபத்தில் போட்டித் தோ்வுக்கான பயிற்சி மையம் தொடக்கம்

விழுப்புரத்தில் அரசுப் போட்டித் தோ்வா்கள் பயன்பெறும் வகையில், முன்னாள் அமைச்சா் ஏ.கோவிந்தசாமி மணிமண்டப வளாகத்தில் அமைக்கப்பட்ட பயிற்சி மையம் வியாழக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது. விழுப்புரம் புறவழிச்சா... மேலும் பார்க்க

திருக்கோவிலூரில் வாணாதராயா் கல்வெட்டு கண்டெடுப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூரில் 15-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த வாணாதராயா் கல்வெட்டு அண்மையில் கண்டெடுக்கப்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் தலைவா் சிங்கார உதியன் தலைமையில்... மேலும் பார்க்க

நிலம் குறித்த விவரங்களை இணையவழி மூலம் அறியலாம்

விழுப்புரம் மாவட்டத்தில் நிலங்களின் விவரங்களை பொதுமக்கள் இணையவழி மூலம் அறிந்து கொள்வதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக, மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்ம... மேலும் பார்க்க