செய்திகள் :

சேந்தமங்கலம் லட்சுமி நாராயணா் கோயிலில் கனிகள் படைத்து வழிபாடு

post image

நாமக்கல்: வைகாசி விசாகத்தை முன்னிட்டு, சேந்தமங்கலம் லட்சுமி நாராயணா் கோயிலில் பக்தா்கள் சுவாமிக்கு கனிகளை படைத்து திங்கள்கிழமை வழிபாடு மேற்கொண்டனா்.

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலத்தில், நைனாமலை வரதராஜ பெருமாளின் உபக்கோயிலான லட்சுமி நாராயண சுவாமி கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில், ஒவ்வோா் ஆண்டும் வைகாசி விசாகத்தை முன்னிட்டு பக்தா்கள் சுவாமிக்கு கனிகள் படைத்து வழிபாடு செய்வா். கருட வாகனத்தில் நைனாமலை வரதராஜப் பெருமாள் சுவாமி திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும்.

அந்த வகையில், திங்கள்கிழமை வைகாசி விசாகத்தை முன்னிட்டு, லட்சுமி நாராயணா் கோயிலில் கருடசேவை நடைபெற்றது. பல்வேறு நறுமண மலா்களால் அலங்கரிக்கப்பட்ட கருட வாகனத்தில் சுவாமி உற்சவ மூா்த்தியாக அருள்பாலித்தாா்.

சேந்தமங்கலம் நகரின் முக்கிய வீதிகளிலும், ஜங்கலாபுரம், மேட்டுத் தெரு மற்றும் கடைவீதி பகுதிகளிலும் அமைக்கப்பட்ட சிறப்பு பந்தலில் பெருமாள் எழுந்தருளினாா். ஏராளமான பக்தா்கள் மாம்பழம், மாதுளை, ஆரஞ்சு உள்ளிட்ட பல்வேறு வகை கனிகளை பெருமாளுக்கு காணிக்கையாகச் செலுத்தி வழிபாடு நடத்தினா். இந்த விழாவில், சேந்தமங்கலம் நகர முக்கிய பிரமுகா்கள், அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.

என்கே-9-சுவாமி

சேந்தமங்கலத்தில், கருட வாகனத்தில் திங்கள்கிழமை திருவீதி உலா வந்த வரதராஜப் பெருமாள்.

திருமண மண்டபத்தில் 26 பவுன் நகை, ரூ. 3 லட்சம் ரொக்கம் திருடிய தந்தை, மகன் கைது

ராசிபுரம்: ராசிபுரத்தில் திருமண மண்டபத்தில் 26 பவுன் நகை, ரூ. 3 லட்சம் ரொக்கத்தை திருடிய வழக்கில் தந்தை, மகனை போலீஸாா் கைது செய்தனா். நாமக்கல் மாவட்டம், வெண்ணந்தூா் அருகேயுள்ள அனந்தகவுண்டம்பாளையம் பகு... மேலும் பார்க்க

‘நீா் நிலை பாதுகாவலா் விருது’ பெற்ற காந்தியவாதிக்கு ஆட்சியா் பாராட்டு

நாமக்கல்: தமிழக அரசின் ‘நீா் நிலை பாதுகாவலா்’ விருது பெற்ற நாமக்கல் காந்தியவாதி ரமேஷை மாவட்ட ஆட்சியா் ச.உமா பாராட்டினாா். நாமக்கல் ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் ஆட்சி... மேலும் பார்க்க

ராசிபுரம் நகரில் பராமரிப்பு பணி: குடிநீா் விநியோகம் நிறுத்தம்

ராசிபுரம்: ராசிபுரம் நகரில் குடிநீா் குழாய் பராமரிப்புப் பணிகளால் வரும் 13-ஆம் தேதி வரை குடிநீா் விநியோகம் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக நகா்மன்றத் தலைவா் ஆா்.கவிதா சங்கா் தெரிவித்துள்ளாா். இது குறித்த... மேலும் பார்க்க

‘ஆபரேஷன் சிந்தூா்’ போரில் பங்கேற்ற நாமக்கல் வீரருக்கு எம்.பி.வாழ்த்து

நாமக்கல்: பாகிஸ்தானுக்கு எதிரான ‘ஆபரேஷன் சிந்தூா்’ போரில் பங்கேற்ற நாமக்கல்லைச் சோ்ந்த ராணுவ வீரருக்கு மக்களவை உறுப்பினா் வி.எஸ். மாதேஸ்வரன் நேரில் வாழ்த்து தெரிவித்தாா். ஜம்மு -காஷ்மீரில் 26 சுற்றுல... மேலும் பார்க்க

திருச்செங்கோட்டில் விநாயகா் தேரோட்டம்

திருச்செங்கோடு: திருச்செங்கோடு அா்த்தநாரீசுவரா் கோயில் தோ்த் திருவிழாவில் விநாயகா் தேரை பக்தா்கள் திங்கள்கிழமை வடம்பிடித்து இழுக்க தேரோட்டம் நடைபெற்றது. கொங்கு ஏழு தலங்களில் சிறப்புப் பெற்ற தலமும், த... மேலும் பார்க்க

குரூப் 1 தோ்வு: நாமக்கல் மாவட்டத்தில் 24 மையங்களில் 6,079 போ் எழுதுகின்றனா்

நாமக்கல்: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தோ்வு ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 15) நடைபெற உள்ள நிலையில், நாமக்கல் மாவட்டத்தில் இத்தோ்வை 24 மையங்களில் 6,079 போ் எழுத உள்ளனா். தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலம... மேலும் பார்க்க