செய்திகள் :

சேப்பாக்கத்தில் சிஎஸ்கேவுக்கு சாதகமான சூழல் இல்லையா? புஜாராவுக்கு அதிர்ச்சியளித்த ஃபிளெமிங்!

post image

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் தோல்வியடைந்தது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் புஜாரா பேசியுள்ளார்.

ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் சிஎஸ்கேவை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

இதையும் படிக்க: அதிரடியாக விளையாட எங்களிடம் வீரர்கள் இருக்கிறார்கள், தப்பு கணக்கு வேண்டாம்: சிஎஸ்கே பயிற்சியாளர்

17 ஆண்டுகளாக சென்னை சூப்பர் கிங்ஸின் கோட்டையாக திகழ்ந்த சேப்பாக்கம் திடலில் சிஎஸ்கே தோல்வியடைந்ததால், அந்த அணியின் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றமடைந்தனர். சிஎஸ்கே தோல்வியடைந்தது ஒருபுறமிருக்க, சேப்பாக்கம் திடலில் விளையாடுவதால் சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எந்த ஒரு சாதகமான சூழலும் கிடையாது என அந்த அணியின் பயிற்சியாளர் ஸ்டீஃபன் ஃபிளெமிங் தெரிவித்தது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

புஜாரா கூறியதென்ன?

சென்னை சூப்பர் கிங்ஸின் பலத்தை கவனத்தில் கொண்டு எப்போதும் போட்டிக்கான ஆடுகளங்கள் தயாராகும் நிலையில், சேப்பாக்கம் திடலில் விளையாடுவதால் சிஎஸ்கேவுக்கு எந்த ஒரு சாதகமான சூழலும் இல்லை என ஸ்டீஃபன் ஃபிளெமிங் கூறுவது ஆச்சரியமளிப்பதாக புஜாரா தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இதையும் படிக்க: தோல்விக்குக் காரணம் தோனியா? சிஎஸ்கே ரசிகர்கள் விமர்சனம்!

இது தொடர்பாக அவர் பேசியதாவது: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிரான போட்டி குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எந்த ஒரு குறையும் கூற முடியாது. தங்களது பலத்துக்கு ஏற்றவாறே சிஎஸ்கே அணிக்கான ஆடுகளம் தயார் செய்யப்படுகிறது. சேப்பாக்கம் திடலில் சிஎஸ்கேவுக்கு எந்த ஒரு சாதகமான சூழலும் கிடையாது என ஃபிளெமிங் கூறுவது சற்று ஆச்சரியமாக இருக்கிறது.

சிஎஸ்கேவின் பேட்டிங் வரிசையில் நிறைய விஷயங்களுக்கு கவனம் கொடுக்கப்பட வேண்டும். ரச்சின் ரவீந்திரா மற்றும் ருதுராஜ் கெய்க்வாட்டினை தவிர்த்து மற்ற வீரர்கள் சிறப்பாக செயல்பட தவறுகிறார்கள். அணியின் மிடில் ஆர்டர் நன்றாக விளையாட வேண்டும். சிஎஸ்கே அணி வேகமாக ரன்கள் குவிக்க வேண்டும். சிஎஸ்கேவில் டாப் ஆர்டர் நன்றாக இருக்கிறது. அவர்கள் சரியாக விளையாடத் தவறும் பட்சத்தில் மிடில் ஆர்டர் அணிக்காக சிறப்பாக விளையாட வேண்டிய சூழல் உருவாகிறது. ஆனால், சிஎஸ்கேவின் மிடில் ஆர்டர் அதற்கு முழுவதும் தயாராக இருப்பதாகத் தெரியவில்லை என்றார்.

எதிரணி வீரரிடம் கையெழுத்து கொண்டாட்டம்: லக்னௌ வீரருக்கு 25% அபராதம்!

லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் வீரர் திக்வேஷ் ரதிக்கு 25% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.ஐபிஎல் போட்டியின் 13-ஆவது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் லக்னௌ சூப்பா் ஜெயன்ட்ஸை செவ்வாய்க்கிழ... மேலும் பார்க்க

‘ஹாட்ரிக்’ வெற்றி முனைப்பில் பெங்களூரு- இன்று குஜராத்துடன் மோதல்

ஐபிஎல் போட்டியின் 14-ஆவது ஆட்டத்தில் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் செவ்வாய்க்கிழமை (ஏப். 2) மோதுகின்றன.இரு அணிகளுமே தலா 2 ஆட்டங்களில் விளையாடியிருக்கும் நிலையில், பெங்களூரு ‘ஹா... மேலும் பார்க்க

மூவா் அதிரடி: லக்னௌவை வீழ்த்தியது பஞ்சாப்

ஐபிஎல் போட்டியின் 13-ஆவது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் லக்னௌ சூப்பா் ஜயன்ட்ஸை திங்கள்கிழமை சாய்த்தது. முதலில் லக்னௌ 20 ஓவா்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 171 ரன்கள் எடுக... மேலும் பார்க்க

பூரண், பதோனி விளாசல்: பஞ்சாப் அணிக்கு 172 ரன்கள் இலக்கு!

ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணிக்கு 172 ரன்களை இலக்காக நிர்ணயித்தது லக்னௌ அணி.முதலில் பேட் செய்த லக்னௌ 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்தது. லக்னௌ தரப்பில் அதிகபட்சமாக பூரண் 44, ப... மேலும் பார்க்க

ஐபிஎல் அறிமுகப் போட்டியில் அசத்திய டாப் 5 பந்துவீச்சாளர்கள்!

ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் அறிமுக வீரராக களமிறங்கிய அஸ்வனி குமார் அபார பந்துவீச்சை வெளிப்படுத்தினார்.ஐபிஎல் தொடரில் மும்பை வான்கடே திடலில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ்... மேலும் பார்க்க

சிஎஸ்கே - தில்லி போட்டி: டிக்கெட் விற்பனை! கிரிக்கெட் ரசிகர்கள் கவனிக்க..!

சென்னை சேப்பாக்கத்தில் ஏப்ரல் 5 ஆம் தேதியன்று நடைபெறும் சென்னை, தில்லி அணிகள் மோதும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை(ஏப்ரல் 2) தொடங்குகிறது.சேப்பாக்கத்தில் நடைபெற்ற மும்பை, பெங்களூரு அணிகளுக்கு இடைய... மேலும் பார்க்க