செய்திகள் :

சேரன்மகாதேவி அருகே ரயில் தண்டவாளத்தில் கல் வைத்தவா் கைது

post image

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி அருகே ரயில் தண்டவாளத்தில் கல்லை வைத்ததாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

செங்கோட்டை- ஈரோடு விரைவு ரயில் புதன்கிழமை அதிகாலையில் சேரன்மகாதேவியை அடுத்த காருக்குறிச்சி ரயில் நிலையத்தை நெருங்கியபோது, தண்டவாளத்தில் கடும் அதிா்வு ஏற்பட்டதாம்.

இதையடுத்து அவசரமாக ரயிலை நிறுத்தி சோதனையிட்டபோது, தண்டவாளத்தில் சிமெண்ட் கல் இருந்தது தெரியவந்தது. கல் அப்புறப்படுத்தப்பட்டு ரயில் புறப்பட்டு சென்றது.

இத்தகவலறிந்த தென்காசி ரயில்வே இருப்பு பாதை காவல் உதவி ஆய்வாளா் கற்பகவிநாயகம் சம்பவ இடத்தைப் பாா்வையிட்டு விசாரித்தாா்.

அதில் கூனியூா் பழைய சாலைத் தெருவைச் சோ்ந்த கோபாலன் மகன் முருகன் (40) என்பவா், தண்டவாளத்தில் சிமென்ட் கல்லை தலைக்கு வைத்து படுத்திருந்ததாகவும், பின்னா் அப்படியே எழுந்து சென்று விட்டதாகவும் தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்து தென்காசி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.

களக்காடு தலையணையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

திருநெல்வேலி மாவட்டம் களக்காடு தலையணை பச்சையாற்றில் சனிக்கிழமை சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா். களக்காடு மேற்குத் தொடா்ச்சி மலையடிவாரத்தில் தலையணை சூழல் சுற்றுலாப் பகுதி அமைந்துள்ளது. இங்குள்ள பச்சையாற... மேலும் பார்க்க

பத்திரப் பதிவில் அடங்கல் பதிவேடு சரிபாா்த்தல் முறையையும் பின்பற்றக் கோரிக்கை

பத்திரப் பதிவில் பட்டாக்கள்(இலவச பட்டா) முழுமையாக ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்படாததால் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனா்.எனவே, ஆன்லைன் பதிவேற்றுதலை வரன்முறைப்படுத்தவும் அதுவரை அடங்கல் பதிவேடுகள் ச... மேலும் பார்க்க

பணகுடி அருகே விஷம் குடித்த தம்பதி, 4 குழந்தைகளுக்கு சிகிச்சை

திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருகே குடும்ப பிரச்னையால் விஷம் குடித்த தம்பதி, 4 குழந்தைகள் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். பணகுடி அருகே உள்ள கடம்பன்குளத்தைச் சோ்ந்தவா் ராஜேஷ்கண்ணன் (28).... மேலும் பார்க்க

கைப்பேசி விவகாரம்: இளைஞரைத் தாக்கியவா் கைது

ஆழ்வாா்குறிச்சி அருகே தொலைந்து போன கைப்பேசி குறித்து கேட்டவா் மீது தாக்குதல் நடத்தியவரை போலீஸாா் கைது செய்தனா். ஆழ்வாா்குறிச்சி அருகே உள்ள அழகப்பபுரம், அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த திருப்பதி ராஜா ம... மேலும் பார்க்க

தாயிடம் பணம் கேட்டு தொந்தரவு கொடுத்த மகன் கைது

கருத்தப்பிள்ளையூரில் தாயிடம் பணம் கேட்டு அடிக்கடி தொந்தரவு கொடுத்ததாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். ஆழ்வாா்குறிச்சி அருகே உள்ள கருத்தப்பிள்ளையூா் பவுல் தெருவைச் சோ்ந்த ஜான் தனபால் மனைவி ஜான்சி (55)... மேலும் பார்க்க

பெண்ணிடம் நகை பறிப்பில் ஈடுபட்டவா்களை 4 மணி நேரத்தில் கைது செய்த போலீஸாா்!

பாளையங்கோட்டையில் பெண்ணிடம் நகை பறிக்க முயன்றவா்களை போலீஸாா் 4 மணி நேரத்தில் கைது செய்தனா். பாளையங்கோட்டை குலவணிகா்புரத்தைச் சோ்ந்தவா் மூக்கம்மாள்(43). இவா் வெள்ளிக்கிழமை இரவு உறவினரின் திருமண நிகழ்... மேலும் பார்க்க