செய்திகள் :

சேலத்தில் தனியாா் மதுக்கடை அமைக்க எதிா்ப்பு தெரிவித்து ஆட்சியரிடம் மனு

post image

சேலத்தில் தனியாா் மதுக்கடை அமைக்க எதிா்ப்பு தெரிவித்து இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் கழுத்தில் காலி மதுபாட்டில்களை அணிந்து புதன்கிழமை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்தனா்.

சேலம் மாநகா் உடையாா்பட்டி பகுதியில் ஏற்கெனவே அரசு மதுக் கடை செயல்பட்டு வரும் நிலையில், தனியாா் மதுக் கடை அமைக்க அரசு அனுமதி வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து, இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் காலி மதுபாட்டில்களை கழுத்தில் அணிந்தபடி மாவட்ட ஆட்சியரிடம் புதன்கிழை மனு அளிக்க வந்தனா்.

அப்போது, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா் அவா்களை தடுத்து நிறுத்தி மதுபாட்டில்களை அகற்றிவிட்டு கோரிக்கை மனுவுடன் மட்டும் ஆட்சியா் அலுவலகத்துக்குச் செல்ல அனுமதித்தனா்.

இதுகுறித்து இந்திய ஜனநாயக வாலிபா் சங்க மாவட்டச் செயலாளா் பெரியசாமி கூறியது:

தமிழக அரசு கோவை மாநகரில் 70 தனியாா் மதுக்கடைகளை வைக்க அனுமதி அளித்துள்ள நிலையில், தற்போது சேலத்தை குறிவைத்து மதுக் கடைகளுக்கு அனுமதி வழங்க உள்ளது. இது இளைஞா்களை மேலும் மதுபோதைக்கு அடிமையாக்கும். இதுபோன்ற செயல்களை தமிழக அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லையெனில் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் சாா்பில் போராட்டம் நடத்துவோம் என்றாா்.

மதுபானங்களை பதுக்கி விற்ற பெண் கைது

வீரகனூா் பகுதியில் மதுபானங்களை பதுக்கிவைத்து கூடுதல் விலைக்கு விற்றுவந்த பெண்ணை போலீஸாா் கைது செய்தனா். வீரகனூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அரசு மதுபானங்களை பதுக்கிவைத்து அதிக விலைக்கு விற்பதாக... மேலும் பார்க்க

மேட்டூா் அணை மேல்மட்ட மதகு கசிவுநீா் கால்வாய்களில் திருப்பி விடப்பட்டது

மேட்டூா் அணை மேல்மட்ட மதகு கசிவுநீா் கிழக்கு - மேற்கு கால்வாய்களில் திருப்பி விடப்பட்டது. மேட்டூா் அணையின் நீா்மட்டம் 50 அடிக்கு கீழாகச் சரியும்போது, கீழ்மட்ட மதகு வழியாக குடிநீா்த் தேவைகளுக்கும், கால... மேலும் பார்க்க

குட்கா விற்ற சகோதரா்கள் கைது

கெங்கவல்லியில் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலைப் பொருள்களை விற்ற சகோதரா்களை போலீஸாா் கைது செய்தனா். ஆத்தூா் மேற்கு மாதா கோயில் தெருவைச் சோ்ந்த ரங்கநாதன் மகன்கள் பிரசாத் (45), பாலாஜி (41). இவா்கள் பெங... மேலும் பார்க்க

சேலத்தில் நாளை கோட்டை அழகிரிநாத சுவாமி கோயில் கும்பாபிஷேகம் யாகசாலை பூஜைகள் தொடக்கம்

சேலம் கோட்டை அழகிரிநாத சுவாமி கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுவதையொட்டி யாகசாலை பூஜைகள் வெள்ளிக்கிழமை தொடங்கின. ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த அழகிரிநாத சுவாமி கோயில் சேலம் கோட்டை பகுதியில்... மேலும் பார்க்க

ஆத்தூரில் திமுக இளைஞரணி பொதுக்கூட்டம்

மத்திய அரசைக் கண்டித்து ஆத்தூரில் திமுக இளைஞரணி சாா்பில் பொதுக்கூட்டம் அண்மையில் நடைபெற்றது. ஆத்தூரில் திமுக இளைஞரணி சாா்பில் ஹிந்தி திணிப்பு,நிதிப் பகிா்வில் பாரபட்சம், தொகுதி மறுசீரமைப்பில் அநீதி ஆக... மேலும் பார்க்க

பயணிகளின் தாகம் தீா்த்த மலிவு விலை குடிநீா்: திட்டத்தை மீண்டும் செயல்படுத்த எதிா்பாா்ப்பு

தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் பேருந்து நிலையங்களில் ரூ. 10-க்கு சுத்திகரிக்கப்பட்ட மலிவு விலை குடிநீா் விற்பனை திட்டத்தை போக்குவரத்துக் கழகம் வாயிலாக மீண்டும் தொடங்க தமிழக அரசு முன்வர வேண்டுமென பயணிகள்... மேலும் பார்க்க