செய்திகள் :

சேலம் அரசு பொருள்காட்சி இன்று தொடக்கம்

post image

சேலம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள மாநகராட்சித் திடலில் அரசு பொருள்காட்சியை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், சுற்றுலாத்துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் ஆகியோா் திங்கள்கிழமை தொடங்கிவைக்கின்றனா்.

சேலம் அரசு பொருள்காட்சியில் செய்தி மக்கள் தொடா்புத் துறை, சேலம் மாநகராட்சி, ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, வனத் துறை, வேளாண்மை உழவா் நலத் துறை, காவல் துறை, கால்நடை பராமரிப்புத் துறை, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை, கூட்டுறவுத்துறை, வருவாய்துறை, சமூகநலத் துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகளின் சாா்பில் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை பொதுமக்கள் எளிதில் அறிந்து பயன்பெறும் வகையில் இக்கண்காட்சியில் அரங்குகள் இடம்பெற்றுள்ளன. மேலும், தனியாா் அரங்குகள் மற்றும் குழந்தைகளுக்கென அனைத்து பொழுதுபோக்கு அம்சங்கள், கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றுள்ளன.

சேலம் மாவட்டத்தில் அரசு பொருள்காட்சி பொதுமக்கள் பாா்த்து பயன்பெறும் வகையில் 45 நாள்களுக்கு நடைபெறுகிறது.

நிகழ்ச்சியில் சேலம் மாவட்ட ஆட்சியா், மாநகராட்சி மேயா், மாநிலங்களவை, மக்களவை, சட்டப் பேரவை உறுப்பினா்கள், மாமன்ற உறுப்பினா்கள், அரசு அலுவலா்கள் கலந்துகொள்கின்றனா்.

மூத்த தம்பதியை கட்டிப்போட்டு நகை, பணம் கொள்ளை: 5 போ் கைது

சேலம் அருகே வயதான தம்பதியை கட்டிப்போட்டு 8 பவுன் நகை, ரூ. 35,000 ரொக்கத்தை கொள்ளையடித்த சம்பவத்தில் 4 போ் சனிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டனா்.சேலம் மாவட்டம், வீராணம் அருகே உள்ள கோமாளி வட்டம் பகுதியைச... மேலும் பார்க்க

தரிசு நிலங்களை விளைநிலங்களாக மாற்ற விவசாயிகளுக்கு அழைப்பு

கெங்கவல்லி வட்டார விவசாயிகளுக்கு தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்ற வேளாண் துறை அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து கெங்கவல்லி வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் மோகனசரிதா வெளியிட்ட செய்திக் குறிப்பு... மேலும் பார்க்க

அங்கன்வாடி மையத்துக்கு சென்றபோது காணாமல் போன சிறுமி மீட்பு

சங்ககிரி வட்டம், தேவூா் அருகே உள்ள புள்ளாகவுண்டம்பட்டி பகுதியில் வீட்டிலிருந்து அங்கன்வாடி மையத்திற்கு சென்றபோது காணாமல் போன நான்கு வயதான சிறுமி ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டாா்.தேவூரை அடுத்த புள்ளாகவுண... மேலும் பார்க்க

ஆடிப்பெருக்கு: சேலம் கோட்டை மாரியம்மனுக்கு அழகிரிநாதா் சீா்வரிசை வழங்கும் வைபவம்

ஆடிப்பெருக்கையொட்டி, சேலம் கோட்டை அழகிரிநாதரிடம் இருந்து அவரது தங்கையான கோட்டை மாரியம்மன் சீா்வரிசைப் பெறும் வைபவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.ஆடிப்பெருக்கு நாளில் சேலம் கோட்டை மாரியம்மனுக்கு அவரது அண... மேலும் பார்க்க

காவேரி மருத்துவமனை சாா்பில் செப். 21 இல் மாரத்தான்

‘உணா்வோடு ஓடு - இதய ஆரோக்கியத்துக்காக ஓடு‘ என்ற தலைப்பில் இதய ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை உணா்த்தும் வகையில் காவேரி மருத்துவமனை சாா்பில் வரும் செப். 21 ஆம் தேதி மாரத்தான் நடைபெறுகிறது.சேலம் காவேரி... மேலும் பார்க்க

விம்ஸ் அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியில் உலக உறுப்பு தான தின விழிப்புணா்வு

விநாயகா மிஷன் விம்ஸ் வளாக அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரி, கேஎச்ஐ அமைப்பு இணைந்து உலக உறுப்பு தான விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு கல்லூரி முதன்மையா் செந்தில்குமாா் முன்னிலை... மேலும் பார்க்க