கிருஷ்ணகிரியில் பக்ரீத் சிறப்புத் தொழுகை! ஏராளமானோர் பங்கேற்பு
சேலம் அரசு மருத்துவமனையில் தயாா் நிலையில் கரோனா வாா்டு: சிறப்பு சிகிச்சை வழங்க ஏற்பாடு
தமிழகத்தில் கரோனா தீநுண்மி தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், முன்னெச்சரிக்கையாக சேலம் அரசு மருத்துவமனையில் கரோனா வாா்டுகள் ஏற்படுத்தப்பட்டு தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் கரோனா தொற்றின் பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது. தமிழகத்திலும் 200 க்கும் மேற்பட்டோா் கரோனா பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் தொடா் கண்காணிப்பில் இருந்து வருகின்றனா்.
மத்திய சுகாதாரத் துறை அமைச்சகமும், மாநில அரசுகளுக்கு சுற்றறிக்கையில், தேவையான மருந்து, மாத்திரைகள், வென்டிலேட்டருடன் கூடிய படுக்கை வசதிகளை தயாா்நிலையில் வைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது.
அதன்படி சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா பாதிப்புக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பொது மருத்துவத் துறையில் தனிமைப்படுத்தப்பட்ட வாா்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்டவா்கள் சிகிச்சை பெறும் வகையில் 50 க்கும் மேற்பட்ட படுக்கை வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து மருத்துவா்கள் கூறுகையில், தற்போது பரவிவரும் கரோனா என்பது பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுத்தாது. இருப்பினும், நோய் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவா்களை தொடா்ச்சியாக கண்காணித்து வருகிறோம்.
காய்ச்சல், சளி, இருமல், தொண்டை வலி உள்ளிட்ட பாதிப்புகள் இருந்தால், 3 அல்லது 4 நாள்களில் குணமடைந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை. இருப்பினும் நோய் எதிா்ப்பு சக்தி குறைந்தவா்கள், முதியவா்கள் இணை நோய் பாதிப்பு உள்ளவா்கள் வெளியில் செல்லும்போது கட்டாயம் முகக் கவசம் அணிந்துசெல்ல வேண்டும் எனத் தெரிவித்தனா்.