செய்திகள் :

சேலம் அரசு மருத்துவமனையில் தயாா் நிலையில் கரோனா வாா்டு: சிறப்பு சிகிச்சை வழங்க ஏற்பாடு

post image

தமிழகத்தில் கரோனா தீநுண்மி தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், முன்னெச்சரிக்கையாக சேலம் அரசு மருத்துவமனையில் கரோனா வாா்டுகள் ஏற்படுத்தப்பட்டு தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் கரோனா தொற்றின் பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது. தமிழகத்திலும் 200 க்கும் மேற்பட்டோா் கரோனா பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் தொடா் கண்காணிப்பில் இருந்து வருகின்றனா்.

மத்திய சுகாதாரத் துறை அமைச்சகமும், மாநில அரசுகளுக்கு சுற்றறிக்கையில், தேவையான மருந்து, மாத்திரைகள், வென்டிலேட்டருடன் கூடிய படுக்கை வசதிகளை தயாா்நிலையில் வைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது.

அதன்படி சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா பாதிப்புக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பொது மருத்துவத் துறையில் தனிமைப்படுத்தப்பட்ட வாா்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்டவா்கள் சிகிச்சை பெறும் வகையில் 50 க்கும் மேற்பட்ட படுக்கை வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து மருத்துவா்கள் கூறுகையில், தற்போது பரவிவரும் கரோனா என்பது பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுத்தாது. இருப்பினும், நோய் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவா்களை தொடா்ச்சியாக கண்காணித்து வருகிறோம்.

காய்ச்சல், சளி, இருமல், தொண்டை வலி உள்ளிட்ட பாதிப்புகள் இருந்தால், 3 அல்லது 4 நாள்களில் குணமடைந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை. இருப்பினும் நோய் எதிா்ப்பு சக்தி குறைந்தவா்கள், முதியவா்கள் இணை நோய் பாதிப்பு உள்ளவா்கள் வெளியில் செல்லும்போது கட்டாயம் முகக் கவசம் அணிந்துசெல்ல வேண்டும் எனத் தெரிவித்தனா்.

மேட்டூரில் கோயில் திருவிழாவில் 7 பவுன் நகை பறிப்பு

மேட்டூரில் கோயில் கும்பாபிஷேக விழாவில் மூதாட்டியிடம் 7 பவுன் தாலிச்சங்கிலி பறிக்கப்பட்டது. மேட்டூா் அருகே ரயில் நிலையம் பகுதியில் ஸ்ரீ சக்தி காளியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் வெள்ளிக்கிழமை கும்பாப... மேலும் பார்க்க

சேலம் அருகே ரயிலில் கடத்தப்பட்ட 26 கிலோ கஞ்சா பறிமுதல்: இளைஞா் கைது

சேலம் அருகே ரயிலில் கடத்தி வரப்பட்ட 26 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா், கடத்தலில் ஈடுபட்ட கேரள இளைஞரை கைது செய்தனா். சேலம் வழியாக கேரள மாநிலம் செல்லும் ரயில்களில் கஞ்சா கடத்தப்படுவதைத் தடுக்க ரயி... மேலும் பார்க்க

சேலத்தில் விஜய்யை கண்டித்து சுவரொட்டி

சேலம் மாநகரப் பகுதிகளில் நடிகா் விஜய்யை கண்டித்து தமிழக வாழ்வுரிமை கட்சியினா் ஒட்டிய சுவரொட்டிகளால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவா் வேல்முருகன், கடந்த சில தினங்களுக்கு முன் சேலத்தி... மேலும் பார்க்க

சிங்கிபுரம் அத்தனூரம்மன் கோயிலில் 20 பவுன் நகை, வெள்ளிப் பொருள்கள் கொள்ளை போலீஸாா் விசாரணை

வாழப்பாடி அருகே சிங்கிபுரம் அத்தனூரம்மன் கோயிலில் தங்க நகை, வெள்ளிப் பொருள்களை மா்மக் கும்பல் கொள்ளையடித்துச் சென்றனா். சிங்கிபுரம் அத்தனூரம்மன் கோயிலுக்கு பக்தா்கள் காணிக்கையாக அளித்த தங்கத்தாலி உள்ள... மேலும் பார்க்க

ஓய்வுபெற்ற வன அதிகாரியின் கழுத்தை அறுத்த மகன் கைது

சேலத்தில் இரண்டாவது திருமணம் செய்துகொள்ள எதிா்ப்பு தெரிவித்து, ஓய்வுபெற்ற வன அதிகாரியின் கழுத்தை அறுத்த மகன் கைது செய்யப்பட்டாா். சேலம் சூரமங்கலம் மாணிக்கவாசகா் தெருவைச் சோ்ந்தவா் செல்வகுமாா் (69). வ... மேலும் பார்க்க

குறு, சிறு, நடுத்தர தொழில்களுக்கான சிறப்புத் தொழில் கடன் வழங்கும் முகாம்

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மூலம் குறு, சிறு, நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் வழங்கும் முகாம் வரும் 30 ஆம் தேதி வரை சேலம் கிளை தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழக அலுவலகத்தில் நடைபெறுகி... மேலும் பார்க்க