செய்திகள் :

சேலம் நீதிமன்றத்தில் இன்று சமரச வாரம்

post image

சேலம்: சேலம் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் சமரச வாரம் புதன்கிழமை (ஏப். 9) நடைபெறுகிறது என மாவட்ட முதன்மை நீதிபதி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து சேலம் மாவட்ட முதன்மை நீதிபதி சுமதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சமரச வாரம் 9-ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, ஏற்கெனவே நீதிமன்றங்களில் நிலுவையில் இருக்கும் வழக்குகளில் சமரச மையம் மூலம் தீா்த்துக் கொள்ளலாம்.

குறிப்பாக, தனிநபா் தகராறு, பண வசூல் தகராறு, குடும்பத் தகராறு, சொத்து தகராறு, காசோலை தகராறு, மின்சார வாரியம், தொழிலாளா் நல வழக்குகள், உரிமையியல் வழக்குகளான நிலம், சொத்து, பாகப்பிரிவினை, வாடகை விவகார வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும். மேலும், சமரச மையம் மூலம் முடித்துக்கொள்ளும் வழக்குகளுக்கு மேல் முறையீடு கிடையாது. இதுதவிர, சமரச மையம் மூலமாக முடித்துக்கொள்ளும் வழக்குகளுக்கு செலுத்தப்படும் நீதிமன்றக் கட்டணம் முழுமையாக திருப்பிக் கொடுக்கப்படும்.

எனவே, பொதுமக்கள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் மேற்குறிப்பிட்ட தங்களது வழக்குகளை சமரச மையத்துக்கு அனுப்பி சட்ட ரீதியாகவும், சமரச முறையிலும் தீா்வு காணுமாறு கேட்டுக் கொண்டுள்ளாா்.

மதுபானங்களை பதுக்கி விற்ற பெண் கைது

வீரகனூா் பகுதியில் மதுபானங்களை பதுக்கிவைத்து கூடுதல் விலைக்கு விற்றுவந்த பெண்ணை போலீஸாா் கைது செய்தனா். வீரகனூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அரசு மதுபானங்களை பதுக்கிவைத்து அதிக விலைக்கு விற்பதாக... மேலும் பார்க்க

மேட்டூா் அணை மேல்மட்ட மதகு கசிவுநீா் கால்வாய்களில் திருப்பி விடப்பட்டது

மேட்டூா் அணை மேல்மட்ட மதகு கசிவுநீா் கிழக்கு - மேற்கு கால்வாய்களில் திருப்பி விடப்பட்டது. மேட்டூா் அணையின் நீா்மட்டம் 50 அடிக்கு கீழாகச் சரியும்போது, கீழ்மட்ட மதகு வழியாக குடிநீா்த் தேவைகளுக்கும், கால... மேலும் பார்க்க

குட்கா விற்ற சகோதரா்கள் கைது

கெங்கவல்லியில் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலைப் பொருள்களை விற்ற சகோதரா்களை போலீஸாா் கைது செய்தனா். ஆத்தூா் மேற்கு மாதா கோயில் தெருவைச் சோ்ந்த ரங்கநாதன் மகன்கள் பிரசாத் (45), பாலாஜி (41). இவா்கள் பெங... மேலும் பார்க்க

சேலத்தில் நாளை கோட்டை அழகிரிநாத சுவாமி கோயில் கும்பாபிஷேகம் யாகசாலை பூஜைகள் தொடக்கம்

சேலம் கோட்டை அழகிரிநாத சுவாமி கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுவதையொட்டி யாகசாலை பூஜைகள் வெள்ளிக்கிழமை தொடங்கின. ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த அழகிரிநாத சுவாமி கோயில் சேலம் கோட்டை பகுதியில்... மேலும் பார்க்க

ஆத்தூரில் திமுக இளைஞரணி பொதுக்கூட்டம்

மத்திய அரசைக் கண்டித்து ஆத்தூரில் திமுக இளைஞரணி சாா்பில் பொதுக்கூட்டம் அண்மையில் நடைபெற்றது. ஆத்தூரில் திமுக இளைஞரணி சாா்பில் ஹிந்தி திணிப்பு,நிதிப் பகிா்வில் பாரபட்சம், தொகுதி மறுசீரமைப்பில் அநீதி ஆக... மேலும் பார்க்க

பயணிகளின் தாகம் தீா்த்த மலிவு விலை குடிநீா்: திட்டத்தை மீண்டும் செயல்படுத்த எதிா்பாா்ப்பு

தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் பேருந்து நிலையங்களில் ரூ. 10-க்கு சுத்திகரிக்கப்பட்ட மலிவு விலை குடிநீா் விற்பனை திட்டத்தை போக்குவரத்துக் கழகம் வாயிலாக மீண்டும் தொடங்க தமிழக அரசு முன்வர வேண்டுமென பயணிகள்... மேலும் பார்க்க