செய்திகள் :

சைஃப்கோ சிமென்ட்ஸின் 60% பங்குகளை கைபற்றிய ஜே.கே சிமென்ட்!

post image

புதுதில்லி: ஜம்மு-காஷ்மீரை தளமாகக் கொண்ட சைஃப்கோ சிமென்ட்ஸின் பெரும்பான்மையான 60 சதவிகித பங்குகளை ஜே.கே சிமென்ட் ரூ.150 கோடிக்கு கையகப்படுத்தியுள்ளது.

இதன் மூலம், ஸ்ரீநகரில் உற்பத்தி நடவடிக்கைகளை அமைக்கும் முதல் பெரிய சிமென்ட் உற்பத்தியாளராக ஜே.கே. குழும நிறுவனம் உருவெடுத்துள்ளது.

இதனையடுத்து, சைஃப்கோ சிமென்ட்ஸின் நிர்வாக கட்டுப்பாட்டை தன் வசம் வந்துள்ளதாக தெரிவித்துள்ளது ஜே.கே சிமென்ட்.

கையகப்படுத்தல் குறித்து தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்ட ஜே.கே. சிமென்ட் லிமிடெட்டின் இணை நிர்வாக இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான மாதவ்கிருஷ்ண சிங்கானியா, இந்த கையகப்படுத்துதலின் மூலம், ஜம்மு காஷ்மீரில் ஒரு வலுவான இருப்பை உருவாக்க நாங்கள் உறுதிபூண்டுள்ளோம் என்றார்.

அதே வேளையில், சைஃப்கோ சிமென்ட்ஸ் குடும்பத்தை ஜேகே சிமென்ட் குழுமத்தில் வரவேற்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் என்றார் ஜேகே சிமென்ட் நிர்வாக இயக்குநர் ராகவ்பத் சிங்கானியா.

உலகளவில் வெள்ளை சிமென்ட் உற்பத்தி செய்யும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாகும் ஜேகே சிமென்ட்ஸ், மொத்த வெள்ளை சிமென்ட் உற்பத்தி திறன் 1.12 மில்லியன் டன்னுடன் சுவர் புட்டி 1.33 மில்லியன் டன் உற்பத்தி செய்து வருகிறது.

இதையும் படிக்க: தங்கத்தின் மதிப்பில் 85% வரை கடன்! - ஆா்பிஐ அனுமதி

தங்கம் வாங்குவோருக்கு மகிழ்ச்சியான செய்தி! விலை குறைந்தது!!

சென்னை: சென்னையில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,200 குறைந்துள்ளதால், தங்கம் வாங்குவோர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.ஜூன் 7ஆம் தேதி சனிக்கிழமை காலை சென்னையில் ஆபரணத் தங்கம் விலை ஒரு கிராமுக்கு ரூ.150 குற... மேலும் பார்க்க

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ.85.68 ஆக நிறைவு!

மும்பை: ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை எதிர்பார்த்ததை விட அதிகமாக 50 அடிப்படை புள்ளிகள் குறைத்ததைத் தொடர்ந்து, இன்றைய வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ... மேலும் பார்க்க

ரெப்போ விகிதம் குறைப்பு எதிரொலி: பங்குச் சந்தை உயர்ந்து முடிவு!

மும்பை: ரிசர்வ் வங்கி எதிர்பார்த்ததை விட 50 அடிப்படை புள்ளிகள் வட்டி விகிதங்களைக் குறைத்து, பொருளாதாரத்தை ஆதரிக்கும் வகையில் பணப்புழக்கத்தை வழங்க வங்கிகளுக்கான ரொக்க இருப்பு விகிதத்தைக் குறைத்ததைத் தொ... மேலும் பார்க்க

தொடர்ந்து 3-வது நாளாக ஏற்றத்தில் பங்குச் சந்தை! சென்செக்ஸ் 800 புள்ளிகள் உயர்வு!

தொடர்ந்து 3-வது நாளாக பங்குச் சந்தை இன்று(வெள்ளிக்கிழமை) ஏற்றத்துடன் தொடங்கி வர்த்தகமாகி வருகின்றது.மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 81,434.24 என்ற புள்ளிகளில் தொடங்கியது. காலை... மேலும் பார்க்க

தங்கம் வாங்க இன்று நல்ல நாள்.. ஏன் தெரியுமா? விலைதான்!

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.73,040-க்கு விற்பனையான நிலையில், வெள்ளிக்கிழமை விலையில் மாற்றமின்றி விற்பனையாகி வருகிறது.புதன்கிழமை தங்கம் விலை ரூ.8... மேலும் பார்க்க

ரெப்போ வட்டி விகிதம் 0.5% குறைப்பு! வீடு, வாகன கடனுக்கான வட்டி குறைய வாய்ப்பு!

ரெப்போ வட்டி விகிதத்தை 0.5 சதவிகிதம் குறைப்பதாக இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.ரிசர்வ் வங்கியின் ஜூன் மாதத்துக்கான நிதிக் கொள்கை ஆலோசனைக் கூட்டம் ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தலைமையில் புதன்கிழமை முத... மேலும் பார்க்க