செய்திகள் :

சைபர் தாக்குதல் எதிரொலி: ஜப்பானில் ‘பீர்’ தட்டுப்பாடு!

post image

ஜப்பானின் பழம்பெருமை வாய்ந்த பீர் தயாரிப்பு நிறுவனங்களுள் ஒன்றான ‘ஆசாஹி’ மீது இணையவழி(சைபர்) தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதால் அந்நிறுவனத்தின் செயல்பாடுகள் தொடர்ந்து ஐந்தாவது நாளாக இன்றும்(வெள்ளிக்கிழமை) முடங்கியுள்ளன. இதனால், ஜப்பானில் ஆசாஹி நிறுவன பொருள்களுக்கு கடைகளில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

ஜப்பானில் கடந்த 1949-இல் நிறுவப்பட்ட ஆசாஹி குழுமம், பீர் தயாரிப்பில் உலகப் புகழ் பெற்று விளங்குகிறது. அந்நிறுவனத்தின் முக்கிய தயாரிப்புகளான சூப்பர் ட்ரை பீர், பாட்டில்ட் டீ (புட்டிகளில் அடைத்து விற்கப்படும் தேநீர்) மட்டுமில்லாது பிற தயாரிப்புகளான குழந்தைகளுக்கான உணவுகள், மிட்டாய்கள் உள்ளிட்ட பல்வேறு உணவுப் பொருள்களும் ஜப்பானிய அங்காடிகளை பன்னெடுங்காலமாக அலங்கரித்து வருகின்றன.

இந்தநிலையில், அந்நிறுவனத்தின் மென்பொருள் தொழில்நுட்பத்தில் கடந்த திங்கள்கிழமை சைபர் தாக்குதலால் குளறுபடி ஏற்பட்டுள்ளது. இதனால் பொருள்கள் தயாரிப்பு, பதப்படுத்துதல், ஏற்றுமதி உள்பட அனைத்துவித செயல்பாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

ஜப்பானில் விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தாலும், ஐரோப்பிய நாடுகளுக்கான வணிகம் பாதிப்படையவில்லை என்று ஆசாஹி நிறுவனம் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணையவழி(சைபர்) தாக்குதல் எப்படி எதனால் நடந்தது? என்பதைக் கண்டறிய முற்பட்டிருப்பதாகவும், நிறுவன செயல்பாடுகளைக் மீண்டும் இயல்புநிலைக்கு கொண்டு வர தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகவும், எனினும், இதற்கு கூடுதல் கால அவகாசம் தேவைப்படலாம் என்றும் ஆசாஹி குழுமம் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

Most of the Asahi Group's factories in Japan have been at a standstill since Monday, after the attack hit its ordering and delivering systems

இத்தாலியில் சாலை விபத்தில் 2 இந்தியர்கள் பலி

இத்தாலியில் நிகழ்ந்த சாலை விபத்தில் 2 இந்தியர்கள் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இத்தாலியின் க்ராசிட்டோவில் உள்ள ஆரேலியா மாநில சாலையில் ஆசிய சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற வேனும் மினி பேருந... மேலும் பார்க்க

தலிபான் வெளியுறவு அமைச்சர் இந்தியா வருவது உறுதி!

ஆப்கானிஸ்தான் தலிபான் அரசின் வெளியுறவுத் துறை அமைச்சர் அமிர் கான் முத்தாகி இந்தியா வருவகிறார் என்பதை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது. ஆப்கானிஸ்தானில், தலிபான்கள் தலைமையிலான ஆட்சி அ... மேலும் பார்க்க

இந்திய படங்களைத் திரையிட மறுக்கும் கனடாவின் திரையரங்குகள்! ஏன்?

கனடாவில் பல்வேறு திரையரங்குகள் மீதான தாக்குதல்களைத் தொடர்ந்து, முன்னணி நிறுவனங்கள் இந்திய படங்கள் திரையிடுவதை நிறுத்தியுள்ளன.கனடாவின் டொராண்டோ நகரத்தில் உள்ள ஃபிலிம்.சிஏ சினிமாஸ் நிறுவனத்தின் திரையரங்... மேலும் பார்க்க

தாக்குதல் தொடர்கிறது! காஸாவுக்கான உதவிகளையும் தடுத்து நிறுத்தும் இஸ்ரேல்!!

இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போரை நிறுத்த பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில் அதற்கிடையே காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதல் தொடர்ந்து வருகிறது.இஸ்ரேல் - ஹமாஸ் இடையே கடந்த இரு ஆண்டுகளுக்கும் மேலாக போர் நடைபெற... மேலும் பார்க்க

மியான்மரில் 2வது நாளாக இன்றும் நிலநடுக்கம்!

மியான்மரில் இரண்டாவது நாளாக இன்றும் நிலநடுக்கம் ஏற்பட்டதாகத் தேசிய நிலஅதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக நிலஅதிர்வு மைய அறிக்கையின்படி, இந்திய நேரப்படி வெள்ளிக்கிழமை காலை 09.54 மணிக்கு நிலநடுக... மேலும் பார்க்க

அமெரிக்காவின் அவமதிப்பை இந்தியர்கள் ஏற்க மாட்டார்கள்! புதின்

அமெரிக்காவின் அவமதிப்பை இந்திய மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் தெரிவித்துள்ளார்.ரஷியாவின் சோச்சி நகரில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ... மேலும் பார்க்க