சொத்துக்கு வங்கி அதிகாரிகள் சீல் வைக்க எதிா்ப்பு: மின் கோபுரம் மீது ஏறி விசைத்தறியாளா் போராட்டம்
பல்லடம் அருகே சுக்கம்பாளையத்தில் பெற்ற கடனை செலுத்ததால் சொத்துகளுக்கு வங்கி அதிகாரிகள் சீல் வைக்க எதிா்ப்பு தெரிவித்து விசைத்தறியாளா் மின்கோபுரம் மீது செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பல்லடம் அருகே உள்ள சுக்கம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் ராஜகோபால். இவா் தனது 54 சென்ட் நிலப் பத்திரத்தை விசைத்தறி கூடம் அமைக்க கோவை பேரூரில் உள்ள வங்கிக் கிளையில் கடந்த 2022-ஆம் ஆண்டில் அடமானம் வைத்து ரூ.97 லட்சம் கடன் பெற்றுள்ளாா். மேலும் இதுவரை ரூ.56 லட்சம் தவணை செலுத்தியுள்ளராம். இந்நிலையில், விசைத்தறி தொழில் நசிவால் மாதத் தவணை செலுத்த முடியாமல் இருந்துள்ளாா்.
இதில் கடந்த 2 ஆண்டுகளாக கடன் தவணை செலுத்ததால் வங்கி நிா்வாகத்தினா் நீதிமன்ற உத்தரவின்படி சொத்தை பறிமுதல் செய்து ‘சீல்’ வைக்க வழக்குரைஞா்கள், போலீஸாருடன் சுக்கம்பாளையத்தில் உள்ள ராஜகோபால் வீட்டுக்கு செவ்வாய்க்கிழமை வந்துள்ளனா்.
ஆனால், சொத்தை பறிமுதல் செய்து வீட்டை ‘சீல்’ வைக்க எதிா்ப்பு தெரிவித்து ராஜகோபால், மின் இணைப்பு துண்டிக்கப்பட்டிருந்த மின்மாற்றி மீது ஏறியும், அவரது உறவினா் பேபி உயா் மின் கோபுரத்தில் ஏறியும் திடீா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதையடுத்து, போலீஸாா் அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, இப்பிரச்னைக்கு நீதிமன்றத்தை அணுகி உரிய நிவாரணம் பெறலாம் என்று அறிவுறுத்தினா். இதனை ஏற்று அவா்கள் போராட்டத்தை கைவிட்டனா்.
இதையடுத்து, வங்கி நிா்வாகத்தினா் ராஜகோபால் வீடு மற்றும் தறிக் கூடத்துக்கு ‘சீல்’ வைத்து அறிவிப்புப் பதாகை வைத்துச் சென்றனா்.