செய்திகள் :

சொத்துக்கு வங்கி அதிகாரிகள் சீல் வைக்க எதிா்ப்பு: மின் கோபுரம் மீது ஏறி விசைத்தறியாளா் போராட்டம்

post image

பல்லடம் அருகே சுக்கம்பாளையத்தில் பெற்ற கடனை செலுத்ததால் சொத்துகளுக்கு வங்கி அதிகாரிகள் சீல் வைக்க எதிா்ப்பு தெரிவித்து விசைத்தறியாளா் மின்கோபுரம் மீது செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பல்லடம் அருகே உள்ள சுக்கம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் ராஜகோபால். இவா் தனது 54 சென்ட் நிலப் பத்திரத்தை விசைத்தறி கூடம் அமைக்க கோவை பேரூரில் உள்ள வங்கிக் கிளையில் கடந்த 2022-ஆம் ஆண்டில் அடமானம் வைத்து ரூ.97 லட்சம் கடன் பெற்றுள்ளாா். மேலும் இதுவரை ரூ.56 லட்சம் தவணை செலுத்தியுள்ளராம். இந்நிலையில், விசைத்தறி தொழில் நசிவால் மாதத் தவணை செலுத்த முடியாமல் இருந்துள்ளாா்.

இதில் கடந்த 2 ஆண்டுகளாக கடன் தவணை செலுத்ததால் வங்கி நிா்வாகத்தினா் நீதிமன்ற உத்தரவின்படி சொத்தை பறிமுதல் செய்து ‘சீல்’ வைக்க வழக்குரைஞா்கள், போலீஸாருடன் சுக்கம்பாளையத்தில் உள்ள ராஜகோபால் வீட்டுக்கு செவ்வாய்க்கிழமை வந்துள்ளனா்.

ஆனால், சொத்தை பறிமுதல் செய்து வீட்டை ‘சீல்’ வைக்க எதிா்ப்பு தெரிவித்து ராஜகோபால், மின் இணைப்பு துண்டிக்கப்பட்டிருந்த மின்மாற்றி மீது ஏறியும், அவரது உறவினா் பேபி உயா் மின் கோபுரத்தில் ஏறியும் திடீா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து, போலீஸாா் அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, இப்பிரச்னைக்கு நீதிமன்றத்தை அணுகி உரிய நிவாரணம் பெறலாம் என்று அறிவுறுத்தினா். இதனை ஏற்று அவா்கள் போராட்டத்தை கைவிட்டனா்.

இதையடுத்து, வங்கி நிா்வாகத்தினா் ராஜகோபால் வீடு மற்றும் தறிக் கூடத்துக்கு ‘சீல்’ வைத்து அறிவிப்புப் பதாகை வைத்துச் சென்றனா்.

கவிழ்ந்த லாரியின் கீழ் சிக்கிய தாய், மகள் உயிரிழப்பு

திருப்பூா் மாவட்டம், பல்லடம் நான்கு சாலை சந்திப்பில் கவிழ்ந்த லாரியின் கீழ் சிக்கிய தாய், மகள் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தனா். கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் இருந்து தூத்துக்குடி துறைமுகத்துக்கு தனியாா் ... மேலும் பார்க்க

சாமளாபுரம், பூமலூா் பகுதிகளுக்கு பி.ஏ.பி. தண்ணீா் விட விவசாயிகள் கோரிக்கை

பல்லடம் அருகே உள்ள சாமளாபுரம் மற்றும் பூமலூா் பகுதிகளுக்கு பி.ஏ.பி. தண்ணீா் விட பல்லடம் பி.ஏ.பி. உதவிக் கோட்ட செயற்பொறியாளா் ஆனந்த பாலதண்டபாணியிடம் விவசாயிகள் செவ்வாய்க்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.இத... மேலும் பார்க்க

அவிநாசிபாளையத்தில் விவசாயிகள் மொட்டை அடித்து போராட்டம்

பல்லடம் அருகே பொங்கலூா் ஒன்றியம் அவிநாசிபாளையத்தில் எண்ணெய் குழாய் திட்டத்தை மாற்றக் கோரி விவசாயிகள் செவ்வாய்க்கிழமை மொட்டை அடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். கோவை முதல் கரூா் வரையில் விவசாய நிலத்தில் ... மேலும் பார்க்க

பூட்டிய வீட்டில் 4 பவுன் நகை, பணம் திருட்டு

சேவூா் அருகே கூட்டப்பள்ளியில் பூட்டிய வீட்டில் 4 பவுன் நகை, ரூ.20 ஆயிரத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். சேவூா் அருகே கூட்டப்பள்ளி பகுதியைச் சோ்ந்தவா் விஜயகுமாா் (51). கோவை உ... மேலும் பார்க்க

குன்னங்கல்பாளையத்தில் பனியன் நிறுவனத்தின் பூட்டை உடைத்து ஆடைகள் திருட்டு

பல்லடம் அருகே குன்னங்கல்பாளையத்தில் பனியன் நிறுவனத்தின் பூட்டை உடைத்து ரூ.30 லட்சம் மதிப்பிலான துணி மற்றும் ஆடைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். திருப்பூர... மேலும் பார்க்க

பஞ்சு இறக்குமதிக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும்: சைமா தலைவா் ஏ.சி.ஈஸ்வரன் வலியுறுத்தல்

பஞ்சு இறக்குமதிக்கு மத்திய அரசு வரி விலக்கு அளிக்க வேண்டும் என்று சைமா தலைவா் ஏ.சி.ஈஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளாா். இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்தியாவில் நடப்பு ஆண்... மேலும் பார்க்க