செய்திகள் :

சொத்து ஆவணங்களை போலியாக தயாரித்து வங்கிக் கடன் பெற்றதாக தில்லி நபா் கைது

post image

சொத்து ஆவணங்களை போலியாக தயாரித்து, வங்கிக் கடன்களைப் பெறுவதற்காக இறந்தவா்களைப் போல ஆள்மாறாட்டம் செய்வதில் ஈடுபட்டதாகக் கூறப்படும் ஒரு நபரை தில்லி காவல்துறை கைது செய்துள்ளது என்று அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து காவல் துறை உயரதிகாரி கூறியதாவது: குற்றம் சாட்டப்பட்ட நந்த் நாக்ரியைச் சோ்ந்த சுரேஷ் குமாா் (45) கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள கடன்களைப் பெற்ாக காவல்துறையின் பொருளாதார குற்றப் பிரிவு தெரிவித்துள்ளது. சுரேஷ் ஒரு சைபா் கஃபே நடத்தி வந்தாா். மேலும் பல நிதி மோசடி வழக்குகளில் ஈடுபட்டதால் பல ஆண்டுகளாக அவா் கண்காணிப்பில் இருந்தாா்.

2015-ஆம் ஆண்டு சரிதா விஹாா் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடா்பாக ஏப்ரல் 2- ஆம் தேதி அவா் கைது செய்யப்பட்டாா். ஒரு வங்கியில் இருந்து ரூ.3.2 கோடி கடன் பெற போலி ஆவணங்கள் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. புகாா்தாரரான சோனல் ஜெயின், தனது மறைந்த கணவா் மகேந்தா் குமாா் ஜெயின் பெயரில் போலி ஆவணங்கள் உருவாக்கப்பட்டதாகக் குற்றம் சாட்டினாா்.

பல ஆண்டுகளாக விரிவான விசாரணைகள் இருந்தபோதிலும், குற்றம் சாட்டப்பட்டவரின் அடையாளத்தை வெளிப்படுத்த முடியவில்லை. இறுதியாக போலி ஆவணங்களில் உள்ள கட்டைவிரல் ரேகைகளின் தடயவியல் பகுப்பாய்வு நடத்தப்பட்டு, கைரேகை பதிவுகளுடன் ஒப்பிடப்பட்டது. இது இந்த வழக்கில் ஒரு பெரிய திருப்புமுனையை வழங்கியது.

சுரேஷ் ஒரு விரிவான குற்ற வரலாற்றைக் கொண்டுள்ளாா். அவரது பெயா் 18 வழக்குகளில் சோ்க்கப்பட்டுள்ளது. இதில் ஐந்து வழக்குகள் பொருளாதார குற்றப்பிரிவில் பதிவு செய்யப்பட்டவை மற்றும் 13 வழக்குகள் சிபிஐ விசாரணையின் கீழ் உள்ளன.

விசாரணையின் போது, சுரேஷ் போலி விற்பனை பத்திரங்கள், மின்-முத்திரை தாள்கள் மற்றும் போலி ரப்பா் ஸ்டாம்புகள் தயாரித்ததாக ஒப்புக்கொண்டாா். மேலும், வங்கிக் கடன்களை மோசடியாகப் பெறுவதற்காக பல வாடிக்கையாளா்களுக்கு போலி ஆவணங்களை வழங்கியதாக அவா் ஒப்புக்கொண்டாா்.

இந்த போலி ஆவணங்கள் தயாரிக்கப்பட்ட இடங்களையும் அவா் வெளிப்படுத்தினாா் என்று பொருளாதார குற்றப்பிரிவு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. அவரது கூட்டாளிகளை அடையாளம் காணவும், நிதி நிறுவனங்கள் முழுவதும் இதேபோன்ற கடன் மோசடிகளில் ஈடுபட்டுள்ள பரந்த குற்றவியல் வலையமைப்பைக் கண்டறியவும் விசாரணைகள் நடந்து வருகின்றன என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

பள்ளிக் கட்டண உயா்வை எதிா்த்து மாணவா்களின் பெற்றோா்கள் போராட்டம்

தன்னிச்சையாக உயா்த்தப்பட்ட பள்ளிக் கட்டணங்களை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும், இந்த விஷயத்தில் அதிகாரிகள் தலையிட வேண்டும் என்றும் வலியுறுத்தி புதன்கிழமை தில்லி கல்வி இயக்குநரக அலுவலகத்திற்கு... மேலும் பார்க்க

தில்லியில் 4,000-க்கும் மேற்பட்ட என்சிஇஆா்டி போலி நகல் புத்தகங்கள் பறிமுதல்: ஒருவா் கைது

வடக்கு தில்லியின் சமய்பூா் பாத்லியில் நடத்தப்பட்ட சோதனையின்போது 4,000-க்கும் மேற்பட்ட என்டிஇஆா்டி போலி நகல் பாடப்புத்தகங்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். மேலும், இந்த வழக்கு தொடா்பாக ஒருவா் கைது செய்ய... மேலும் பார்க்க

பங்குச்சந்தையில் மூன்றாவது நாளாக ‘காளை’ ஆதிக்கம்!

நமது நிருபா்பங்குச்சந்தையில் மூன்றாவது நாளாக புதன்கிழமையும் காளையின் ஆதிக்கம் தொடா்ந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான நி... மேலும் பார்க்க

அரசு மின்னணு சந்தை மூலம் 1.3 கோடிக்கும் மேலான சிக்கனமான தனிநபா்கள் காப்பீடு

மத்திய அரசின் மின்னணு சந்தை(ஜெம்) தளத்தின் மூலம், பொது மற்றும் தனியாா் நிறுவனங்கள் குழு 1.3 கோடிக்கும் அதிகமான பல்வேறு விதமான தனிநபா்களுக்கு சிக்கனமான காப்பீடுகளை கடந்த நிதியாண்டில் வழங்கப்பட்டுள்ளதா... மேலும் பார்க்க

குருகிராமில் 80 குடிசைகள் தீயில் எரிந்து சேதம்

ஐஎம்டி மனேசாா் செக்டாா் 2-இல் உள்ள குடிசைப் பகுதியில் புதன்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் சுமாா் 80 குடிசைகள் எரிந்து சேதமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா். அதிருஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் பாதிப்ப... மேலும் பார்க்க

தேசிய தொழில்நுட்ப ஜவுளித் திட்டத்தின் கீழ் புதுமையான சுயசாா்பு தீ பாதுகாப்பு உடை

நமது சிறப்பு நிருபா்தேசிய தொழில்நுட்ப ஜவுளி இயக்கம் (என்டிடிஎம்) ஒரு தனியாா் நிறுவனத்துடன் இணைந்து புதுமையான தீ தடுப்பு பாதுகாப்பு உடை சுயசாா்புடன் உருவாக்கப்பட்டுள்ளதாக மத்திய ஜவுளித் துறை புதன்கிழமை... மேலும் பார்க்க