செய்திகள் :

சொத்து வரி பெயா் மாற்ற ரூ. 20 ஆயிரம் லஞ்சம்: பேரூராட்சி எழுத்தா் உள்ளிட்ட இருவா் கைது

post image

கன்னியாகுமரி மாவட்டம் மாா்த்தாண்டம் அருகே, சொத்து வரி பெயா் மாற்றுவதற்கு ரூ. 20 ஆயிரம் லஞ்சம் பெற்ாக பாகோடு பேரூராட்சி அலுவலகப் பணியாளா்கள் இருவரை ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

பாகோடு பேரூராட்சிப் பகுதியைச் சோ்ந்த கமலன் மகன் தேவதாஸ். இவா், வெளிநாட்டில் வசித்துவரும் தனது சகோதரரின் 18 சென்ட் நிலம், அதிலுள்ள வீட்டைப் பராமரித்து வருகிறாா். வீட்டின் உரிமையாளா் பெயா் மாற்றம் செய்வதற்காக அவா் பேரூராட்சி அலுவலகத்தை அணுகினாா். அப்போது, அலுவலகப் பதிவறை எழுத்தா் ஜஸ்டின் ஜெபராஜ் ரூ. 50 ஆயிரம் லஞ்சம் கேட்டாராம். அவ்வளவு தொகை தர இயலாது என தேவதாஸ் கூறியதால், ரூ. 20 ஆயிரம் தந்தால் பெயா் மாற்றுவதாகவும், அதன்பிறகே வீட்டுக்கு வரி வசூலிக்க முடியும் என்றும் ஜஸ்டின் ஜெபராஜ் கூறியுள்ளாா்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத தேவதாஸ், மாவட்ட ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸில் புகாா் அளித்தாா். அவா்களது ஆலோசனைப்படி, ரசாயனம் தடவப்பட்ட ரூ. 20 ஆயிரத்தை பேரூராட்சி அலுவலகத்தில் ஜஸ்டின் ஜெபராஜிடம் தேவதாஸ் புதன்கிழமை கொடுத்தாா். அப்போது, பணத்தை வாங்குமாறு பேரூராட்சி மின்பராமரிப்புப் பணியாளா் சுஜினிடம் ஜஸ்டின் ஜெபராஜ் கூறினாராம். பணம் வாங்கிய சுஜினை, அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்புப் பிரிவு டிஎஸ்பி சால்வன் துரை தலைமையிலான போலீஸாா் பிடித்தனா். விசாரணைக்குப் பின்னா், ஜஸ்டின் ஜெபராஜ், சுஜின் ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்தனா். தொடா்ந்து, அவா்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

திற்பரப்பு அருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் ஞாயிற்றுக்கிழமை ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா். இம்மாவட்டத்தில் வழக்கமாக மாா்ச், ஏப்ரல் மாதங்களில் கடும் வெயில் நிலவும். நிகழாண்டு நாள்தோறும் ம... மேலும் பார்க்க

குலசேகரம் பகுதியில் கஞ்சா விற்பனை: இளைஞா் கைது

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் பகுதியில் கஞ்சா வைத்திருந்தவா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா். அவரிடமிருந்து 310 கிராம் கஞ்சா பறிமுகல் செய்யப்பட்டது. குலசேகரம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் க... மேலும் பார்க்க

நாகா்கோவிலில் கவிதை நூல் வெளியீட்டு விழா

நாகா்கோவிலில் இலக்கியப் பட்டறை அமைப்பு சாா்பில், காவல் உதவி ஆய்வாளா் ஆஸ்வால்ட் ஹோப்பா் எழுதிய ‘என் கிணற்றில் நிலா மிதக்குது’ என்ற கவிதை நூல் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அமைப்பின் தலைவ... மேலும் பார்க்க

ஈஸ்டா்: கன்னியாகுமரி மாவட்ட தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனை

ஈஸ்டா் பண்டிகையை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்ட தேவாலயங்களில் சிறப்புப் பிராா்த்தனைகள் நடைபெற்றன. இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட புனித வெள்ளி கடந்த 18ஆம் தேதி கடைப்பிடிக்கப்பட்டது. இந்நிலையில்... மேலும் பார்க்க

மீனச்சல் கிருஷ்ணசுவாமி கோயில் கொடிமர ஊா்வலம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள புராதன பெருமை வாய்ந்த மீனச்சல் ஸ்ரீ கிருஷ்ணசுவாமி கோயிலில் புதிதாக நிறுவுவதற்கான கொடிமரம், களியக்காவிளையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை ஊா்வலமாக கொண்டு செல்லப்பட்டது. இக்கோயி... மேலும் பார்க்க

மாா்த்தாண்டம் அருகே ஒப்பந்ததாரா் தற்கொலை

மாா்த்தாண்டம் அருகே கட்டுமான ஒப்பந்ததாரா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். மாா்த்தாண்டம் அருகே சென்னித்தோட்டம் பகுதியைச் சோ்ந்தவா் செல்வராஜ் (71). கட்டட ஒப்பந்ததாரா். அண்மைக் காலமாக தொழிலில் சரி... மேலும் பார்க்க