செய்திகள் :

சொந்த அணியை நம்பாத வருண் சக்கரவர்த்தி..! மனம் திறந்த ரோஹித் சர்மா!

post image

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தமிழகத்தைச் சேர்ந்த வருண் சக்கரவர்த்தியைப் பாராட்டி பேசியுள்ளார். அவரது பந்துவீச்சு நுணுக்கங்களை சொந்த அணியிடம்கூட காண்பிப்பதில்லை எனக் கூறியுள்ளார்.

சாம்பியன்ஸ் டிராபி போட்டிகள் நேற்று (பிப்.19) பாகிஸ்தானில் தொடங்கின. இந்தியாவிற்கான போட்டிகள் துபையில் நடைபெறவிருக்கின்றன.

இந்தியாவின் முதல் போட்டி இன்று மதியம் தொடங்குகிறது. வங்கதேசத்துடன் விளையாடவிருக்கிறது.

இந்திய அணியில் ஜஸ்பிரீத் பும்ரா இல்லாதது பின்னடைவாக பார்க்கப்பட்டாலும் ஷமி, வருண் சக்கரவர்த்தி இருப்பது ஆறுதலாக இருக்கிறது.

ஒரேயொரு ஒருநாள் போட்டி மட்டுமே விளையாடியுள்ள வருண் லிஸ்ட் ஏ தொடரில் அசத்தியுள்ளார். 24 போட்டிகளில் 60 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.

சொந்த அணியை நம்பாத வருண் சக்கரவர்த்தி

இந்திய ஒருநாள் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறியதாவது:

வலைப்பயிற்சியில் வருண் வித்தியாசமான பந்துகளை அதிகமாக வீசவில்லை. ஒரேமாதிரியான பந்துகளை மட்டுமே வீசினார். அநேகமாக எங்களிடம் கூட அவரது மாறுபட்ட பந்துகளை காண்பிக்க விரும்பவில்லை போலிருக்கிறது. ஆனால், அதுவும் நல்ல விஷயம்தான்.

வருண் சக்கரவர்த்தி

வருண் தனக்கென்று சில ஆயுதங்களை வைத்துள்ளார். அதை களத்தில் மட்டுமே உபயோகிக்க நினைக்கிறார். அவர் அப்படி செய்தால் அவரை விடவும் நான் மிகவும் மகிழ்வேன் என்றார்.

அவரிடம் ஏதோ புதியதாக இருக்கிறது. அதனால்தான் அவர் இங்கு அணியில் இருக்கிறார். கடந்த 8-9 மாதங்களாக சிறப்பாக பந்து வீசியுள்ளார். இந்தியாவுக்காக மிகப்பெரிய போட்டிகளில் அவரால் என்ன செய்ய முடியும் என்பதைப் பார்க்கவே அவரை இங்குக் கூட்டி வந்துள்ளோம் எனக் கூறினார்.

சாம்பியன்ஸ் டிராபி: ஆப்கனை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபார வெற்றி!

சாம்பியன்ஸ் டிராபியில் ஆப்கனை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபார வெற்றி பெற்றது.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் கராச்சியில் நடைபெற்ற இன்றையப் போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் ... மேலும் பார்க்க

எல்லீஸ் பெர்ரி விளாசல்: மும்பை அணிக்கு 168 ரன்கள் இலக்கு!

மும்பை அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது. 3-வது மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட்டில் முதல் கட்ட ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில் 2-வது கட்ட லீக் ஆட்டங்கள் பெங்களூ... மேலும் பார்க்க

அணியில் பிரதான பந்துவீச்சாளர்கள் இல்லை, ஆனால்... ஸ்டீவ் ஸ்மித் கூறுவதென்ன?

ஆஸ்திரேலிய அணியின் பிரதான வேகப் பந்துவீச்சாளர்கள் இல்லாமல் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடவுள்ளது குறித்து அந்த அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பேசியுள்ளார்.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் ... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் போட்டியை வென்று கொடுக்கும் வீரர்கள் இல்லை: பாக். முன்னாள் வீரர்

பாகிஸ்தானைக் காட்டிலும் இந்திய அணியில் அதிக அளவிலான போட்டியை வென்று கொடுக்கும் வீரர்கள் இருப்பதாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ஷகித் அஃப்ரிடி தெரிவித்துள்ளார்.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் துப... மேலும் பார்க்க

இந்தியாவுக்கு எதிரான போட்டிக்கான அழுத்தத்தில் இருக்கிறோமா? பாக். வீரர் பதில்!

மற்ற அணிகளுக்கு எதிரான போட்டியைப் போன்றே இந்தியாவுக்கு எதிரான போட்டியையும் பார்ப்பதாக பாகிஸ்தான் வேகப் பந்துவீச்சாளர் ஹாரிஸ் ரௌஃப் தெரிவித்துள்ளார்.வழக்கமாக இந்தியா - பாகிஸ்தான் போட்டி என்றாலே ரசிகர்க... மேலும் பார்க்க

மனைவியைப் பிரிந்தார் சஹால்..! ரூ.60 கோடி ஜீவனாம்சம் கேட்டாரா தனஸ்ரீ வர்மா?

இந்திய கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சாஹல் மற்றும் அவரது மனைவி தனஸ்ரீ வர்மா இருவரும் பரஸ்பர முறையில் விவகாரத்து பெற்று பிரிவதாக முடிவெடுத்துள்ளனர். இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக இருந்தவர... மேலும் பார்க்க