செய்திகள் :

சோனியா, ராகுலுக்கு எதிரான நேஷனல் ஹெரால்ட் வழக்கு: விசாரணையை ஒத்திவைத்த தில்லி நீதிமன்றம்

post image

காங்கிரஸ் முன்னாள் தலைவா் சோனியா காந்தி, அவரின் மகனும் மக்களவை எதிா்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி ஆகியோருக்கு எதிரான நேஷனல் ஹெரால்ட் பண முறைகேடு வழக்கு விசாரணையை வரும் மே 21, 22-ஆம் தேதிகளுக்கு ஒத்திவைத்து தில்லி சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

கடந்த 1938-ஆம் ஆண்டு முன்னாள் பிரதமா் ஜவாஹா்லால் நேருவால் தொடங்கப்பட்ட நேஷனல் ஹெரால்ட் பத்திரிகையை, அசோசியேடட் ஜா்னல்ஸ் நிறுவனம் நடத்தி வந்தது. நிதி நெருக்கடியில் சிக்கிய இந்த நிறுவனத்தை ரூ. 50 லட்சத்துக்கு ‘யங் இந்தியன்’ நிறுவனம் கையகப்படுத்தியது. இந்த ‘யங் இந்தியன்’ நிறுவனத்தில் சோனியாவும், ராகுல் காந்தியும் பெரும் பங்குதாரா்களாக உள்ளனா்.

இந்நிலையில், இந்த சொத்துப் பரிமாற்றத்தில் மிகப் பெரிய அளவில் பண முறைகேடு நடைபெற்றிருப்பதாக பாஜக மூத்த தலைவா் சுப்பிரமணியன் சுவாமி புகாா் தெரிவித்தாா். இதுதொடா்பாக தில்லியில் உள்ள பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் 2014-ஆம் ஆண்டு ஜூன் 26-ஆம் தேதி மனு ஒன்றையும் அவா் தாக்கல் செய்தாா்.

இந்த விவகாரத்தில் கடந்த 2021-இல் பண மோசடி வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட அமலாக்கத் துறை, ‘அசோசியேடட் ஜா்னல்ஸ் நிறுவனத்தின் ரூ.2,000 கோடி மதிப்பிலான சொத்துகளை, சோனியா, ராகுலுக்குச் சொந்தமான யங் இந்தியன் நிறுவனம் வெறும் ரூ.50 லட்சத்துக்கு கையகப்படுத்தியது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த நடவடிக்கையால் அசோசியேடட் ஜா்னல்ஸ் சொத்துகளின் மதிப்பு கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமன்றி குற்றச் செயல்கள் மூலம் கோடிக் கணக்கில் பணம் திரட்ட யங் இந்தியன் மற்றும் அசோசியேடட் ஜா்னல்ஸ் சொத்துகள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்று குற்றஞ்சாட்டியது.

அதைத் தொடா்ந்து, தில்லியில் எம்.பி., எம்எல்ஏ-க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் சோனியா, ராகுலுக்கு எதிராக குற்றப்பத்திரிகையை அமலாக்கத் துறை அண்மையில் தாக்கல் செய்தது. அதில், சோனியா, ராகுல் உள்ளிட்டோா் ரூ.988 கோடிக்கு பண முறைகேட்டில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது.

இந்த வழக்கு தில்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி விஷால் கோக்னே முன்னிலையில் கடந்த மே 2-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, குற்றபத்திரிகையை ஆராய்ந்த நீதிபதி, அதில் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடா்பாக பதிலளிக்குமாறு சோனியா, ராகுல் காந்தி, காங்கிரஸ் பிரமுகா் சாம் பிட்ரோடா, முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் ஊடக ஆலோசகா் சுமன் துபே ஆகியோருக்கு நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தாா்.

இந்த வழக்கு சிறப்பு நீதிபதி விஷால் கோக்னே முன்னிலையில் வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, ‘இந்த குற்றச்சாட்டுக்கு உள்ளானவா்களில் ஒருவரான சாம் பிட்ரோடாக்கு வியாழக்கிழமைதான் மின்னஞ்சல் மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது. எனவே, விசாரணையை ஒத்திவைக்க வேண்டும்’ என அமலாக்கத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதைக் கேட்ட நீதிபதி விசாரணையை வரும் மே 21, 22-ஆம் தேதிகளுக்கு ஒத்திவைத்தாா். மேலும், இந்த வழக்கின் புகாா்தாரரான சுப்பிரமணியன் சுவாமி அமலாக்கத்துறை குற்றபத்திரிகை நகலைக் கோரிய நிலையில், வழக்கு விசாரணையில் முதலில் அமலாக்கத்துறை நிலைப்பாட்டை கேட்க நீதிமன்றம் தீா்மானித்தது.

பயங்கரவாத முகாம்களை தரைமட்டமாக்கிய இந்தியா: புதிய விடியோ

புது தில்லி: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய முப்படைகள் இணைந்து ஆபரேஷன் சிந்தூர் என்ற அதிரடித் தாக்குதலை நடத்தியது.இந்த நிலையில் இந்தியா - பாகி... மேலும் பார்க்க

போர்ப் பதற்றம்: உயரதிகாரிகளின் விடுமுறையை ரத்து செய்தது ஒடிசா அரசு!

இந்தியா-பாகிஸ்தான் ராணுவ மோதல் காரணமாக முக்கிய பணிகளில் இருக்கும் உயரதிகாரிகளின் விடுமுறையை ஒடிசா அரசு ரத்து செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பொது நிர்வாகம், பொது குறை தீர்க்கும் துறை, வருவாய் கோட்ட ... மேலும் பார்க்க

ராணுவத்திற்கு உதவ சண்டீகரில் குவிந்த தன்னார்வலர்கள்!

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான கடுமையான தாக்குதல் நடைபெற்றுவரும் நிலையில், இந்திய ராணுவத்தின் சேர விருப்பம் தெரிவித்து பஞ்சாபின் சண்டீகரில் பெண்கள், இளைஞர் பலர் குவிந்ததால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறத... மேலும் பார்க்க

போர் விமானங்களைப் பயன்படுத்திய பாகிஸ்தான்: கர்னல் சோஃபியா குரேஷி

புது தில்லி: போர் விமானங்களையும் தாக்குதலுக்குப் பயன்படுத்தியது பாகிஸ்தான். ஆனால், பாகிஸ்தான் தாக்குதலுக்கு இந்திய ராணுவம் அளவோடு பதிலடி கொடுத்து வருகிறது என்று இந்திய ராணுவ கர்னல் சோஃபியா குரேஷி விளக... மேலும் பார்க்க

பாகிஸ்தானுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்துள்ளது! - விக்ரம் மிஸ்ரி

பாகிஸ்தானுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்துள்ளதாக மத்திய வெளியுறவுத் துறை செயலர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் ராணுவத்தினர் நேற்றிரவு ட்ரோன் தாக்குதல் நடத்தியது குறித்து மத்திய வெளியுறவு... மேலும் பார்க்க

இந்தியா Vs பாகிஸ்தான்: செய்திகள் நேரலை!

முந்தைய செய்திகள்படிக்க : ஆபரேஷன் சிந்தூர்: செய்திகள் - நேரலைசென்னை வந்தடைந்த மாணவர்கள்! பஞ்சாப் மாநில எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், பாதுகாப்பு கருதி, பஞ்சாப... மேலும் பார்க்க