செய்திகள் :

ஜம்முவில் கனமழை: பாறை உருண்டதில் தாய், மகன் பலி!

post image

ஜம்முவில் மூன்றாவது நாளாகப் பெய்துவரும் கனமழைக்கு தாய், மகன் ஆகிய இருவர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஜம்முவின் உயரமான பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டதால் 270 கி.மீ நீளமுள்ள ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை உள்பட பல்வேறு சாலைகள் மூடப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை உதம்பூர் மாவட்டத்தில் உள்ள மௌங்கரி அருகே ஒரு மலையிலிருந்து பாறை உருண்டதில் இருசக்கர வாகனத்தில் சென்ற ஷானோ தேவி (50) மற்றும் அவரது மகன் ரகு(25) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும் கதுவா மாவட்டத்தின் ராஜ்பாக் பகுதியில் உள்ள உஜ் ஆற்றிலிருந்து 11 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் காவல்துறை மற்றும் மாநில பேரிடர் மீட்புப்படை கூட்டுக் குழுவால் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஜம்முவில் உள்ள நிகி தாவி பகுதியில் இன்று காலை காவல்துறை மற்றும் துணை ராணுவப் படையினரால் கூட்டு நடவடிக்கையில் ஓட்டுநர் ஒருவரும் மீட்கப்பட்டார்.

வியாழக்கிழமை மாலை 7 மணியளவில் நெடுஞ்சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது, இதனால் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சிக்கித் தவித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ராகி நல்லாவில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக படோட்-தோடா சாலையில் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பதேர்வா-சம்பா, முகல் சாலை மற்றும் சிந்தன் சாலை உள்ளிட்ட பல சாலைகளில் கடும் பனிப்பொழிவு காரணமாக மூடப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகரிப்பு!

இந்தியாவின் மொத்த நாட்டு உள்நாட்டு உற்பத்தி அதிகரித்திருப்பதாக தேசிய புள்ளியியல் அலுவலகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.கடந்த நிதியாண்டின் (2024 -25) இரண்டாவது காலாண்டில் 5.6 சதவிகிதமாக இருந்த மொத்த உள்... மேலும் பார்க்க

உ.பி.: சூட்கேஸில் பெண்ணின் சடலம் கண்டெடுப்பு

உ.பி.யின் ஜான்பூரில் சூட்கேஸில் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம், ஜான்பூர் நகர் கோட்வாலி பகுதியில் வாய்க்காலில் வீசப்பட்ட சிவப்பு நிற சூட்கேஸ்... மேலும் பார்க்க

ஐடி ஊழியர் தற்கொலை: நேரலையில் மனைவி மீது குற்றச்சாட்டு!

மனைவி ஏற்படுத்திய மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்துகொள்வதாகக் கூறி நேரலையில் பதிவு செய்து ஐடி ஊழியர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். உ.பி. மாநிலத்தின் ஆக்ராவில் உள்ள டிஃபன்ஸ் காலனியில் வசிப்பவர் மானவ்... மேலும் பார்க்க

பாஜகவின் புதிய தேசியத் தலைவர் யார்? கட்சிக்குள் தொடரும் குழப்பம்!

பாஜகவின் தேசியத் தலைவரை நியமிக்கும் பணியில் மேலும் தொய்வு ஏற்படலாம் என்று அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.பாஜகவின் தற்போதைய தேசியத் தலைவராக ஜெ.பி. நட்டா பதவி வகிக்கிறார். இவர் 2019 ஆம் ஆண்டில் பாஜகவின்... மேலும் பார்க்க

கோவா வரும் சுற்றுலா பயணிகள் குறைந்ததற்கு இட்லி, சாம்பார் தான் காரணம்!

நமது நாட்டின் மிகச் சிறந்த சுற்றுலா தலங்களில் ஒன்றான கோவாவுக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கைக் குறைந்ததற்கு இட்லி, சாம்பார், வடா பாவ் மற்றும் உக்ரைன் போர்தான் காரணம் என்று பாஜக எம்எல்ஏ கூறியிருக்கிறார். மேலும் பார்க்க

மணிப்பூரில் கிளர்ச்சியாளர்கள் சூப்பாக்கிச் சூடு; யாருக்கும் காயம் இல்லை

இம்பால் கிழக்கு மாவட்டத்தில் உள்ள மைதேயி மத வழிபாட்டு தலம் அருகிலுள்ள மலைகளில் இருந்து கிளர்ச்சியாளர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.மைதேயின் புனிதத் தலமான கோங்பா மருவுக்கு பக... மேலும் பார்க்க