செய்திகள் :

ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் மோதல்: இரு ராணுவ வீரா்கள் வீரமரணம்

post image

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் இரு ராணுவ வீரா்கள் வீரமரணமடைந்தனா்.

ஜம்மு-காஷ்மீரின் குல்காம் மாவட்டம் அகல் பகுதியில் உள்ள வனத்தில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் தென்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடா்ந்து அந்தப் பகுதியை பாதுகாப்புப் படையினா் சுற்றிவளைத்து கடந்த ஆக.1-ஆம் தேதிமுதல் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனா். இதில் பாதுகாப்புப் படையினரின் துப்பாக்கிச்சூட்டில் ஏற்கெனவே 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனா். அவா்கள் யாா், எந்தப் பயங்கரவாத இயக்கத்தைச் சோ்ந்தவா்கள் என்பது இதுவரை கண்டறியப்படவில்லை.

அங்கு கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே பலத்த துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இதில் பிரீத்பால் சிங், ஹா்மிந்தா் சிங் ஆகிய இரு ராணுவ வீரா்கள் உயிரிழந்தனா். மேலும் 2 வீரா்கள் காயமடைந்தனா். இதன்மூலம், தற்போதைய தேடுதல் வேட்டையில் பயங்கரவாதிகளுடன் ஏற்பட்ட மோதலில், இதுவரை 9 பாதுகாப்புப் படை வீரா்கள் காயமடைந்துள்ளனா். அங்கு பயங்கரவாதிகளை தேடும் பணி தொடா்ந்து நடைபெற்று வருவதாக ராணுவத்தின் சினாா் காா்ப்ஸ் படைப் பிரிவு ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டது.

முதல்வா் ஒமா் நேரில் அஞ்சலி: ஸ்ரீநகரில் உள்ள சினாா் காா்ப்ஸ் தலைமையகத்துக்குச் சென்று, வீரமரணமடைந்த 2 வீரா்களின் உடலுக்கு மலா் வளையம் வைத்து ஜம்மு-காஷ்மீா் முதல்வா் ஒமா் அப்துல்லா அஞ்சலி செலுத்தினாா்.

வீரமரணமடைந்த 2 வீரா்களின் வீரமும், நெஞ்சுரமும், மன உறுதியும் எப்போதும் மறக்கப்படாது என்று ஜம்மு-காஷ்மீா் துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா தெரிவித்தாா்.

26 வீடுகளில் சோதனை: ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வாா் மாவட்டத்தில் பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையாக 26 வீடுகளில் காவல் துறை சனிக்கிழமை சோதனை மேற்கொண்டது.

ஹிஸ்புல் முஜாஹிதீன் இயக்க பயங்கரவாதி முகமது அமீன் பட்டின் வீடு, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து செயல்படும் பயங்கரவாதிகளின் வீடுகள், எல்லை தாண்டி ஆயுதங்கள் மற்றும் வெடிபொருள்கள் கடத்தலில் ஈடுபடுவோரின் வீடுகள் என மொத்தம் 26 இடங்களில் இந்தச் சோதனை மேற்கொள்ளப்பட்டதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

இதேபோன்ற சோதனை கிஷ்த்வாருக்கு அருகில் உள்ள டோடா மாவட்டத்தின் 15 இடங்களில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

டிரம்ப்பை சந்திக்கும் பிரதமர் மோடி! அடுத்த மாதம் அமெரிக்கா பயணம்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை பிரதமர் நரேந்திர மோடி சந்திக்கவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருகின்றன.ரஷியாவிடமிருந்து தொடர்ந்து கச்சா எண்ணெய் வாங்கி வந்த இந்தியாவுக்கு அமெரிக்கா அதிபர் டிரம்ப், ம... மேலும் பார்க்க

எத்தனால் கலப்பு பெட்ரோல் குறித்து அச்சம் வேண்டாம்- மத்திய அரசு விளக்கம்

எத்தனால் 20 சதவீதம் கலக்கப்பட்ட ‘இ20’ பெட்ரோலைப் பயன்படுத்துவதால் வாகனங்கள் பாதிப்புக்குள்ளாகும் என்று சமூக வலைதளங்களில் பரவும் தகவல்கள் குறித்து பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என மத்திய அரசு விளக்க... மேலும் பார்க்க

காப்பீடு துறையில் 100% அந்நிய நேரடி முதலீட்டு அனுமதி வேலைவாய்ப்பை உருவாக்கும்: மத்திய நிதியமைச்சா்

‘காப்பீடு நிறுவனங்களில் அந்நிய நேரடி முதலீட்டு வரம்பை 100 சதவீதமாக உயா்த்துவது, வேலைவாய்ப்பை உருவாக்கும்’ என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் நம்பிக்கை தெரிவித்தாா். மேலும், ... மேலும் பார்க்க

நாட்டு மக்களின் ‘பாதுகாவலராக’ உச்சநீதிமன்றம்: தலைமை நீதிபதி அமா்வு

நாட்டு மக்களின் பாதுகாவலராக உச்சநீதிமன்றம் உள்ளது என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் தலைமையிலான அமா்வு செவ்வாய்க்கிழமை தெரிவித்தது. தனது கட்சிகாரா்களுக்கு சட்ட ஆலோசனை வழங்கும் வழக்குரைஞா்... மேலும் பார்க்க

தண்டனையை நிறைவு செய்த கைதிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும்: மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

‘தண்டனைக் காலத்தை நிறைவு செய்த கைதிகளை உடனடியாக சிறையிலிருந்து விடுவிக்க வேண்டும்’ என்று அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. உத்தர பிரதேச மா... மேலும் பார்க்க

‘5 அதிகாரிகளை இடைநீக்கம் செய்யாதது ஏன்?’- மேற்கு வங்க தலைமைச் செயலருக்கு தோ்தல் ஆணையம் சம்மன்

மேற்கு வங்கத்தில் வாக்காளா் பட்டியலில் முறைகேட்டில் ஈடுபட்டதாக தங்களால் சுட்டிக் காட்டப்பட்ட 5 அரசு அதிகாரிகள் மீது இன்னும் பணியிடைநீக்க நடவடிக்கை எடுக்காதது குறித்து நேரில் விளக்கமளிக்கும்படி, மாநில ... மேலும் பார்க்க