செய்திகள் :

ஜம்மு - காஷ்மீரில் பஹல்காம் உள்ளிட்ட 16 சுற்றுலாத் தலங்கள் மீண்டும் திறப்பு!

post image

பயங்கரவாதத் தாக்குதல்களுக்குப் பிறகு ஜம்மு - காஷ்மீரிலுள்ள சுற்றுலாத் தலங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.

ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களிலுள்ள ஏராளமான பூங்காக்கள் மக்களின் வருகைக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.

பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களைத் தொடர்ந்து, ஜம்மு - காஷ்மீரிலுள்ள ஏராளமான சுற்றுலாத் தலங்கள் மூடப்பட்டன. இதனால், சுற்றுலாத் துறையை பெரிதும் சார்ந்திருந்த உள்ளூர்வாசிகளின் இயல்பு வாழ்க்கையானது கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளானது.

இந்நிலையில், ஜம்மு - காஷ்மீரின் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, ஜம்முவில் 8 மற்றும் காஷ்மீரில் 8 என முதற்கட்டமாக மொத்த 16 பூங்காக்களைத் திறக்க உத்தரவிட்டார்.

பூங்காக்கள் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு தற்போது சுற்றுலாப் பயணிகள் வரும் நிலையில் அவர்களை உள்ளூர்வாசிகள் உற்சாகத்தோடு வரவேற்பதாகக் கூறப்படுகிறது.

பயங்கரவாதத் தாக்குதல் நடைபெற்ற ஆனந்த்நாக் மாவட்டத்தில், பஹல்காமின் பெதாப் பள்ளத்தாக்கு மற்றும் பஹல்காம் சந்தைக்கு அருகிலுள்ள பூங்காக்கள் உள்ளிட்ட ஏரளமான இடங்களில் இன்று (ஜூன் 17) முதல் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மக்களின் பாதுகாப்புக்காக அங்குள்ள அனைத்து சுற்றுலாத் தலங்களிலும் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இத்துடன், நீண்டகால இடைவெளிக்கு பின்னர் வருகைத் தரும் சுற்றுலாப் பயணிகளை ஆனந்த்நாக்-ன் வெரிநாக் பூங்காவில் பள்ளிக்குழந்தைகள் வரவேற்றனர்.

முன்னதாக, கடந்த ஏப்.22 ஆம் தேதியன்று பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 26 அப்பாவி சுற்றுலாப் பயணிகள் படுகொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க:அகமதாபாத் விபத்து: 144 பேரின் டிஎன்ஏ உறுதி செய்யப்பட்டது!

கடற்கரைக்குச் சென்ற கல்லூரி மாணவியை 10 பேர் கும்பல் பாலியல் வன்கொடுமை: அனைவரும் கைது!

ஒடிஸாவில் 10 இளைஞர்களால் கல்லூரி மாணவியொருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் சம்பந்தப்பட்ட 10 பேரும் இன்று(ஜூன் 17) கைது செய்யப்பட்டதாக காவல் துறை தெரிவித்துள்ளது. ஒடிஸாவின் கஞ்சம் மாவட்டத்தில... மேலும் பார்க்க

அகமதாபாத் விபத்து: 163 உடல்கள் அடையாளம் காணப்பட்டன; 124 உடல்கள் ஒப்படைப்பு

அகமதாபாத் விமான விபத்தில் சிக்கியவர்களில் 163 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு அவற்றில், 124 உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. விமான விபத்தில் பல உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு மிகு... மேலும் பார்க்க

6 சர்வதேச விமானங்களை ரத்து செய்த ஏர் இந்தியா!

ஏர் இந்தியா நிறுவனம் இன்று 6 விமானங்களை ரத்து செய்துள்ளது. அமிர்தசரஸ் - லண்டன், தில்லி - துபை இடையே இயக்கப்படும் சர்வதேச விமானங்களும் இதில் அடங்கும்.அகமதாபாத்தில் ஏர் இந்தியாவுக்குச் சொந்தமான போயிங் வ... மேலும் பார்க்க

சென்னை உள்ளிட்ட 4 நகரங்களில் அமலாக்கத்துறை சோதனை: ரூ.160 கோடி சொத்துகள் முடக்கம்

மும்பை: சென்னை உள்ளிட்ட 4 நகரங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் ரூ.160 கோடி சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. இது குறித்து, அமலாக்கத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதா... மேலும் பார்க்க

மேலும் 2 விமானங்கள் இன்று ரத்து: ஏர் இந்தியா

புது தில்லி: தில்லியிலிருந்து பாரீ்ஸ் புறப்படவிருந்த ஏர் இந்தியாவின் ட்ரீம்லைனர் ஏஐ143 விமானம் இன்று(ஜூன் 17) திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. அகமதாபாத் விமான விபத்தைக் கருத்திற்கொண்டு அனைத்து போயிங் ... மேலும் பார்க்க

பிகாரில் புதியதாக 6 விமான நிலையங்கள்! அமைச்சரவை ஒப்புதல்!

பிகாரில் புதியதாக 6 நகரங்களில் விமான நிலையம் அமைப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. பிகாரில் புதியதாக 6 நகரங்களில் விமான நிலையம் அமைப்பதற்கு, மாநில விமானப் ப... மேலும் பார்க்க