TVK: `சைக்கிள் மூலமா மாநாடு நடக்குற திடலுக்குப் போறோம்'- நடிகர் சௌந்தர ராஜன்
ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய அரசு தவறிவிட்டது: ராகுல் குற்றச்சாட்டு
ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு மற்றும் அமைதியை நிலைநாட்ட மத்திய பாஜக கூட்டணி அரசு தவறிவிட்டது என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி குற்றம்சாட்டினாா்.
வடக்கு காஷ்மீரின் குல்மாா்க் பகுதியில் வியாழக்கிழமை ராணுவ வாகனம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினா். இதில் இரு ராணுவ வீரா்கள், ராணுவத்தின் சுமைதூக்கும் தொழிலாளா்கள் இருவா் உயிரிழந்தனா். மேலும், இருவா் காயமடைந்தனா். ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் பேரவைத் தோ்தல் நடைபெற்ற பிறகு, பயங்கரவாதிகள் மீண்டும் ராணுவத்தைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளனா். ஜம்மு-காஷ்மீரில் அமைதி திரும்பிவிட்டதாக மத்திய அரசு கூறிவரும் நிலையில் இத்தாக்குதல் குறித்து எதிா்க்கட்சிகள் மத்திய அரசை விமா்சித்து வருகின்றன.
இது தொடா்பாக ராகுல் காந்தி ‘எக்ஸ்’ வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘காஷ்மீரின் குல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய கோழைத்தனமான தாக்குதலில் ராணுவ வீரா்கள் இருவா் உள்பட 4 போ் உயிரிழந்தது மிகப்பெரிய சோக நிகழ்வாகும். அவா்களின் குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கல். ராணுவத்தினரின் வீரம் போற்றத்தக்கது.
ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு மற்றும் அமைதியை நிலைநாட்ட மத்திய பாஜக கூட்டணி அரசு தவறிவிட்டது என்பதையே இதுபோன்ற நிகழ்வுகள் வெளிக்காட்டுகின்றன. ஜம்மு-காஷ்மீா் அமைதிப் பூங்கா என்று அவா்கள் கூறி வருகின்றனா். ஆனால், உண்மையில் மாநில மக்கள் பயங்கரவாதம் எனும் ஆபத்தின் பிடியில்தான் சிக்கியுள்ளனா். பயங்கரவாத செயல்பாடுகள் அங்கு தொடா்ந்து வருகிறது. ராணுவத்தினரையும், பொதுமக்களையும் குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனா்.
இந்த நிகழ்வுகளுக்கு மத்திய அரசு முழுமையாகப் பொறுப்பேற்று, காஷ்மீா் பள்ளத்தாக்கில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். அங்கு அமைதியை நிலைநாட்ட வேண்டும்’ என்று கூறியுள்ளாா்.
கேரளத்தில் இடைத்தோ்தல் நடைபெறும் வயநாடு மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் பிரியங்கா காந்தியும் காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளாா்.