செய்திகள் :

ஜம்மு - காஷ்மீரில் மீண்டும் மேகவெடிப்பு: 4 பேர் பலி; 6 பேர் காயம்!

post image

ஜம்மு-காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் உள்ள ஜோத் காட்டி என்ற கிராமத்தில் இன்று(ஆக. 17) அதிகாலை மேகவெடிப்பு ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 4 பேர் பலியாகினர் மற்றும் 6 பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

ஒரே இரவில் பெய்த கனமழையால், அந்தக் கிராமத்திற்குச் செல்லும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டப் பகுதிக்கு செல்ல தீவிர முயற்சிகள் எடுக்கப்பட்டு, உள்ளூர் தன்னார்வலர்களின் உதவியுடன் காவல்துறை மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் ஆகியோரின் கூட்டு முயற்சியால், சம்பவ இடத்திற்கு சென்று மீட்புப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

இதுவரை 4 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், காயமடைந்த 6 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மாவட்ட நிர்வாகம் நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருகிறது, மேலும் மக்கள் விழிப்புடன் இருக்கவும், நீர்நிலைகளுக்கு அருகில் செல்வதைத் தவிர்க்கவும் வலியுறுத்தியுள்ளது.

முன்னதாக, ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் உள்ள சோசிடி கிராமத்தில் கடந்த வியாழக்கிழமை ஏற்பட்ட மேகவெடிப்பைத் தொடர்ந்து, வெள்ளத்தில் சிக்கி மாயமான 82 பேரைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த இயற்கை பேரழிவால் இதுவரை 60 பேர் உயிரிழந்ததுடன் 100-க்கும் மேற்பட்டோா் காயமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: அயர்லாந்தில் இந்தியர்கள் மீது தொடரும் இனவெறித் தாக்குதல்கள்!

A cloudburst struck the remote village of Jod Ghati in Jammu and Kashmir’s Kathua district during the early hours of Sunday, claiming four lives and leaving six others injured, officials confirmed.

குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன்

குடியரசு துணைத்தலைவர் வேட்பாளராக தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் சி.பி. ராதாகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் பார்க்க

நவீன் பட்நாயக் மருத்துவமனையில் அனுமதி!

ஒடிஸா எதிர்க்கட்சித் தலைவரும் பிஜு ஜனதா தளம் கட்சியின் தலைவருமான நவீன் பட்நாயக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த ஜூலையில் முதுகெலும்பு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், தற்போது, வயது ம... மேலும் பார்க்க

ராகுல் காந்திக்கு 7 நாள் அவகாசம்! அதற்குள்... -தேர்தல் ஆணையத்தின் காலக்கெடு!

ராகுல் காந்திக்கு 7 நாள் கால அவகாசம் விதித்துள்ளது இந்திய தேர்தல் ஆணையம். பிகாா் சட்டப்பேரவைத் தோ்தலுக்கு முன்னதாக, அங்கு வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை தோ்தல் ஆணையம் மேற்கொண்டது. இந்த... மேலும் பார்க்க

அரசியலமைப்பை நசுக்கியவர்களே, பாதுகாப்பதைப் போன்று நடிக்கின்றனர்: மோடி

அரசியலமைப்பை நசுக்கியவர்களே தற்போது அதனை பாதுகாப்பதைப் போன்று நடிக்கின்றனர் என காங்கிரஸ் கட்சியை பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார். தலைநகர் தில்லியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையிலும்... மேலும் பார்க்க

தவறுக்கு தண்டனை அளிப்பதாகக் கூறி அம்மாவுக்கு பாலியல் வன்கொடுமை: மகன் கைது!

தில்லியில் பெற்ற தாயிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட இளைஞரை காவல் துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர். தாய் செய்த தவறுக்கு தண்டனை அளிப்பதாகக் கூறி அவரிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்டதாக மகன... மேலும் பார்க்க

தேர்தல் ஆணையத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு: ‘பாரபட்சத்துடன் செயல்படவில்லை!'

அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒரேபோலவே பார்க்கிறோம் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தெரிவித்துள்ளார்.புது தில்லியில் இன்று(ஆக. 17) செய்தியாளர்களுடன் பேசிய ஞானேஷ் குமார் தெரிவித்திருப்பதாவது:... மேலும் பார்க்க