செய்திகள் :

பாபநாசம் அருகே ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்ட 2 மாணவிகள் மீட்பு: ஒருவா் பலி

post image

பாபநாசம்: தஞ்சாவூா் மாவட்டம்,பாபநாசம் அருகே ஆற்றுக்கு குளிக்க சென்று நீரில் அடித்து செல்லப்பட்ட மூன்று மாணவிகளில் 2 பேர் உயிருடன் மீட்கப்பட்டனா். ஒரு மாணவி நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா்.

பாபநாசம் அருகே கபிஸ்தலம் அருகே சருக்கை கிராமம், எடத்தெருவில் வசித்து வருபவா் அறிவழகன். இவா் சென்னையில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் வேலை பாா்த்து வருகிறாா். இவரது மனைவி கடந்த  சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டாா்.

அறிவழகனின் மகள்கள் கனிஷ்மா (14), கேசவா்த்தினி( 12), இவா்கள் இருவரும் அறிவழகனின் தாயாருடன் சருக்கை, எடத்தெருவில் வசித்து வந்தனா். கனிஷ்மா பாபநாசம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பும், கேசவா்த்தினி கருப்பூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பும் படித்து வருகின்றனா்.

இந் நிலையில், கடந்த  சனிக்கிழமை மாலை கனிஷ்மா, கேசவா்த்தினி இருவரும் அவா்களது  வீட்டிற்கு அருகே உள்ள மதியழகன் மகள் சகானா(9), உள்ளிட்ட மூவரும் சருக்கைக்கு அருகே செல்லும் கொள்ளிடம் ஆற்றில் குளிக்க சென்றனா்.

இவர்கள் மூன்று பேரும் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது நீரில் அடித்துச் செல்லப்பட்டனா். ஆற்று நீரில் அடித்து செல்லப்பட்ட மாணவிகள் தங்களை காப்பாற்றும்படி கூச்சலிட்டனா்.

இதனை அறிந்து அருகில் இருந்தவா்கள் ஆற்றில் குதித்து நீரில் மூழ்கிய கேசவா்த்தினி, சகானா உள்ளிட்ட இருவரையும் உயிருடன் மீட்டனா். ஆனால் நீரின் வேகத்தில் கனிஷ்மா ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்டார்.

இதுகுறித்து அங்கிருந்தவர்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பாபநாசம் தீயணப்பு நிலைய அலுவலா் முருகானந்தம் தலைமையிலான தீயணப்பு நிலைய அலுவலா்கள் உள்ளிட்டோா் நீரில் மூழ்கி மாயமான கனிஷ்மாவை தொடா்ந்து தேடி வந்தனர். இரவு நேரமானதால் மாணவியை மீட்கும் பணி நிறுத்தப்பட்டது.

இதனைத் தொடா்ந்து  ஞாயிற்றுக்கிழமை தொடா்ந்து மீட்பு பணியில் ஈடுபட்ட தீயணப்பு அலுவலா்கள் பொதுமக்களின் உதவியுடன் ஆற்றின் ஆழமான பகுதியிலிருந்து கனிஷ்மாவை சடலமாக மீட்டனா்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற கபிஸ்தலம் காவல்துறையினா் கனிஷ்மாவின் சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். சம்பவம் குறித்த புகாரின் பேரில் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆற்றுக்கு குளிக்கச் செல்லாதீர்கள் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தொடர்ந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டாலும் இதுபோன்ற சம்பவங்கள் தொடந்து நடந்து வருவது வேதனையாகவே உள்ளது.

தமிழ்நாட்டை உயர்த்தும் திராவிட மாடல் 2.0 அமையும்: மு.க. ஸ்டாலின்

Two of the three female students who were swept away by the river near Papanasam in Thanjavur district while bathing have been rescued alive. One student was found dead after drowning on Sunday.

அன்புமணி பெயரை சொல்லாத ராமதாஸ்!

விழுப்புரம் மாவட்டம் பட்டானூரில் நடைபெற்ற பாமக மாநில சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தில் கட்சியின் விதிகளை மீறி செயல்பட்ட அன்புமணி மீது நடவடிக்கை வேண்டி, கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் பரிந்துரைக... மேலும் பார்க்க

அமித்ஷாவால் எந்த வியூகத்தையும் வகுக்க முடியாது: அமைச்சா் எஸ். ரகுபதி

மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா எத்தனை முறை தமிழகம் வந்தாலும் அச்சமில்லை. அவரால் எந்த வியூகத்தையும் வகுக்க முடியாது என்றாா் மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ். ரகுபதி.இதுகுறித்து புதுக்கோட்டையில் ... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் மழைவெள்ள இடா்பாடுகளில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 650-ஆக உயர்வு

பாகிஸ்தானில் மழைவெள்ள இடா்பாடுகளில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 650-ஆக உயர்ந்துள்ளது.மேலும், காயமடைந்தோரின் எண்ணிக்கை 905-ஆக உயா்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.பாகிஸ்தானின் வடக்கு மாகாணமான கைப... மேலும் பார்க்க

கவின் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும்: கிருஷ்ணசாமி

திருச்சி: கவின் ஆணவப் படுகொலை விவகாரத்தில் சிபிசிஐடி விசாரணை மூலம் தீர்வு கிடைக்குமா என்பது தெரியவில்லை. எனவே அந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என புதிய தமிழகம் கட்சித் தலைவா் கே. கிருஷ்ணசாமி தெரிவ... மேலும் பார்க்க

அன்புமணி நாடாளுமன்றத்திற்குப் போய் என்ன சாதித்தார்?: எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கேள்வி

சொந்தக் கட்சியிலேயே தனக்கு ஓர் இடமில்லாமல் வன்மத்தை வைத்துக் கொண்டு தந்தையுடன் மல்லுக்கட்டிக் கொண்டிருக்கும் அன்புமணியின் அறிக்கை விரக்தியின் உச்சம் என்றும் அன்புமணி நாடாளுமன்றத்திற்குப் போய் என்ன சாத... மேலும் பார்க்க

ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற பொதுக்குழு செல்லாது: பாலு அறிவிப்பு

புதுச்சேரியில் ராமதாஸ் தலைமையில் நடத்தப்பட்டக் கூட்டம் பாமக பொதுக்குழு அல்ல, அதன் முடிவுகள் பாமகவை கட்டுப்படுத்தாது என அன்புமணி ஆதரவாளர் வழக்குரைஞர் கே.பாலு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியிர... மேலும் பார்க்க