செய்திகள் :

போட்டியின்றி தேர்தலை நடத்த எதிர்க்கட்சிகளின் ஆதரவு தேவை: ஜெ.பி. நட்டா

post image

குடியரசு துணைத் தலைவர் தேர்தலை, போட்டியின்றி நடத்த எதிர்க்கட்சிகளின் ஆதரவு தேவை என பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேச்சுவார்த்தை நடத்த எதிர்க்கட்சி உறுப்பினர்களுடன் பாஜக மூத்த தலைவர்கள் தொடர்பில் உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வேட்பாளராக தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் சி.பி. ராதாகிருஷ்ணன் போட்டியிடுவார் என ஜெ.பி. நட்டா இன்று (ஆக. 17) அறிவித்தார்.

இது தொடர்பாக செய்தியாளர்களுடன் ஜெ.பி. நட்டா பேசியதாவது,

''மகாரஷ்டிர ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் குடியரசு துணைத் தலைவருக்கான வேட்பாளராக தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு கூட்டணி கட்சி உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

துணை குடியரசுத் தலைவர் பதவிக்கு போட்டியின்றி தேர்தலை உறுதி செய்வதற்காக எதிர்க்கட்சி உறுப்பினர்களின் ஆதரவையும் நாம் பெற வேண்டும். நாங்கள் அவர்களுடன் தொடர்பில் உள்ளோம்; எங்களின் மூத்த தலைவர்கள் முன்பே அவர்களைத் தொடர்பு கொண்டு பேசியுள்ளனர்.

இப்போதும் கூட, நாங்கள் அவர்களுடன் தொடர்பில் இருக்கிறோம். எங்கள் தேசிய ஜனநாயக கூட்டணி உறுப்பினர்களின் ஆதரவுப்படி, துணை குடியரசுத் தலைவருக்கான எங்கள் வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன்'' எனக் குறிப்பிட்டார்.

இதையும் படிக்க | குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன்

We should get opposition support so that we ensure unopposed election BJP national president JP Nadda

குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன்

குடியரசு துணைத்தலைவர் வேட்பாளராக தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் சி.பி. ராதாகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் பார்க்க

நவீன் பட்நாயக் மருத்துவமனையில் அனுமதி!

ஒடிஸா எதிர்க்கட்சித் தலைவரும் பிஜு ஜனதா தளம் கட்சியின் தலைவருமான நவீன் பட்நாயக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த ஜூலையில் முதுகெலும்பு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், தற்போது, வயது ம... மேலும் பார்க்க

ராகுல் காந்திக்கு 7 நாள் அவகாசம்! அதற்குள்... -தேர்தல் ஆணையத்தின் காலக்கெடு!

ராகுல் காந்திக்கு 7 நாள் கால அவகாசம் விதித்துள்ளது இந்திய தேர்தல் ஆணையம். பிகாா் சட்டப்பேரவைத் தோ்தலுக்கு முன்னதாக, அங்கு வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை தோ்தல் ஆணையம் மேற்கொண்டது. இந்த... மேலும் பார்க்க

அரசியலமைப்பை நசுக்கியவர்களே, பாதுகாப்பதைப் போன்று நடிக்கின்றனர்: மோடி

அரசியலமைப்பை நசுக்கியவர்களே தற்போது அதனை பாதுகாப்பதைப் போன்று நடிக்கின்றனர் என காங்கிரஸ் கட்சியை பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார். தலைநகர் தில்லியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையிலும்... மேலும் பார்க்க

தவறுக்கு தண்டனை அளிப்பதாகக் கூறி அம்மாவுக்கு பாலியல் வன்கொடுமை: மகன் கைது!

தில்லியில் பெற்ற தாயிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட இளைஞரை காவல் துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர். தாய் செய்த தவறுக்கு தண்டனை அளிப்பதாகக் கூறி அவரிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்டதாக மகன... மேலும் பார்க்க

தேர்தல் ஆணையத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு: ‘பாரபட்சத்துடன் செயல்படவில்லை!'

அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒரேபோலவே பார்க்கிறோம் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தெரிவித்துள்ளார்.புது தில்லியில் இன்று(ஆக. 17) செய்தியாளர்களுடன் பேசிய ஞானேஷ் குமார் தெரிவித்திருப்பதாவது:... மேலும் பார்க்க