இன்றுமுதல்..! தமிழகத்தில் 38 ரயில்கள் கூடுதலாக 20 இடங்களில் நின்று செல்லும்!
கோத்ரெஜ் பிராபர்டீஸ் நிகர கடன் 42 சதவிகிதம் உயர்வு!
புதுதில்லி: ரியல் எஸ்டேட் நிறுவனமான கோத்ரெஜ் பிராபர்டீஸ் நிறுவனத்தின் நிகர கடன் ஜூன் வரையான காலாண்டில் 42 சதவிகிதம் உயர்ந்து ரூ.4,637 கோடியாக உள்ளது. அதே வேளையில், நிறுவனம் தனது வலுவான வீட்டுவசதி தேவையை பூர்த்தி செய்ய தனது வணிகத்தை விரிவுபடுத்தவும் திட்டமிட்டுள்ளது.
கடந்த நிதியாண்டின் இறுதியில் நிறுவனத்தின் நிகர கடன் ரூ.3,269 கோடியாக இருந்தது.
அதன் சமீபத்திய முதலீட்டாளர்களின் கூட்டத்தில், நிறுவனத்தின் கடன் பங்கு 0.19 சதவிகிதத்திலிருந்து 0.26 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
நிதி ரீதியாக, கோத்ரெஜ் பிராபர்டீஸ் சமீபத்தில் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் 15 சதவிகிதம் அதிகரித்து ரூ.598.40 கோடியாக உயர்ந்துள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலத்தில் ரூ.518.8 கோடியாக இருந்தது.
மொத்த வருமானம், 2025-26 நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையான காலகட்டத்தில் ரூ.1,620.34 கோடியாகக் குறைந்துள்ளது. முந்தைய ஆண்டின் இதே காலத்தில் இது ரூ.1,699.48 கோடியாக இருந்தது.
மும்பையைச் சேர்ந்த இந்த நிறுவனம், கடந்த நிதியாண்டில் ரூ.6,967.05 கோடி மொத்த வருமானத்தில் ரூ.1,389.23 கோடி நிகர லாபமாக பதிவு செய்தது.
இதையும் படிக்க: இந்தியாவில் மடிக்கணினிகளின் உற்பத்தியைத் தொடங்கிய சாம்சங்!