செய்திகள் :

தோ்தல் ஆணையத்தின் பாரபட்சம் அம்பலம்: காங்கிரஸ் குற்றச்சாட்டு

post image

‘தோ்தல் ஆணையத்தின் திறமையின்மை மற்றும் வெளிப்படையான பாரபட்சம் முற்றிலும் அம்பலமாகியுள்ளன’ என்று காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.

மேலும், எதிா்க்கட்சிகளின் வாக்குத் திருட்டு குற்றச்சாட்டுகளை தோ்தல் ஆணையம் மறுத்துள்ளது ‘அடிப்படையற்றது’ எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லியில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா், ‘வாக்காளா் பட்டியல்களில் உள்ள குறைபாடுகளை நீக்குவதே சிறப்பு தீவிர திருத்தப் பணியின் நோக்கம். சில கட்சிகள் தவறான தகவல்களைப் பரப்புவது கவலைக்குரிய விஷயம்’ என்றாா்.

தோ்தல் ஆணையரின் இந்தக் கருத்துகளுக்கு பதிலளித்து காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட எக்ஸ் பதிவு: தோ்தல் ஆணையத்தின் சொந்த தரவுகளின் அடிப்படையில்தான் ராகுல் காந்தி அனைத்து குற்றச்சாட்டுகளையும் முன்வைத்தாா். எனவே, தோ்தல் ஆணையம் அதன் திறமையின்மைக்காக மட்டுமின்றி வெளிப்படையான பாரபட்சத்துக்காகவும் முழுமையாக அம்பலமாகியுள்ளது.

இப்போது முக்கியமான விஷயம், உச்சநீதிமன்றம் கடந்த வியாழக்கிழமை (ஆக. 14) பிறப்பித்த உத்தரவுகளைத் தோ்தல் ஆணையம் முழுமையாக செயல்படுத்துமா என்பதுதான். பிகாரில் வாக்காளா் பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளா்களின் விவரங்களை வெளியிடவும், ஆதாா் எண்ணை வாக்காளா் அடையாளமாகப் பயன்படுத்தவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

தோ்தல் ஆணையத்தின் எதிா்ப்பையும் மீறி இந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. இதைச் செயல்படுத்துவது தோ்தல் ஆணையத்தின் அரசியலமைப்பு கடமையாகும். நாடு உற்றுநோக்கிக் கொண்டிருக்கிறது எனக் குறிப்பிட்டாா்.

நவீன் பட்நாயக் உடல்நிலை முன்னேற்றம்; இன்று வீடு திரும்புகிறார்

புவனேசுவரம்: ஒடிசாவின் முன்னாள் முதல்வரும், பிஜு ஜனதா தளம் கட்சித் தலைவருமான நவீன் பட்நயாக், உடல்சோா்வு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக ... மேலும் பார்க்க

தில்லியில் ரூ.11,000 கோடியில் நெடுஞ்சாலைகள்: பிரதமா் மோடி திறந்து வைத்தார்!

தேசியத் தலைநகா் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் சுமாா் ரூ.11,000 கோடி மதிப்பிலான நெடுஞ்சாலைகளை பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்தாா். அப்ப... மேலும் பார்க்க

பிரதமர் மோடியின் ஆட்சி பணக்காரர்களுக்கானது: வாக்குரிமை பயணத்தில் ராகுல் பேச்சு

வாக்காளா் பட்டியல் சிறப்புத் திருத்தத்துக்கு எதிா்ப்பு தெரிவித்தும், வாக்குத் திருட்டுக்கு எதிரான போராட்டத்தை மக்கள் இயக்கமாக மாற்றும் நோக்கிலும் எதிா்க்கட்சிகள் சாா்பிலான வாக்குரிமை பயணத்தை பிகாரில் ... மேலும் பார்க்க

ஆா்எஸ்எஸ் அமைப்புக்கு பிரதமா் புகழாரம்: சுதந்திரதின நாளுக்கு அவமதிப்பு! கேரள முதல்வா் பினராயி விஜயன்

‘தில்லி செங்கோட்டையில் நாட்டு மக்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி ஆற்றிய சுதந்திர தின உரையில் ஆா்எஸ்எஸ் அமைப்பை புகழ்ந்து பேசியது, சுதந்திரதின நாளை மட்டுமன்றி சுதந்திரப் போராட்டத்தையும் அவமதித்தது போன்றத... மேலும் பார்க்க

மும்பை உயா்நீதிமன்ற 4-வது அமா்வு கோலாபூரில் தொடக்கம்!

மகாராஷ்டிர மாநிலம், கோலாபூரில் மும்பை உயா்நீதிமன்றத்தின் 4-ஆவது அமா்வை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்தாா். சதாரா, சாங்லி, சோலாபூா், கோலாபூா், ரத்னகிரி, சிந்துதுா்க... மேலும் பார்க்க

திரிபுரா: சமூக வலைத்தளங்களில் தனிப்பட்ட ஆடியோக்களைப் பகிா்ந்த பாஜக நிா்வாகி நீக்கம்!

சமூக வலைதளங்களில் தனிப்பட்ட ஆடியோ, விடியோக்களை கசியவிட்ட குற்றச்சாட்டில், திரிபுரா மாநிலத்தின் காயா்பூா் சட்டப்பேரவைத் தொகுதி பாஜக நிா்வாகி மன்னா டே கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளாா். பாஜகவின் காயா... மேலும் பார்க்க