செய்திகள் :

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, 12 மாவட்டங்களில் மழை!

post image

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் திங்கள்கிழமை (ஆக.18) மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக முன்னதாக தெரிவிக்கப்பட்டது.

மேலும், ஓரிரு இடங்களில் 50 கி.மீ. வேகத்தில் தரைகாற்று வீசக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் திங்கள்கிழமை (ஆக.18) மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், அடுத்த 2 மணி நேரத்துக்கு (காலை 10 மணி வரை) நீலகிரி, கோயம்புத்தூர், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தென்காசி மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் கடந்த சில நாள்களாக அவ்வப்போது பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், திங்கள்கிழமை அதிகாலை முதலே லேசான மழை பெய்து வருகிறது.

அதன்படி, ஆவடி, அம்பத்தூர், பட்டரவாக்கம், கொரட்டூா், புழல், அண்ணா நகர், கோயம்பேடு, வடபழனி, அசோக் நகர், முகப்பேர், உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

இதையும் படிக்க: இன்றுமுதல்..! தமிழகத்தில் 38 ரயில்கள் கூடுதலாக 20 இடங்களில் நின்று செல்லும்!

The Chennai Meteorological Department has stated that there is a possibility of rain in 13 districts, including Chennai, for the next 2 hours.

விடியல் பயணம்: ஒவ்வொரு மகளிரும் ரூ. 50,000 வரை சேமிப்பு - முதல்வர் ஸ்டாலின்

விடியல் பயணத் திட்டத்தால் 51 மாதங்களில் ஒவ்வொரு மகளிரும் ரூ.50,000 வரை சேமித்துள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கும் வகையிலான மகளிர் விடி... மேலும் பார்க்க

தீபாவளி முன்பதிவு: சில நிமிடங்களிலேயே விற்றுத்தீர்ந்த ரயில் டிக்கெட்!

சென்னையிலிருந்து ரயில்களில் தீபாவளிக்காக வெளியூர் செல்வோருக்கான முன்பதிவு திங்கள்கிழமை (ஆக.18) காலை தொடங்கிய சில நிமிடங்களிலேயே விற்றுத்தீர்ந்தது.ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகைக்காக சென்னையிலிருந்து வெளி... மேலும் பார்க்க

இன்றுமுதல்..! தமிழகத்தில் 38 ரயில்கள் கூடுதலாக 20 இடங்களில் நின்று செல்லும்!

தமிழகத்தில் திங்கள்கிழமை (ஆக. 18) முதல் 38 ரயில்கள் (இருமாா்க்கமாக) கூடுதலாக 20 ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று மத்திய தகவல்- ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரத் துறை இணையமைச்சா் எல்.முருகன... மேலும் பார்க்க

பட்டானூரில் கூட்டப்பட்டது பாமக பொதுக்குழு அல்ல: கே.பாலு

பாமக நிறுவனா் ராமதாஸ் தலைமையில் பட்டானூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கூட்டம், பாமக பொதுக்குழு கூட்டம் அல்ல; அங்கு எடுக்கப்பட்ட முடிவுகள் கட்சியை எவ்விதத்திலும் பாதிக்காது என்று பாமக செய்தித் தொடா்பாளா... மேலும் பார்க்க

தமிழகத்தில் ஆக.23 வரை மழை நீடிக்கும்!

தமிழகத்தில் திங்கள்கிழமை (ஆக.18) முதல் ஆக.23 வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை மையம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப... மேலும் பார்க்க

தீபாவளிக்கான ரயில் முன்பதிவு இன்று தொடக்கம்! வெளியூர் பயணிகள் கவனிக்க..!

சென்னையிலிருந்து ரயில்களில் தீபாவளிக்காக வெளியூா் செல்வோருக்கான முன்பதிவு திங்கள்கிழமை (ஆக.18) காலை தொடங்குகிறது. ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகைக்காக சென்னையிலிருந்து வெளியூா், வெளிமாநிலங்களுக்கு ரயில்கள... மேலும் பார்க்க