செய்திகள் :

Doctor Vikatan: டயாபட்டீஸ் வந்தவர்களுக்கு உடல் எடை குறைவதேன்?

post image

Doctor Vikatan: யாரேனும் உடல் எடை குறைந்தாலே, 'சுகர் வந்துருச்சா' என்று கேட்பவர்கள்தான் அதிகம். அதே சமயத்தில், எடையைக் குறைத்தால் நீரிழிவு வராமல் தடுக்கலாம் என்றும் மருத்துவர்கள் அட்வைஸ் செய்கிறார்கள். நீரிழிவுக்கும் உடல் எடைக்கும் என்ன தொடர்பு, டயாபட்டீஸ் வந்தவர்களுக்கு உடல் எடை குறைவதை எப்படிப் புரிந்துகொள்வது?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த நீரிழிவு சிறப்பு மருத்துவர் பரணிதரன்.

நீரிழிவு மருத்துவர் பரணிதரன்

இந்தியாவில் தற்போது 10 கோடிக்கும் மேலானோருக்கு நீரிழிவு இருக்கிறது. சுமார் 13 கோடி பேர் நீரிழிவுக்கு முந்தைய ப்ரீ டயாபட்டீஸ் நிலையில்  இருக்கிறார்கள். இந்த ப்ரீ டயாபட்டீஸ் கொண்ட 13 கோடி பேர் எப்போது வேண்டுமானாலும் நீரிழிவு நோயாளிகளாக மாறலாம். அந்த அளவுக்கு உடல்பருமனின் ஆபத்தும் உள்ளது.

நம்முடைய உணவில் மாவுச்சத்து அதிகமாக இருக்கிறது. உடல்ரீதியான செயல்பாடுகள் குறைவாக உள்ளன. இதனால் எடை அதிகரிப்பு என்பதும், நீரிழிவு என்பதும் மிகவும் கவனிக்க வேண்டிய பிரச்னைகளாக உள்ளன. உடல் பருமன் இன்சுலின் வேலை செய்வதைத் தடை செய்வதால் 'இன்சுலின் ரெஸிஸ்டன்ஸ்' எனப்படும் இன்சுலின் எதிர்ப்புத்தன்மையை உருவாக்குகிறது. அதனால் இந்தியாவில் உடல் பருமன் என்பது நீரிழிவு ஏற்படுவதற்கான அபாய காரணிகளில் முக்கியமானதாகவும் உள்ளது.

நீரிழிவு நோயாளிகளுக்கு உடல் பருமனும் ஏற்படும்; உடல் பருமன் கொண்டவர்களுக்கு நீரிழிவு ஏற்படுகிறது என்றும் புரிந்துகொள்ளலாம்.

சர்க்கரை நோய் இருப்பவர்களுக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உந்துதல் வருவதைப் போல, அதிக தாகம் ஏற்படுவதைப் போல, அதிகம் பசி உணர்வு ஏற்படுவதைப் போல எடை இழப்பும்  முக்கியமான ஓர் அறிகுறியாகவே இருக்கும். அதனால்தான் சர்க்கரைநோய் வந்துவிட்டால் ஒருவரின் எடை குறைந்துவிடும் என்றும் பொதுவாகச் சொல்கிறோம். ஆனால், இதில் மற்றொரு கோணமும் உண்டு. நீரிழிவு நோயாளிகளுக்கு உடல் பருமனும் ஏற்படும்; உடல் பருமன் கொண்டவர்களுக்கு நீரிழிவு ஏற்படுகிறது என்றும் புரிந்துகொள்ளலாம்.

எனவே, எடையைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது நீரிழிவு உள்பட பல பாதிப்புகளிலிருந்தும் நம்மைப் பாதுகாக்கும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.  

``கிரிமீயா கிடைக்காது; நேட்டோவில் சேரக்கூடாது'' - ஜெலன்ஸ்கியை மிரட்டும் ட்ரம்ப் பதிவு

கடந்த வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 15), அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ரஷ்ய அதிபர் புதின் பேச்சுவார்த்தை அமெரிக்காவில் உள்ள அலாஸ்காவில் நடந்து முடிந்தது. இதையொட்டி, இன்று அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன்னில் ட்ரம்பை ச... மேலும் பார்க்க

செய்தியாளர்களை நெட்டித் தள்ளிய பவுன்சர்கள், அடிக்கப் பாய்ந்த சீமான்! - என்ன நடந்தது?

தொண்டருக்கு `பளார்’விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் இருக்கும் செஞ்சிக் கோட்டையை உலகப் பாரம்பர்யச் சின்னமாக அங்கீகரித்திருக்கும் `யுனெஸ்கோ’, அது மராட்டிய மன்னரான சிவாஜியின் கோட்டை என்பதாக குறிப்பிட்டிரு... மேலும் பார்க்க

``சமூக சேவை, விளிம்புநிலை மக்களுக்கு அதிகாரம் அளிப்பவர்'' -சி.பி.ராதாகிருஷ்ணனை புகழும் பிரதமர் மோடி

தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பாக, துணை குடியரசுத் தலைவர் வேட்பாளராக சி.பி.ராதாகிருஷ்ணனை முன்நிறுத்தியுள்ளனர். சி.பி.ராதாகிருஷ்ணன் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் ஆவார். அவரைக் குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் ... மேலும் பார்க்க

``பாஜக தலைவர்கள் OPS-ஐ மீண்டும் கூட்டணிக்குள் கொண்டு வர வேண்டும்'' - டிடிவி தினகரன்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் செயல்வீரர்கள் கூட்டம் அக்கட்சியின் பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் தலைமையில் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களை சந்தித்த டி.டி.வி... மேலும் பார்க்க

துணை குடியரசுத் தலைவர் வேட்பாளர்: RSS பின்னணி, ரத யாத்திரை, ஆளுநர் - யார் இந்த சி.பி.ராதாகிருஷ்ணன்?

ஜகதீப் தன்கர் கடந்த ஜூலை 21ம் தேதி, துணைக் குடியரசுத் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். வருகின்ற செப்டம்பர் 9ம் தேதி அடுத்த துணைக் குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற்றுள்ளது. இந்த ந... மேலும் பார்க்க

Health: சூப்பர் மார்க்கெட்ல கொடுக்கிற பில்லை கையில வெச்சுக்கிறீங்களா? இத படிங்க!

கடைகள்ல, சூப்பர் மார்க்கெட்கள்ல மற்றும் மால்கள்ல கொடுக்கிற பேப்பர் பில்களை ரொம்ப நேரம் கையில வெச்சுக்கிறீங்களா? அந்த தெர்மல் பேப்பர்கள்ல இருக்கிற ரசாயனம் ஆண், பெண் ரெண்டு பேரோட இனப்பெருக்க ஆரோக்கியத்த... மேலும் பார்க்க