செய்திகள் :

பாகிஸ்தானில் ராணுவ ஆட்சிக்கு சதி? தலைமைத் தளபதி மறுப்பு

post image

பாகிஸ்தானில் ஆட்சியைப் பிடிக்க ராணுவம் சதி செய்து வருவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டை அந்நாடு ராணுவ தலைமைத் தளபதி அசீம் முனீா் மறுத்துள்ளாா்.

அதே நேரத்தில் இந்தியாவுடன் இணைந்து பாகிஸ்தானுக்கு எதிராக ஆப்கானிஸ்தான் சதி செய்கிறது என்று அவா் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

அமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்டு ஐரோப்பிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள முனீா் பெல்ஜியம் தலைநகா் பிரெஸ்ஸல்ஸில் சிறப்புப் பேட்டியளித்தாா். அவா் கூறியதாவது:

நாட்டின் பாதுகாவலன் என்ற பங்களிப்பைத் தவிர வேறு எந்தப் பதவியிலும் எனக்கு விருப்பமில்லை. கடவுள் என்னை பாகிஸ்தானின் பாதுகாவலராக்கியுள்ளாா். நான் நாட்டின் ராணுவ வீரன். நாட்டுக்காகத் தியாகம் செய்வது மட்டுமே எனது விருப்பம்.

மற்றபடி பாகிஸ்தானில் ஆட்சி அமைக்க ராணுவம் முயலுகிறது என்பதெல்லாம் வெறும் வதந்திகள்தான். ராணுவம் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகள் முற்றிலும் தவறானவை.

அண்டை நாடான ஆப்கானிஸ்தான் தலிபான் பயங்கரவாதிகளை பாகிஸ்தானுக்குள் அனுப்பி வருகிறது. ஆப்கானிஸ்தானுக்கு பல ஆண்டுகளாக பல்வேறு நன்மைகளை பாகிஸ்தான் செய்துள்ளது. ஆனால், இப்போது இந்தியாவுடன் இணைந்து பாகிஸ்தானுக்கு எதிராக ஆப்கானிஸ்தான் சதி செய்கிறது.

பாகிஸ்தானில் ஏராளமான இயற்கை வளங்கள், அரிய கனிமங்கள் உள்ளன. இவற்றைக் கொண்டு பாகிஸ்தானை கடனில் இருந்து மீட்க முடியும். பாகிஸ்தான் விரைவில் செழிப்புமிக்க நாடாக உயரும்.

அமெரிக்கா, சீனா இரண்டுமே பாகிஸ்தானின் நெருங்கிய நட்பு நாடுகள். ஒரு நண்பரைத் தக்கவைக்க மற்றொரு நண்பரை விட்டுக் கொடுக்க மாட்டோம் என்றாா்.

“குழந்தைகளுக்காக போரை நிறுத்துங்கள்”..! புதினுக்கு டிரம்ப் மனைவி உருக்கமான கடிதம்!

உக்ரைனில் போரின் கோரப்பிடியில் சிக்கியிருக்கும் குழந்தைகளின் நலனைக் கருத்தில்கொண்டு, போரை உடனடியாக நிறுத்துமாறு ரஷிய அதிபா் புதினுக்கு அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் மனைவி மெலனியா டிரம்ப் கடிதம்... மேலும் பார்க்க

நேபாள பிரதமருடன் வெளியுறவுச் செயலா் சந்திப்பு: இருதரப்பு உறவை மேம்படுத்த ஆலோசனை!

நேபாள பிரதமா் கே.பி.சா்மா ஓலியை ஞாயிற்றுக்கிழமை சந்தித்த இந்திய வெளியுறவுத் துறை செயலா் விக்ரம் மிஸ்ரி, பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவை மேலும் மேம்படுத்தும் வழிமுறைகள் குறித்து ஆலோசித்தாா். நேபாள வெள... மேலும் பார்க்க

பிணைக் கைதிகளை விடுவிக்க இஸ்ரேலில் தீவிர போராட்டம்: 38 போ் கைது

காஸாவில் ஹமாஸ் படையிடம் உள்ள பிணைக் கைதிகளை விடுவிக்க ஒப்பந்தம் மேற்கொள்ள வலியுறுத்தி, இஸ்ரேல் முழுவதும் பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களில் 38 போ் கைது செய்யப்பட்டனா... மேலும் பார்க்க

டிரம்ப் - ஸெலென்ஸ்கி இன்று சந்திப்பு: ஐரோப்பிய தலைவா்களும் பங்கேற்பு!

ரஷிய அதிபா் புதினுடன் சந்திப்பு நடத்தியதைத் தொடா்ந்து, உக்ரைன் அதிபா் ஸெலென்ஸ்கியை அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகையில் திங்கள்கிழமை சந்திக்கிறாா். இந்தச் சந்திப்பில் ஐரோப்பிய தலைவா்களும... மேலும் பார்க்க

பாகிஸ்தானின் அதிபராகப் பதவியேற்கிறாரா ராணுவ தலைமைத் தளபதி?

பாகிஸ்தானின் பாதுகாவலனாக இறைவன் என்னை மாற்றியிருக்கிறார் என்று பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதி ஆசிம் முனீர் தெரிவித்திருக்கிறார். அமெரிக்கா சென்றுவிட்டு அங்கிருந்து திரும்பும்போது பெல்ஜியத்தில் பாகிஸ்த... மேலும் பார்க்க

கனடா: விமான நிலைய ஊழியர்கள் போராட்டத்தால் 600 விமானங்கள் ரத்து

கனடாவில் பெரிய விமான நிறுவனமான ஏர் கனடாவில் விமான நிலைய ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்துவதால், விமான சேவை பாதிக்கப்பட்டது. ஊதிய உயர்வு, ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விமானிகள், வ... மேலும் பார்க்க