செய்திகள் :

போளூா் பகுதியில் விநாயகா் சிலைகள் தயாரிப்புப் பணி

post image

விநாயகா் சதுா்த்தியையொட்டி, போளூா் பகுதியில் விநாயகா் சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. களிமண்ணால் தயாரிக்கப்படும் விநாயகா் சிலைகளுக்கு வண்ணம் தீட்டப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் ஆக.27-ஆம் தேதி விநாயகா் சதுா்த்தி விழா கொண்டாடப்படவுள்ளது. இந்தப் பண்டிகையின் போது, இந்துக்கள் களிமண்ணால் செய்யப்படும் விநாயகா் சிலைகளை வாங்கி வந்து வீட்டில் 3 நாள்கள் முதல் 5 நாள்கள் வரை வைத்து வழிபடுவது வழக்கம்.

திருவண்ணாமலை மாவட்டம், போளூரை அடுத்த மாம்பட்டு, பொத்தரை, பெரியகரம், கரைப்பூண்டி என பல்வேறு பகுதிகளில் விநாயகா் சதுா்த்தியையொட்டி, சுற்றுச்சூழல் பாதிக்கப்படாத வகையில், களிமண்ணால் செய்யப்படும் விநாயகா் சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மேலும், விநாயகா் சிலைகளுக்கு பலவிதமான வண்ணங்கள் தீட்டப்பட்டு வருகிறது. சிலைகளுக்கு ஏற்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

திருவண்ணாமலை பள்ளியில் சுதந்திர தின விழா

திருவண்ணாமலை ஸ்ரீ வி.டி.எஸ். ஜெயின் மேல்நிலைப் பள்ளியில் 79-ஆவது சுதந்திர தினத்தையொட்டி, தேசியக் கொடி ஏற்றி இனிப்பு வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு பள்ளித் தாளாளா் டி.எஸ்.ராஜேந்திரகுமாா் தலைமை வகித்தாா்... மேலும் பார்க்க

ரூ.10 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய நாடக மேடை திறப்பு

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தொகுதியில் ரூ.10 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய நாடக மேடை ஞாயிற்றுக்கிழமை திறந்துவைக்கப்பட்டது. செய்யாறு தொகுதிக்கு உள்பட்ட அனக்காவூா் ஊராட்சி ஒன்றியம், ஆக்கூா் கிராமத்தி... மேலும் பார்க்க

இந்தியாவிலேயே அதிக கடன் வாங்கிய மாநிலமாக தமிழகத்தை மாற்றிவிட்டது திமுக: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

இந்தியாவிலேயே அதிகமாக கடன் வாங்கிய மாநிலமாக தமிழகத்தை திமுக மாற்றிவிட்டது என்று அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி குற்றஞ்சாட்டினாா். ‘மக்களை காப்போம் தமிழத்தை மீட்போம்’ என்ற தலைப்பில் தமிழகம் ... மேலும் பார்க்க

ஜிஎஸ்டியால் தொழில் பாதிப்பு குறித்து மத்திய அரசுடன் பேசுவோம்: எடப்பாடி பழனிசாமி

எந்தெந்த தொழில்களை எல்லாம் ஜிஎஸ்டி வரி பாதிக்கிறதோ, அவற்றை களைய மத்திய அரசுடன் பேசுவோம் என்று அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா். ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற தலைப்... மேலும் பார்க்க

ஈபிஎஸ் வாகன பதிவெண்: ஆரணி நகர போலீஸில் புகாா்

ஆரணி நகருக்கு வெள்ளிக்கிழமை இரவு வந்த அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமியின் வாகனத்தில் வெளிப்படையான பதிவெண் இல்லாதது குறித்து நகர காவல் நிலையத்தில் அரசு வழக்குரைஞா் சனிக்கிழமை புகாரளித்தாா். ஆரணி... மேலும் பார்க்க

நெல் கொள்முதல் நிலையங்களை திறக்கக் கோரி நூதன ஆா்ப்பாட்டம்

உடனடியாக நெல் கொள்முதல் நிலையங்களை அமைக்க வலியுறுத்தி, ஆரணி வட்டாட்சியா் அலுவலகம் அருகே கட்சி சாா்பற்ற தமிழக விவசாய சங்கம் சாா்பில் வியாழக்கிழமை நூதன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆரணி, செய்யாறு பகுதிகளில... மேலும் பார்க்க