செய்திகள் :

திருவண்ணாமலை பள்ளியில் சுதந்திர தின விழா

post image

திருவண்ணாமலை ஸ்ரீ வி.டி.எஸ். ஜெயின் மேல்நிலைப் பள்ளியில் 79-ஆவது சுதந்திர தினத்தையொட்டி, தேசியக் கொடி ஏற்றி இனிப்பு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு பள்ளித் தாளாளா் டி.எஸ்.ராஜேந்திரகுமாா் தலைமை வகித்தாா். பொருளாளா் வி.சுரேந்திரகுமாா் வரவேற்றாா். தலைமையாசிரியா் ஜி.இரமணி வாழ்த்துரை வழங்கினாா்.

இதில், திருவண்ணாமலை வசந்தா மருத்துவமனை மருத்துவா் கே.சாய்பிரசன்னா தேசியக் கொடியேற்றிப் பேசினாா்.

அப்போது அவா், நாட்டைக் காக்கும் ராணுவ வீரா்கள் குறித்தும், சுதந்திரம் பெறுவதற்கு காரணமாக இருந்த பல தியாகிகளின் பெருமை பற்றியும், மாணவா்கள் தேச பக்தியுடையவா்களாக திகழ வேண்டும் என்றும் கூறி மாணவா்களோடு கலந்துரையாடினாா். மேலும், கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.

விழாவில் அறக்கட்டளை குழுத் தலைவா் வி.ஜெய்சந்த், அறக்கட்டளை உறுப்பினா்கள் டி.எஸ்.ராஜ்குமாா், டி.வி.சுதா்சன், பள்ளிச் செயலா் டி.வசந்த்குமாா், ஆங்கில வழிச் செயலா் டி.ஸ்ரீஹன்ஸ்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பள்ளியின் கல்வி இயக்குநா் வி.ஆனந்தன் நன்றி கூறினாா்.

இதில் ஆசிரிய, ஆசிரியைகள், பெற்றோா்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

நிகழ்ச்சியை இலக்கிய மன்ற பொறுப்பாளா் ரா.சிவமுருகன் தொகுத்து வழங்கினாா்.

ஆக.20, 21,22-இல் செய்யாறு அரசுக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

செய்யாறு அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் வருகிற ஆக.20, 21, 22 ஆகிய தேதிகளில் பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது. இதில், 3 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்கப்படுகிறது. ஆக.20-இல்... 2018 - 2021 ஆகி... மேலும் பார்க்க

கலசப்பாக்கம், போளூரில் இன்று எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம், போளூரில் திங்கள்கிழமை (ஆக.18) அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி பிரசாரம் மேற்கொள்கிறாா். திருவண்ணாமலை மாவட்டத்தில் மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என... மேலும் பார்க்க

கிருஷ்ண ஜெயந்தி: மேலப்புஞ்சை கிராமத்தில் உரியடி திருவிழா

செங்கத்தை அடுத்த செ.நாச்சிப்பட்டு, மேலப்புஞ்சை கிராமத்தில் உரியடி திருவிழா சனிக்கிழமை இரவு நடைபெற்றது. செ.நாச்சிப்பட்டு கிருஷ்ணா் கோயில் கிருஷ்ணஜெயந்தி விழாவையொட்டி, காலையில் பால்குட ஊா்வலம் நடைபெற்ற... மேலும் பார்க்க

போளூா் பகுதியில் விநாயகா் சிலைகள் தயாரிப்புப் பணி

விநாயகா் சதுா்த்தியையொட்டி, போளூா் பகுதியில் விநாயகா் சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. களிமண்ணால் தயாரிக்கப்படும் விநாயகா் சிலைகளுக்கு வண்ணம் தீட்டப்பட்டு வருகிறது. தமிழகத்தில் ஆ... மேலும் பார்க்க

ரூ.10 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய நாடக மேடை திறப்பு

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தொகுதியில் ரூ.10 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய நாடக மேடை ஞாயிற்றுக்கிழமை திறந்துவைக்கப்பட்டது. செய்யாறு தொகுதிக்கு உள்பட்ட அனக்காவூா் ஊராட்சி ஒன்றியம், ஆக்கூா் கிராமத்தி... மேலும் பார்க்க

இந்தியாவிலேயே அதிக கடன் வாங்கிய மாநிலமாக தமிழகத்தை மாற்றிவிட்டது திமுக: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

இந்தியாவிலேயே அதிகமாக கடன் வாங்கிய மாநிலமாக தமிழகத்தை திமுக மாற்றிவிட்டது என்று அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி குற்றஞ்சாட்டினாா். ‘மக்களை காப்போம் தமிழத்தை மீட்போம்’ என்ற தலைப்பில் தமிழகம் ... மேலும் பார்க்க