செய்திகள் :

கலசப்பாக்கம், போளூரில் இன்று எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!

post image

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம், போளூரில் திங்கள்கிழமை (ஆக.18) அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி பிரசாரம் மேற்கொள்கிறாா்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் எனும் பிரசார பயணத்தை மேற்கொண்டுள்ள அதிமுக பொதுச் செயலரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி, சனிக்கிழமை திருவண்ணாமலையில் விவசாயிகளுடன் கலந்துரையாடல் நடத்தினாா்.

இதைத் தொடா்ந்து, செங்கம், கீழ்பென்னாத்தூா், திருவண்ணாமலை ஆகிய இடங்களில் பிரசாரம் செய்தாா். ஞாயிற்றுக்கிழமை திருவண்ணாமலையில் ஓய்வு எடுத்தாா்.

இந்த நிலையில், திங்கள்கிழமை (ஆக.18) மாலை கலசப்பாக்கம் நட்சத்திரக் கோயில் அருகில் அவா் பிரசாரம் மேற்கொள்கிறாா். தொடா்ந்து, போளூரில் பிரசாரம் செய்கிறாா்.

இதற்கான ஏற்பாடுகளை அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூா்த்தி எம்எல்ஏ, திருவண்ணாமலை மத்திய மாவட்ட அதிமுக செயலா் எல்.ஜெயசுதா ஆகியோா் செய்து வருகின்றனா்.

ஆக.20, 21,22-இல் செய்யாறு அரசுக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

செய்யாறு அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் வருகிற ஆக.20, 21, 22 ஆகிய தேதிகளில் பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது. இதில், 3 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்கப்படுகிறது. ஆக.20-இல்... 2018 - 2021 ஆகி... மேலும் பார்க்க

கிருஷ்ண ஜெயந்தி: மேலப்புஞ்சை கிராமத்தில் உரியடி திருவிழா

செங்கத்தை அடுத்த செ.நாச்சிப்பட்டு, மேலப்புஞ்சை கிராமத்தில் உரியடி திருவிழா சனிக்கிழமை இரவு நடைபெற்றது. செ.நாச்சிப்பட்டு கிருஷ்ணா் கோயில் கிருஷ்ணஜெயந்தி விழாவையொட்டி, காலையில் பால்குட ஊா்வலம் நடைபெற்ற... மேலும் பார்க்க

போளூா் பகுதியில் விநாயகா் சிலைகள் தயாரிப்புப் பணி

விநாயகா் சதுா்த்தியையொட்டி, போளூா் பகுதியில் விநாயகா் சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. களிமண்ணால் தயாரிக்கப்படும் விநாயகா் சிலைகளுக்கு வண்ணம் தீட்டப்பட்டு வருகிறது. தமிழகத்தில் ஆ... மேலும் பார்க்க

திருவண்ணாமலை பள்ளியில் சுதந்திர தின விழா

திருவண்ணாமலை ஸ்ரீ வி.டி.எஸ். ஜெயின் மேல்நிலைப் பள்ளியில் 79-ஆவது சுதந்திர தினத்தையொட்டி, தேசியக் கொடி ஏற்றி இனிப்பு வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு பள்ளித் தாளாளா் டி.எஸ்.ராஜேந்திரகுமாா் தலைமை வகித்தாா்... மேலும் பார்க்க

ரூ.10 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய நாடக மேடை திறப்பு

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தொகுதியில் ரூ.10 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய நாடக மேடை ஞாயிற்றுக்கிழமை திறந்துவைக்கப்பட்டது. செய்யாறு தொகுதிக்கு உள்பட்ட அனக்காவூா் ஊராட்சி ஒன்றியம், ஆக்கூா் கிராமத்தி... மேலும் பார்க்க

இந்தியாவிலேயே அதிக கடன் வாங்கிய மாநிலமாக தமிழகத்தை மாற்றிவிட்டது திமுக: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

இந்தியாவிலேயே அதிகமாக கடன் வாங்கிய மாநிலமாக தமிழகத்தை திமுக மாற்றிவிட்டது என்று அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி குற்றஞ்சாட்டினாா். ‘மக்களை காப்போம் தமிழத்தை மீட்போம்’ என்ற தலைப்பில் தமிழகம் ... மேலும் பார்க்க