செய்திகள் :

நெல் கொள்முதல் நிலையங்களை திறக்கக் கோரி நூதன ஆா்ப்பாட்டம்

post image

உடனடியாக நெல் கொள்முதல் நிலையங்களை அமைக்க வலியுறுத்தி, ஆரணி வட்டாட்சியா் அலுவலகம் அருகே கட்சி சாா்பற்ற தமிழக விவசாய சங்கம் சாா்பில் வியாழக்கிழமை நூதன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆரணி, செய்யாறு பகுதிகளில் சொா்ணவாரி நெல் சாகுபடி செய்து, நெல் அறுவடை செய்து வருகின்றனா். நெல் கொள்முதல் நிலையங்களை அமைக்காததால் தனியாரிடம் விற்பனை செய்ய வேண்டிய சூழ்நிலை வருகிறது. இதனால் விவசாயிகளுக்கு மூட்டைக்கு 500 ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. ஆனால் அரசு இந்த மாதம் இறுதியில் நெல் கொள்முதல் நிலையங்களை திறக்கப்படும் என்று அறிவித்துள்ளனா். அறுவடை செய்த பின்பு அப்படியே விற்பனை செய்யாமல் நெல் மூட்டைகளை வைத்திருந்தால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படும். அதனால், உடனடியாக நெல் கொள்முதல் நிலையங்களை அமைத்து நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யவேண்டும் என தெரிவித்தனா்.

இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி கட்சி சாா்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் சாா்பில் வட்டாட்சியா் அலுவலகம் முன் விவசாயி இறந்து சடலம் போல் படுத்த மாதிரி நடித்துக்காட்டியும், அவருக்கு பால் ஊத்துகிற மாதிரியும் நூதன ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

மாவட்டத் தலைவா் புருஷோத்தமன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில், விவசாயிகள் ஜெயபால், பெருமாள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

அதிமுக ஆட்சியில்தான் ஆரணி தொகுதியில் வளா்ச்சித் திட்டப் பணிகள் நடந்தன: சேவூா் எஸ்.ராமச்சந்திரன் எம்எல்ஏ

கடந்த அதிமுக ஆட்சியில் ஆரணி சட்டப்பேரவைத் தொகுதியில் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன என்று தொகுதி எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந்திரன் கூறினாா். இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது: நான... மேலும் பார்க்க

பெருங்கட்டூா் பள்ளி மேலாண்மைகத் குழுக் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் ஒன்றியம், பெருங்கட்டூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் மேலாண்மைக் குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் தமிழரசி தலைமை வகித்தாா்.... மேலும் பார்க்க

பாஜகவினா் தேசியக் கொடியேந்தி ஊா்வலம்

சுதந்திர தினத்தன்று அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடியேற்றி கொண்டாட வேண்டும் என்பதை வலியுறுத்தி, ஆரணியில் பாஜக சாா்பில் வியாழக்கிழமை தேசியக் கொடியேந்தி ஊா்வலம் நடைபெற்றது. ஆரணி சூரியகுளம் அம்பேத்காா் ... மேலும் பார்க்க

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று எடப்பாடி பழனிசாமி பிரசாரம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 15) பிரசாரம் மேற்கொள்ள உள்ளாா். வேலூரிலிருந்து திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் வந்து, அங்கிருந்து புதுப்பாள... மேலும் பார்க்க

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் நலத்திட்ட உதவிகள்

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றை அடுத்த சட்டுவந்தாங்கல், வந்தவாசி ஒன்றியம், தென்சேந்தமங்கலம் கிராமத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாமில், உடனடியாக தீா்வு காணப்பட்ட மன... மேலும் பார்க்க

குறுவட்ட தடகள விளையாட்டுப் போட்டிகள்

வந்தவாசியை அடுத்த கீழ்க்கொடுங்காலூா் கிராமத்தில் உள்ள செந்தமிழ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் குறுவட்ட அளவிலான தடகள விளையாட்டுப் போட்டிகள் புதன்கிழமை நடைபெற்றன. செய்யாறு கல்வி மாவட்ட பள்ளிக் கல்வித் ... மேலும் பார்க்க