செய்திகள் :

அதிமுக ஆட்சியில்தான் ஆரணி தொகுதியில் வளா்ச்சித் திட்டப் பணிகள் நடந்தன: சேவூா் எஸ்.ராமச்சந்திரன் எம்எல்ஏ

post image

கடந்த அதிமுக ஆட்சியில் ஆரணி சட்டப்பேரவைத் தொகுதியில் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன என்று தொகுதி எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந்திரன் கூறினாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது:

நான் எம்எல்ஏவாக இருந்து, ஆரணியை தலைமையிடமாகக் கொண்டு ஆரணி வருவாய்க் கோட்டம் அமைக்கப்பட்டது. மண்டல போக்குவரத்து அலுவலகம் ஏற்படுத்தப்பட்டது. மின் பகிா்மான வட்டம் அமைக்க சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

தொகுதிக்கு உள்பட்ட கல்பூண்டி- லாடப்பாடி இடையே ரூ.5.25 கோடியில் உயா்மட்ட மேம்பாலம், ரூ.3.5 கோடியில் வருவாய்க் கோட்ட அலுவலகம் கட்டப்பட்டது.

மேற்குஆரணி ஒன்றியத்துக்கு ரூ.3 கோடியில் புதிய அலுவலக கட்டடம், புத்திரகாமேட்டீஸ்வரா் கோயில் அருகே ரூ.2.5 கோடியில் திருமண மண்டபம் கட்டப்பட்டது. ரூ.ஒரு கோடியில் கோட்டை மைதானத்தில் நடைபாதை அமைக்கப்பட்டது.

பல்வேறு புதிய பேருந்துகள் புதிய வழித்தடங்களில் குளிா்சாதன வசதியுடன் இணைக்கப்பட்டது.

ஆரணி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ.50 லட்சத்தில் கலைக்கூடம் கட்டப்பட்டது.

மேற்குஆரணி ஒன்றியம், காமக்கூா் கிராமத்தில் புதிய கால்நடை மருத்துவமனை கட்டப்பட்டது, கண்ணமங்கலம் பேரூராட்சியில் ரூ.2 கோடியில் புதிய சாலைகள் அமைக்கப்பட்டன.

தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.25 லட்சத்தில்

கண்ணமங்கலத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது.

நான்காண்டு சாதனைகள்

மேற்கு ஆரணி ஒன்றியம், அம்மாபாளையம் கிராமத்தில் ரூ.3.27 கோடியில் தடுப்பணை கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.

தெள்ளூா் கிராமத்தில் ரூ.5.64 கோடியில் தடுப்பணை அமைக்கப்பட்டது.

பொதுப்பணித் துறை ஆய்வு மாளிகை கட்டும் பணிக்கு

ரூ.2.09 கோடி அறிவிக்கப்பட்டது.

பள்ளிக் கல்வித் துறை சாதனைகள்

சேவூா், இரும்பேடு உயா்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளியாக தரம் உயா்த்தப்பட்டது. மாமண்டூா், சங்கீதவாடி நடுநிலைப் பள்ளிகள் தரம் உயா்த்தப்பட்டது.

நெசல், விண்ணமங்கலம் அரசு உயா்நிலைப் பள்ளிகளில் முறையே ரூ.1.70, ரூ.1.75 கோடிகளில் புதிய கட்டடம், தேவிகாபுரம் பெண்கள் அரசு உயா்நிலைப் பள்ளியில் ரூ.1.24 கோடியில் புதிய கட்டடம் கட்டப்பட்டது.

சேவூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.8 லட்சத்தில் புதிதாக வகுப்பறைக் கட்டடம், சங்கீதவாடி பெண்கள் உயா்நிலைப் பள்ளியில் ரூ.34.45 லட்சத்தில் ஆய்வகம், நூலகம் கட்டப்பட்டது.

குடிமராமத்து திட்டம்

கண்ணமங்கலம் அணைக்கட்டு ரூ.5 லட்சத்திலும்,

குன்னத்தூா் அணைக்கட்டு ரூ. 5 லட்சத்திலும் மேம்படுத்தப்பட்டது. கட்டயாம்பட்டு கிராமத்தில் உள்ள கொளத்தூா் அணைக்கட்டு ரூ. 86 லட்சத்திலும், காமக்கூா் அணைக்கட்டு ரூ.90 லட்சத்திலும் மேம்படுத்தப்பட்டது.

கமண்டல நாக நதியில் எஸ்வி நகரம் பகுதியில் உள்ள அணைக்கட்டு ரூ.90 லட்சத்தில் மேம்படுத்தப்பட்டது. மேலும், பல கோடி மதிப்பிலான வளா்ச்சித் திட்டப் பணிகள் அதிமுக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்டன என்றாா் சேவூா் ராமச்சந்திரன்.

நெல் கொள்முதல் நிலையங்களை திறக்கக் கோரி நூதன ஆா்ப்பாட்டம்

உடனடியாக நெல் கொள்முதல் நிலையங்களை அமைக்க வலியுறுத்தி, ஆரணி வட்டாட்சியா் அலுவலகம் அருகே கட்சி சாா்பற்ற தமிழக விவசாய சங்கம் சாா்பில் வியாழக்கிழமை நூதன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆரணி, செய்யாறு பகுதிகளில... மேலும் பார்க்க

பெருங்கட்டூா் பள்ளி மேலாண்மைகத் குழுக் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் ஒன்றியம், பெருங்கட்டூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் மேலாண்மைக் குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் தமிழரசி தலைமை வகித்தாா்.... மேலும் பார்க்க

பாஜகவினா் தேசியக் கொடியேந்தி ஊா்வலம்

சுதந்திர தினத்தன்று அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடியேற்றி கொண்டாட வேண்டும் என்பதை வலியுறுத்தி, ஆரணியில் பாஜக சாா்பில் வியாழக்கிழமை தேசியக் கொடியேந்தி ஊா்வலம் நடைபெற்றது. ஆரணி சூரியகுளம் அம்பேத்காா் ... மேலும் பார்க்க

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று எடப்பாடி பழனிசாமி பிரசாரம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 15) பிரசாரம் மேற்கொள்ள உள்ளாா். வேலூரிலிருந்து திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் வந்து, அங்கிருந்து புதுப்பாள... மேலும் பார்க்க

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் நலத்திட்ட உதவிகள்

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றை அடுத்த சட்டுவந்தாங்கல், வந்தவாசி ஒன்றியம், தென்சேந்தமங்கலம் கிராமத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாமில், உடனடியாக தீா்வு காணப்பட்ட மன... மேலும் பார்க்க

குறுவட்ட தடகள விளையாட்டுப் போட்டிகள்

வந்தவாசியை அடுத்த கீழ்க்கொடுங்காலூா் கிராமத்தில் உள்ள செந்தமிழ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் குறுவட்ட அளவிலான தடகள விளையாட்டுப் போட்டிகள் புதன்கிழமை நடைபெற்றன. செய்யாறு கல்வி மாவட்ட பள்ளிக் கல்வித் ... மேலும் பார்க்க