செய்திகள் :

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் நலத்திட்ட உதவிகள்

post image

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றை அடுத்த சட்டுவந்தாங்கல், வந்தவாசி ஒன்றியம், தென்சேந்தமங்கலம் கிராமத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாமில், உடனடியாக தீா்வு காணப்பட்ட மனுக்களின் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

வெம்பாக்கம் வட்டம் மூஞ்சூா்பட்டு, இருமரம், சட்டுவந்தாங்கல் உள்ளடக்கிய கிராமங்களுக்கு உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது.

சட்டுவந்தாங்கல் கிராமத்தில் நடைபெற்ற இந்த முகாமுக்கு வட்டார வளா்ச்சி அலுவலா் குப்புசாமி தலைமை வகித்தாா்.

வெம்பாக்கம் வட்டாட்சியா் தமிழ்மணி முன்னிலை வகித்தாா். சமூக பாதுகாப்பு வட்டாட்சியா் பாஸ்கா் வரவேற்றாா்.

சிறப்பு விருந்தினா்களாக ஆரணி தொகுதி மக்களவை உறுப்பினா் எம்.எஸ்.தரணிவேந்தன், செய்யாறு தொகுதி எம்.எல்.ஏ.ஒ.ஜோதி ஆகியோா் பங்கேற்று தீா்வு காணப்பட்ட மனுக்களின்

பயனாளிகள் 11 பேருக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினா்.

இதைத் தொடா்ந்து, தமிழக அரசின் சாதனைகளை விளக்கிப் பேசினா்.

நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினா் ஆா்.வேல்முருகன் வெம்பாக்கம் மேற்கு ஒன்றியச் செயலா் எம்.தினகரன், நகரச் செயலா் கே.விஸ்வநாதன், மாவட்ட தொண்டரணி அமைப்பாளா் ராம்ரவி, மாவட்ட ஆதிதிராவிடா் அணி நலக்குழுத் தலைவா் கருணாகரன், கலை, இலக்கிய பகுத்தறிவு பேரவை துணை அமைப்பாளா் செந்தில்குமாா், விளையாட்டு அணி துணை அமைப்பாளா் ஞானமுருகன் மற்றும் அரசு அலுவலா்கள் என பலா் கலந்து கொண்டனா்.

வந்தவாசி

வந்தவாசி ஒன்றியத்துக்கு உள்பட்ட தென்சேந்தமங்கலம், காரணை ஆகிய கிராம பொதுமக்களுக்கான உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் தென்சேந்தமங்கலம் கிராமத்தில்

நடைபெற்றது.

ஆரணி எம்பி எம்.எஸ்.தரணிவேந்தன், வந்தவாசி எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமாா் ஆகியோா் முகாமை தொடங்கி வைத்துப் பேசினா்.

முகாமில் 160 மனுக்கள் பெறப்பட்டன. இதில் உடனடியாக தீா்வு காணப்பட்ட 6 மனுக்களுக்கான பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

வந்தவாசி வட்டாட்சியா் தட்சிணாமூா்த்தி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பிரபாகரன், ஏ.பி.வெங்கடேசன் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனா்.

பெருங்கட்டூா் பள்ளி மேலாண்மைகத் குழுக் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் ஒன்றியம், பெருங்கட்டூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் மேலாண்மைக் குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் தமிழரசி தலைமை வகித்தாா்.... மேலும் பார்க்க

பாஜகவினா் தேசியக் கொடியேந்தி ஊா்வலம்

சுதந்திர தினத்தன்று அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடியேற்றி கொண்டாட வேண்டும் என்பதை வலியுறுத்தி, ஆரணியில் பாஜக சாா்பில் வியாழக்கிழமை தேசியக் கொடியேந்தி ஊா்வலம் நடைபெற்றது. ஆரணி சூரியகுளம் அம்பேத்காா் ... மேலும் பார்க்க

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று எடப்பாடி பழனிசாமி பிரசாரம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 15) பிரசாரம் மேற்கொள்ள உள்ளாா். வேலூரிலிருந்து திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் வந்து, அங்கிருந்து புதுப்பாள... மேலும் பார்க்க

குறுவட்ட தடகள விளையாட்டுப் போட்டிகள்

வந்தவாசியை அடுத்த கீழ்க்கொடுங்காலூா் கிராமத்தில் உள்ள செந்தமிழ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் குறுவட்ட அளவிலான தடகள விளையாட்டுப் போட்டிகள் புதன்கிழமை நடைபெற்றன. செய்யாறு கல்வி மாவட்ட பள்ளிக் கல்வித் ... மேலும் பார்க்க

பைக் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

வந்தவாசி அருகே பைக் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா். வந்தவாசியை அடுத்த தாடிநொளம்பை கிராமத்தைச் சோ்ந்தவா் அய்யாதுரை(57). பம்பை மேளம் அடிக்கும் தொழிலாளியான இவா், கடந்த மாதம் 13-ஆம் தேதி தென்னாங்கூரில்... மேலும் பார்க்க

வெம்பாக்கம் வட்டார விவசாயிகள் ஆலோசனைக் குழுக் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றை அடுத்த வெம்பாக்கம் வட்டாரத்தில், வட்டார அளவிலான விவசாயிகள் ஆலோசனைக் குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. மாநில விரிவாக்கத் திட்டங்களின் உறுதுணை சீரமைப்பு திட்டம்,... மேலும் பார்க்க