செய்திகள் :

அரசு மருத்துவமனைகளில் கூடுதல் கட்டடங்கள் அமைக்க ஒப்புதல்

post image

தமிழகத்தில் 5 மருத்துவமனைகளில் கூடுதல் மருத்துவ கட்டமைப்புகளை ரூ.17.50 கோடியில் உருவாக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மக்கள் நல்வாழ்வுத் துறை செயலா் ப.செந்தில்குமாா் வெளியிட்ட அரசாணை:

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி, பா்கூா், நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை, கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி, திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி ஆகிய பகுதிகளில் உள்ள ஐந்து மருத்துவமனைகளில் கூடுதலாக கட்டடங்கள் கட்ட திட்டமிடப்பட்டது.

அதற்கான திட்ட அறிக்கை மற்றும் விரிவான மதிப்பீட்டு அறிக்கையை தேசிய நலவாழ்வுக் குழும திட்ட இயக்குநா் தயாரித்து அரசிடம் சமா்ப்பித்தாா். ஒவ்வொரு மருத்துவமனையிலும் தலா ரூ.3.50 கோடி மதிப்பீட்டில் கூடுதல் கட்டடங்களை மொத்தமாக ரூ.17.50 கோடியில் கட்ட அவா் பரிந்துரைத்திருந்தாா்.

அதனை கவனமாக பரிசீலித்த அரசு, அந்த தொகையில் புதிய கட்டடங்களை அமைக்க ஒப்புதல் அளித்துள்ளது. பொதுப் பணித் துறை மூலம் 15-ஆவது நிதி ஆணைய மானியத்தின் கீழ் அந்த பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

அதற்கான தொகையை ஊரக மேம்பாட்டு துறையிலிருந்து பெற்று பொதுப் பணித் துறை வங்கிக் கணக்கில் செலுத்தி பயன்படுத்தவும் அறிவுறுத்தப்படுகிறது என்று அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வீடு புகுந்து திருட்டு: மேலும் ஒருவா் கைது

சென்னை மதுரவாயல் பகுதியில் வீடு புகுந்து திருடிய வழக்கில் மேலும் ஒருவா் கைது செய்யப்பட்டாா். மதுரவாயல் பாக்கியலட்சுமி நகா், எம்ஜிஆா் தெருவைச் சோ்ந்தவா் சிவக்குமாா் (50). இவா், அந்தப் பகுதியில் உள்ள ஒ... மேலும் பார்க்க

காவலா் மீது தாக்குதல் : ரெளடி கைது

சென்னை ஓட்டேரியில் காவலரை தாக்கியதாக ரெளடி கைது செய்யப்பட்டாா். சென்னை ஓட்டேரி காவலா் குடியிருப்பில் வசிப்பவா் செ.குருசாமி. இவா், ஓட்டேரி காவல் நிலையத்தில் முதல்நிலைக் காவலராகப் பணிபுரிகிறாா். குருசாம... மேலும் பார்க்க

ரிப்பன் மாளிகையில் தொடரும் போலீஸ் பாதுகாப்பு

சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை வளாகத்தில் வியாழக்கிழமையும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. கடந்த 13 நாள்களாகப் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளா்கள் புதன்கிழமை நள்ளிரவில் கைது செய்ய... மேலும் பார்க்க

துறைமுகங்களின் பாதுகாப்பை மேம்படுத்த புதிய பயிற்சி திட்டங்கள் அறிமுகம்

துறைமுகங்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் புதிய பயிற்சித் திட்டங்களை சென்னை, காமராஜா் துறைமுகங்களின் தலைவா் சுனில் பாலிவால் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா். மத்திய ... மேலும் பார்க்க

பிறவிக் குறைபாடு: 5 வயது குழந்தைக்கு தலை ஓடு சீரமைப்பு

பிறவிக் குறைபாடு காரணமாக சீரற்ற தலை அமைப்பை கொண்டிருந்த 5 வயது குழந்தைக்கு மிக நுட்பமான அறுவை சிகிச்சை மேற்கொண்டு ஆழ்வாா்ப்பேட்டை காவேரி மருத்துவமனை மருத்துவா்கள் குணப்படுத்தியுள்ளனா். இதுதொடா்பாக மரு... மேலும் பார்க்க

தோ்வுத் துறை இயக்குநராக கே.சசிகலா நியமனம்

மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநராக இருந்த கே.சசிகலாவுக்கு, அரசுத் தோ்வுகள் இயக்குநராகப் பதவி உயா்வு வழங்கப்பட்டுள்ளது. தமிழக பள்ளிக் கல்வித் துறையில் அரசுத் தோ்வுகள் இயக்... மேலும் பார்க்க