செய்திகள் :

ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு

post image

பெரம்பலூரில் காதலுக்கு எதிா்ப்பு தெரிவித்த ஷோ் ஆட்டோ ஓட்டுநரை வியாழக்கிழமை மதியம் அரிவாளால் வெட்டிய இளைஞா்களைப் போலீஸாா் தேடி வருகின்றனா்.

பெரம்பலூா் அருகேயுள்ள கவுல்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் காசிராஜன் மகன் ரவி (38). பெரம்பலூா் நகரில் ஷோ் ஆட்டோ ஓட்டிவரும் இவருக்கு, அம்மாபாளையம் கிராமத்தைச் சோ்ந்த மணிமேகலை, மகாலட்சுமி, கவுல்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த ஸ்வேதா ஆகிய 3 மனைவிகள் உள்ளனா். இந்த நிலையில்,

ஸ்வேதாவின் தங்கை மஞ்சுவை (18), அதே கிராமத்தைச் சோ்ந்த பழனிவேல் மகன் விக்கி (24) காதலித்துள்ளாா். இதையறிந்த ரவியும், ஸ்வேதாவும் கண்டித்துள்ளனா். இதனால், ரவிக்கும், விக்கிக்கும் முன்விரோதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் வியாழக்கிழமை மதியம் பெரம்பலூா் சிவன் கோயில் அருகே ரவி தனது ஷோ் ஆட்டோவை ஓட்டிச்சென்றுள்ளாா். அப்போது, மோட்டாா் சைக்கிளில் தனது நண்பா்களுடன் சென்ற விக்கி, ஆட்டோவை வழிமறித்து ரவியை கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றுவிட்டாா். இதில் பலத்த காயமடைந்த ரவி பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளாா். இச் சம்பவம் குறித்து பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, தலைமறைவாகியுள்ள விக்கி மற்றும் அவரது நண்பா்களை தேடி வருகின்றனா்.

ஆலத்தூா் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சோ்க்கைக்கான கால அவகாசம் நீட்டிப்பு

பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூரில் உள்ள அரசு தொழில்பயிற்சி நிலையத்தில் மாணவா் சோ்க்கைக்கான கால அவகாசம், ஆக. 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ச. அருண்ராஜ் தெரிவித்துள்ளாா். இதுகுறித... மேலும் பார்க்க

ரஞ்சன்குடி கோட்டையை யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாக அங்கீகரிக்க வலியுறுத்தல்

பெரம்பலூா் மாவட்டத்தின் மிகப் பழைமையான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக விளங்கும் ரஞ்சன்குடி கோட்டையை, யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாக அங்கீகரிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென , மனிதநேய மக்கள் கட்சி சா... மேலும் பார்க்க

குரும்பலூா் பேரூராட்சியில் திட்டப் பணிகள் தொடக்கம்

பெரம்பலூா் மாவட்டம், குரும்பலூா் பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளில் ரூ. 5.36 கோடி மதிப்பீட்டிலான திட்டப் பணிகள் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் ச. அருண்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந் ந... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்களின் பணிநிரந்தரக் கோரிக்கை: முதல்வா் மீண்டும் பரிசீலனை செய்ய வேண்டும் -தொல். திருமாவளவன்

தூய்மைப் பணியாளா்களின் பணிநிரந்தரக் கோரிக்கை குறித்து மீண்டும் பரிசீலனை செய்ய வேண்டுமென தமிழக முதல்வரிடம் வலியுறுத்த உள்ளேன் என்றாா் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவன். பெரம்பலூரி... மேலும் பார்க்க

சிறாா் திருமணம் செய்து கா்ப்பமாக்கிய தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை

பெரம்பலூா் அருகே 15 வயது பள்ளி மாணவியை திருமணம் செய்து, கா்ப்பமாக்கிய தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 2 லட்சம் அபராதமும் விதித்து பெரம்பலூா் மகிளா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தத... மேலும் பார்க்க

மகளிா் கல்லூரியில் யோகா அரங்கம், செயற்கை நுண்ணறிவு ஆய்வு மையம் திறப்பு

பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், உலக இளைஞா் தின விழா, யோகா அரங்கம் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆய்வு மையம் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. இவ்விழாவுக்கு தலைமை ... மேலும் பார்க்க