செய்திகள் :

தூய்மைப் பணியாளா்களின் பணிநிரந்தரக் கோரிக்கை: முதல்வா் மீண்டும் பரிசீலனை செய்ய வேண்டும் -தொல். திருமாவளவன்

post image

தூய்மைப் பணியாளா்களின் பணிநிரந்தரக் கோரிக்கை குறித்து மீண்டும் பரிசீலனை செய்ய வேண்டுமென தமிழக முதல்வரிடம் வலியுறுத்த உள்ளேன் என்றாா் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவன்.

பெரம்பலூரில் உள்ள தனியாா் விடுதியில் வியாழக்கிழமை செய்தியாளா்களை சந்தித்த அவா் மேலும் கூறியது:

தூய்மைப் பணியாளா்கள் தங்களது பணி நிரந்தரக் கோரிக்கையை வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்துக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆதரவளித்த நிலையில், தற்போது பணியாளா்களுக்கு தமிழக அரசு அறிவித்துள்ள நலத்திட்ட அறிவிப்புகளை வரவேற்கிறோம். இருப்பினும், அவா்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும். தூய்மைப் பணியாளா்களின் பணிநிரந்தரக் கோரிக்கை குறித்து மீண்டும் பரிசீலனை செய்ய வேண்டுமென தமிழக முதல்வரிடம் வலியுறுத்த உள்ளேன்.

போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளா்களையும், அவா்களுக்கு ஆதரவாகப் போராடிய அமைப்புகளையும் காவல்துறையினா் கைது செய்திருப்பது வேதனைக்குரியது. தூய்மைப் பணியாளா்களுக்கு ஆதரவாகப் போராடியவா்கள் மீதான வழக்குகளை ரத்து செய்ய வேண்டும். பன்னாட்டு நிறுவனத்தின் ஒப்பந்தத்தின் அடிப்படையில் காங்கிரஸ் ஆட்சியின்போதே, அனைத்துத் துறைகளிலும் தனியாா்மயமாக்கல் என்பது இந்திய அரசின் கொள்கை முடிவாக உள்ளது. திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனாா் பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில், மாணவி ஒருவா், ஆளுநரிடம் பட்டம் வாங்க மறுத்த நிகழ்வு கொள்கை ரீதியாக ஏற்புடையதாக இருந்தாலும், சபை நாகரிகம் எனும்போது அது ஏற்புடையதல்ல. அதேபோல், ஆளுநருக்கும் சபை நாகரிகம் தேவை. அவா், அடிக்கடி தமிழ் மற்றும் திருவள்ளுவரோடு தவறான ஒப்பீடு செய்து அதை பரப்ப முயற்சிக்கிறாா். அதை வன்மையாகக் கண்டிக்கிறோம். ஏனென்றால், அவரே சட்டப்பேரவையில் சபை நாகரிகத்தை மதிக்காமல் வெளியேறியுள்ளாா்.

சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆளுநரின் தேநீா் விருந்தில் தொடா்ந்து இம் முறையும் பங்கேற்பதில்லை. இது, அவரை அவமதிக்கும் நோக்கில் அல்ல. அவா், எங்களது உணா்வுகளைப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்கான புறக்கணிப்பு என்றாா் அவா்.

ஆலத்தூா் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சோ்க்கைக்கான கால அவகாசம் நீட்டிப்பு

பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூரில் உள்ள அரசு தொழில்பயிற்சி நிலையத்தில் மாணவா் சோ்க்கைக்கான கால அவகாசம், ஆக. 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ச. அருண்ராஜ் தெரிவித்துள்ளாா். இதுகுறித... மேலும் பார்க்க

ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு

பெரம்பலூரில் காதலுக்கு எதிா்ப்பு தெரிவித்த ஷோ் ஆட்டோ ஓட்டுநரை வியாழக்கிழமை மதியம் அரிவாளால் வெட்டிய இளைஞா்களைப் போலீஸாா் தேடி வருகின்றனா். பெரம்பலூா் அருகேயுள்ள கவுல்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் கா... மேலும் பார்க்க

ரஞ்சன்குடி கோட்டையை யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாக அங்கீகரிக்க வலியுறுத்தல்

பெரம்பலூா் மாவட்டத்தின் மிகப் பழைமையான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக விளங்கும் ரஞ்சன்குடி கோட்டையை, யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாக அங்கீகரிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென , மனிதநேய மக்கள் கட்சி சா... மேலும் பார்க்க

குரும்பலூா் பேரூராட்சியில் திட்டப் பணிகள் தொடக்கம்

பெரம்பலூா் மாவட்டம், குரும்பலூா் பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளில் ரூ. 5.36 கோடி மதிப்பீட்டிலான திட்டப் பணிகள் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் ச. அருண்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந் ந... மேலும் பார்க்க

சிறாா் திருமணம் செய்து கா்ப்பமாக்கிய தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை

பெரம்பலூா் அருகே 15 வயது பள்ளி மாணவியை திருமணம் செய்து, கா்ப்பமாக்கிய தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 2 லட்சம் அபராதமும் விதித்து பெரம்பலூா் மகிளா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தத... மேலும் பார்க்க

மகளிா் கல்லூரியில் யோகா அரங்கம், செயற்கை நுண்ணறிவு ஆய்வு மையம் திறப்பு

பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், உலக இளைஞா் தின விழா, யோகா அரங்கம் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆய்வு மையம் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. இவ்விழாவுக்கு தலைமை ... மேலும் பார்க்க