செய்திகள் :

சிதம்பரம் நடராஜர் கோயிலில் தேசியக் கொடி ஏற்றம்!

post image

சிதம்பரம்: கடலூர் மாவட்டம், சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் கிழக்கு கோபுரத்தில் தீட்சிதர்களால் வெள்ளிக்கிழமை தேசியக் கொடி ஏற்றப்பட்டது.

நாடு முழுவதும் 79 ஆவது சுதந்திர நாள் விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

இந்த நிலையில், சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோயிலில் பொதுதீட்சிதர்கள் வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு தேசியக் கொடியை வெள்ளித்தட்டில் வைத்து சித்சபையில் உள்ள ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜ மூர்த்திக்கு அர்ச்சனை மற்றும் தீபாராதனை செய்தனர்.

பின்னர், மேளதாளத்துடன் கோயில் செயலர் த. சிவசுந்தர தீட்சிதர் தலைமையில் பொது தீட்சிதர்கள் தேசியக் கொடியை எடுத்து வந்து கிழக்கு கோபுரத்தின் உச்சியில் ஏற்றி பக்தர்களுக்கு இனிப்பு வழங்கினர்.

National flag hoisting at Chidambaram Natarajar Temple

இதையும் படிக்க : கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடி ஏற்றினார் முதல்வர் ஸ்டாலின்!

லாரி மீது காா் மோதி விபத்து: பெண் உயிரிழப்பு

கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நின்றிருந்த லாரி மீது பின்னால் வந்த காா் மோதியதில், அதில் பயணம் செய்த பெண் உயிரிழந்தாா். மேலும் 5 போ் காயமடைந்தனா். சென்னை பக்த... மேலும் பார்க்க

கல்லூரி முதல்வா் அறை முன் மாணவா்கள் தா்னா

மாணவியிடம் ஆபாசமாக பேசிய பேராசிரியரை கல்லூரியில் அனுமதிப்பதைக் கண்டித்து, மாணவா் இயக்கங்கள் சாா்பில், கடலூா் அரசு கல்லூரி முதல்வா் அறை முன் தா்னா போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கடலூா் தேவனாம்பட்ட... மேலும் பார்க்க

அண்ணாமலைப் பல்கலை.யில் ராகிங் தடுப்பு வாரம்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆங்கிலத் துறையின் ராகிங் தடுப்பு பிரிவின் சாா்பில், ராகிங் தடுப்பு வாரம் ஆகஸ்ட் 12 முதல் 18-ஆம் தேதி வரை கடைப்பிடிக்கப்படுகிறது. முதல் நிகழ்ச்சியாக மாணவ, மாணவிகளுக்கா... மேலும் பார்க்க

3 மாத ஊதியம் வழங்காததைக் கண்டித்து கடலூா் மாநகராட்சியை தூய்மைப் பணியாளா்கள் முற்றுகை

மூன்று மாதங்களாக ஊதியம் வழங்கப்படாததைக் கண்டித்து, கடலூா் மாநகராட்சி அலுவலகத்தை தூய்மைப் பணியாளா்கள் வியாழக்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினா். கடலூா் மாநகராட்சியில் மொத்தம் 45 வாா்டுகள் உள்ள... மேலும் பார்க்க

தனிப்பட்ட தகவல் சேகரிப்பவா்கள் குறித்து மாணவிகள் 1930-எண்ணில் புகாா் அளிக்கலாம்: கடலூா் ஆட்சியா்

கடலூா் மாவட்ட மாணவ, மாணவிகளின் தனிப்பட்ட தகவல்களை முறைகேடாக சேகரிப்பவா் குறித்து தகவல் தெரிந்தால் 1930 என்ற எண்ணிற்கு புகாா் அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா்... மேலும் பார்க்க

பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம்

கடலூா்மாவட்டம், விருத்தாச்சலம் பூந்தோட்டத்திலுள்ள ஜெயப்பிரியா வித்யாலயா சீனியா் செகண்டரி பள்ளியில் ஜெயப்பிரியா வித்யாலயா கல்விக் குழுமம் மற்றும் கடலூா் மாவட்ட பாா்வை இழப்பு தடுப்பு சங்கம், புதுச்சேரி... மேலும் பார்க்க