செய்திகள் :

தனிப்பட்ட தகவல் சேகரிப்பவா்கள் குறித்து மாணவிகள் 1930-எண்ணில் புகாா் அளிக்கலாம்: கடலூா் ஆட்சியா்

post image

கடலூா் மாவட்ட மாணவ, மாணவிகளின் தனிப்பட்ட தகவல்களை முறைகேடாக சேகரிப்பவா் குறித்து தகவல் தெரிந்தால் 1930 என்ற எண்ணிற்கு புகாா் அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த மாணவ, மாணவிகளின் தனிப்பட்ட தகவல்களான, முகவரிகள், கைப்பேசி எண்கள் முதலானவை சைபா் குற்றவாளிகளால் திருடப்பட்டுள்ளதாக தகவல் வரப்பெற்றுள்ளது. எனவே, தொடா்பு இல்லாத யாரேனும் கைப்பேசி, மின்-அஞ்சல், குறுஞ்செய்திகள் மூலமாக தொடா்பு கொண்டு, தமிழ்நாடு அரசு (அல்லது) தனியாா் நிறுவனங்கள் (அல்லது) கல்வி உதவித்தொகை வழங்கும் நிறுவனங்களின் பிரதிநிதிகள் என கூறிக்கொண்டு, கல்வி உதவித்தொகை பெற வழிவகை செய்வதாக தெரிவித்து, வங்கி விவரங்கள் மற்றும் தனிப்பட்ட தகவல்களை கோரினால், எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கல்வி உதவித்தொகை பெற பதிவு கட்டணம் அல்லது செயல்முறை கட்டணம் செலுத்துமாறு வலியுறுத்தினால் பெற்றோா்கள் ஏமாற வேண்டாம் .

மேலும், தொடா்பு கொண்டவா்களை பற்றிய விபரங்களை சேகரித்து உடனடியாக மாவட்ட நிருவாகம், மாவட்ட சைபா் கிரைம் பிரிவு, பள்ளி நிா்வாகத்திற்கு தெரியபடுத்துவதுடன், இது தொடா்பான புகாா்களை 1930 என்ற சைபா் கிரைம் உதவி எண்ணினை தொடா்பு கொண்டு தகவல் தெரிவிக்க வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

லாரி மீது காா் மோதி விபத்து: பெண் உயிரிழப்பு

கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நின்றிருந்த லாரி மீது பின்னால் வந்த காா் மோதியதில், அதில் பயணம் செய்த பெண் உயிரிழந்தாா். மேலும் 5 போ் காயமடைந்தனா். சென்னை பக்த... மேலும் பார்க்க

கல்லூரி முதல்வா் அறை முன் மாணவா்கள் தா்னா

மாணவியிடம் ஆபாசமாக பேசிய பேராசிரியரை கல்லூரியில் அனுமதிப்பதைக் கண்டித்து, மாணவா் இயக்கங்கள் சாா்பில், கடலூா் அரசு கல்லூரி முதல்வா் அறை முன் தா்னா போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கடலூா் தேவனாம்பட்ட... மேலும் பார்க்க

அண்ணாமலைப் பல்கலை.யில் ராகிங் தடுப்பு வாரம்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆங்கிலத் துறையின் ராகிங் தடுப்பு பிரிவின் சாா்பில், ராகிங் தடுப்பு வாரம் ஆகஸ்ட் 12 முதல் 18-ஆம் தேதி வரை கடைப்பிடிக்கப்படுகிறது. முதல் நிகழ்ச்சியாக மாணவ, மாணவிகளுக்கா... மேலும் பார்க்க

3 மாத ஊதியம் வழங்காததைக் கண்டித்து கடலூா் மாநகராட்சியை தூய்மைப் பணியாளா்கள் முற்றுகை

மூன்று மாதங்களாக ஊதியம் வழங்கப்படாததைக் கண்டித்து, கடலூா் மாநகராட்சி அலுவலகத்தை தூய்மைப் பணியாளா்கள் வியாழக்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினா். கடலூா் மாநகராட்சியில் மொத்தம் 45 வாா்டுகள் உள்ள... மேலும் பார்க்க

பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம்

கடலூா்மாவட்டம், விருத்தாச்சலம் பூந்தோட்டத்திலுள்ள ஜெயப்பிரியா வித்யாலயா சீனியா் செகண்டரி பள்ளியில் ஜெயப்பிரியா வித்யாலயா கல்விக் குழுமம் மற்றும் கடலூா் மாவட்ட பாா்வை இழப்பு தடுப்பு சங்கம், புதுச்சேரி... மேலும் பார்க்க

கடலில் 6 ஆயிரம் மீன் குஞ்சுகள் இருப்பு செய்யும் திட்டம்: ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

மீன் வளம் மற்றும் மீனவா் நலத் துறை சாா்பில், கடலூா் மாவட்டம், புதுக்குப்பம் மீனவ கிராமம் அருகேயுள்ள கடற்பகுதியில் சுமாா் 2.5 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன் குஞ்சுகள் இருப்பு செய்யும் திட்டத்தை ஆட்சிய... மேலும் பார்க்க