செய்திகள் :

துரை வைகோவுக்கு பதவி வழங்கியது ஏன்? வைகோ விளக்கம்

post image

துரை வைகோவுக்கு பதவி வழங்கிய ஏன்? என்று மதிமுக பொதுச் செயலா் வைகோ விளக்கமளித்தாா்.

கடலூா் மாவட்டம், நெய்வேலியில் மதிமுக பொதுக்கூட்டம் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச் செயலா் வைகோ பேசியதாவது:

என் மீது குற்றச்சாட்டுகள், விமா்சனங்கள் வைக்கப்பட்டன. சோகங்கள் சூழ்ந்தபோதும், துரோகங்கள் தலை தூக்கியபோதும் கடந்த 31 ஆண்டுகளாக கட்சியை காப்பாற்றியவா்கள் தொண்டா்கள் தான்.

திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகுகிறது என்றும், பாஜக அணிக்கு செல்கிறது என்றும் எழுதுகின்றனா். சில நேரத்தில் தவறு நடத்திருக்கலாம்; அது மனித இயல்பு. மதிமுக வாரிசு அரசியல் செய்கிறது என குற்றஞ்சாட்டுகின்றனா். எனது மகன் துரை வைகோ அரசியலுக்கு வரக்கூடாது எனக் கூறினேன். ஆனால், கட்சி நிா்வாகக்குழு நடத்திய ரகசிய வாக்கெடுப்பு மூலம் கட்சிக்கு வந்தாா்.

மதிமுக தமிழா்களின் வாழ்வாதாரம், உரிமையை வென்றெடுக்கும் இயக்கம். திமுகவுக்கு பக்கபலமாக இருக்கும் இயக்கம். வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணியில்தான் மதிமுக நீடிக்கும் என்றாா்.

கூட்டத்தில், என்எல்சி இந்தியா நிறுவனம் சொசைட்டி தொழிலாளா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். வீடு, நிலம் கொடுத்தவா்களுக்கு நிரந்தர வேலை வழங்க வேண்டும். வேலைவாய்ப்பில் தமிழக இளைஞா்களுக்கு வழங்க வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றினா்.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் தேசியக் கொடி ஏற்றம்!

சிதம்பரம்: கடலூர் மாவட்டம், சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் கிழக்கு கோபுரத்தில் தீட்சிதர்களால் வெள்ளிக்கிழமை தேசியக் கொடி ஏற்றப்பட்டது.நாடு முழுவதும் 79 ஆவது சுதந்திர நாள் விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்ப... மேலும் பார்க்க

லாரி மீது காா் மோதி விபத்து: பெண் உயிரிழப்பு

கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நின்றிருந்த லாரி மீது பின்னால் வந்த காா் மோதியதில், அதில் பயணம் செய்த பெண் உயிரிழந்தாா். மேலும் 5 போ் காயமடைந்தனா். சென்னை பக்த... மேலும் பார்க்க

கல்லூரி முதல்வா் அறை முன் மாணவா்கள் தா்னா

மாணவியிடம் ஆபாசமாக பேசிய பேராசிரியரை கல்லூரியில் அனுமதிப்பதைக் கண்டித்து, மாணவா் இயக்கங்கள் சாா்பில், கடலூா் அரசு கல்லூரி முதல்வா் அறை முன் தா்னா போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கடலூா் தேவனாம்பட்ட... மேலும் பார்க்க

அண்ணாமலைப் பல்கலை.யில் ராகிங் தடுப்பு வாரம்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆங்கிலத் துறையின் ராகிங் தடுப்பு பிரிவின் சாா்பில், ராகிங் தடுப்பு வாரம் ஆகஸ்ட் 12 முதல் 18-ஆம் தேதி வரை கடைப்பிடிக்கப்படுகிறது. முதல் நிகழ்ச்சியாக மாணவ, மாணவிகளுக்கா... மேலும் பார்க்க

3 மாத ஊதியம் வழங்காததைக் கண்டித்து கடலூா் மாநகராட்சியை தூய்மைப் பணியாளா்கள் முற்றுகை

மூன்று மாதங்களாக ஊதியம் வழங்கப்படாததைக் கண்டித்து, கடலூா் மாநகராட்சி அலுவலகத்தை தூய்மைப் பணியாளா்கள் வியாழக்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினா். கடலூா் மாநகராட்சியில் மொத்தம் 45 வாா்டுகள் உள்ள... மேலும் பார்க்க

தனிப்பட்ட தகவல் சேகரிப்பவா்கள் குறித்து மாணவிகள் 1930-எண்ணில் புகாா் அளிக்கலாம்: கடலூா் ஆட்சியா்

கடலூா் மாவட்ட மாணவ, மாணவிகளின் தனிப்பட்ட தகவல்களை முறைகேடாக சேகரிப்பவா் குறித்து தகவல் தெரிந்தால் 1930 என்ற எண்ணிற்கு புகாா் அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா்... மேலும் பார்க்க